Saturday, November 29, 2014

Highway

படம் ஆரம்பித்ததும் நாமும் கார்,ஜீப்,டிப்பர்,பஸ்,குதிரை,நடை என்று மாறி மாறி பயணம் செய்ய ஆரம்பிக்கிறோம். டில்லி,ராஜஸ்தான்,ஹிமாச்சல் பிரதேஸ்,பஞ்சாப்,காஷ்மீர் என போகும் இந்த பயணம் கடைசி வரை இந்த  பயணம் முடியவே கூடாதுன்னு ஹீரோயின் மாதிரி எனக்கும் தோன்றியது. பயணங்கள் செய்துட்டே இருக்க பிடிப்பவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும்.

Stockholm Syndrome பாதிக்கப்பட்ட பெண்ணாக Alia Bhatt.


சின்ன வயதில் தன் சொந்த வீட்டில் ஒரு Uncle தன்னை abuse செய்ததை தன்னை கடத்தியவனிடம் தெருவோர கடையில் சாப்பிடும் போது அழுகையுனூடே சொல்லும் போது அலியா சூப்பர்.


போலீஸ் பக்கத்தில் விட்டு விட்டு ரன்பீர் மட்டும் ஜீப்பில் ஓடி விடவும் அவரை பின் தொடர்ந்து பஸ்-ஸ்டாண்ட் வந்து எந்த முடிவும் எடுக்கணும்னா அதை நானும் சேர்ந்து தான் எடுக்கணும்னு பொங்கி வரும் அழுகையை அடக்கி கொண்டு அலியா சொல்லுமிடமும், சிறிது நேரத்தில் ஹீரோ முதல்முறையாக (ஒரு முறை) சிரிப்பதும், தொடர்ந்த அலியாவின் அழுகையும் சூப்பர்.


ஹாஸ்பிட்டலில் அப்பாவை கெஞ்சும் போதும் Injection போடும் போதும் ஒரு மயக்க நிலையில் புலம்புவதும் அலியா சூப்பர்.

அந்த Uncle-இடம் சாக்லேட் கொண்டு வந்திருக்கியான்னு கேட்பதும், இங்க தர்ரீயா இல்லை பாத்ரூமான்னு கேட்டு அவன் ஷட்-அப் சொல்லும் போது பதிலுக்கு ஷட்-அப்புன்னு கத்தும் போது திரும்ப ஆன்னு வீடே அதிரும் படி கத்தும் போதும் அலியா சூப்பர்..

தான் வீட்டிற்கு திரும்ப போவதில்லை என்று சொல்லி விட்டு தனியே மலை பிரதேசத்திற்கு போகும் போது நடுவில் ஒரு இடத்தில் காரை நிறுத்தி ரோட்டோரமாய் அமர்ந்து வானத்தை பார்த்து ரன்பீர்ன்னு கத்தி அழுது
கொண்டே ஒரு ஃப்ளையிங் கிஸ் வானத்தை பார்த்து கொடுக்கும் போது அலியா சூப்பர்.நம் கண்களிலும் கண்ணீர்.

Randeep Hooda படத்தில் நிறைய வசனங்கள் இவருக்கு கிடையாது. ஒரே ஒரு முறை தான் சிரிப்பு.நிஜமான ட்ரைவர் மாதிரி ஒரு லுக்.இவரும் சூப்பர்.

ரஹ்மான் என்ன சொல்றது. Maahe Ve..பாட்டை சொல்றதா? Patakha Guddi --பாட்டை சொல்றதா??

டைரக்டர் Imtiaz Ali ... Jab we Met,Rock Star எடுத்தவர். Stockholm Syndrome மனநோயின் இயல்பை உணர்ந்து படம் எடுத்து இருக்கிறார்.

Hum Dil de Chuke Sanam, லகான், Jab Tak Hai Jaan, படங்களை எடுத்த கேமிராமேன் Anil Mehta.

இப்படி எல்லா சூப்பர்களும் சேர்ந்து இந்த படம் நம் மனதுக்கு நெருக்கமாகி விடுகிறது.

Intimate Zone -- கணவன், மனைவி,காதலன்,காதலி
Personal Zone --- பெற்றோர்,உடன்பிறப்புகள்,மற்ற குடும்ப அங்கத்தினர்
Social Zone --- நண்பர்கள்,உறவினர்கள்,உடன் பணிசெய்பவர்கள்.

இந்த மூன்று இடங்களிலும் யாரை எங்கே வைப்பது என்ற தெளிவே நம் மனமுதிர்ச்சியின் வெளிப்பாடு.போதிய மனப்பக்குவம் வளர்ப்பு முறையில் கிடைக்காமல் போகும் போதும் அல்லது குடும்ப உறுப்பினர்களே சிறிய வயதில் abuse செய்யும் போதும் வருவதே இந்த சிண்ட்ரோம். இந்த மனநோய் பற்றி நாம் தெரிந்து கொள்ள முடிகிறது இந்த படத்தில்.

பிப்ரவரி 2014-ல் ரிலீசான இந்த படத்தை நான் இப்போ தான் பார்த்தேன். நீங்களும் பார்த்துடுங்க.






Wednesday, November 19, 2014

இனிமே பிரியாணி செய்வீங்க??

எங்க வீட்டுக்காரருக்கு இந்த கேள்வி!!!

பிரியாணி ஹோட்டல் 50 ஆண்டுகளுக்கும் மேலாக திண்டுக்கல்லில் வைத்திருந்த குடும்பம். அதனால் எங்காச்சும் சொந்தக்காரங்க,ஃப்ரெண்ட்ஸ் வீட்டிற்கு போனா கட்டாயம் பிரியாணி செய்ய சொல்வாங்க.மாட்டேன் என்று தட்ட முடியாது. ஆனா ஒவ்வொரு முறையும் பிரியாணி டேஸ்ட் ஒவ்வொரு விதத்தில் வரும். எங்க வீட்டில் எப்ப செய்தாலும் ஒரே மாதிரி வரும். ஆனா மற்ற வீடுகளில் டேஸ்ட் மாறி இது என்னடான்னு கஷ்டமா போயிடும்.

காரணம்:

ஒரு வீட்டில் பிரியாணி செய்ய பொங்க பானை??? கொடுத்தாங்க.எங்க மேல என்ன கோவமோ.

ஒரு வீட்டில் ஈர விறகு கொடுத்தாங்க..நாங்க வர்றோம்னே நனைச்சு வச்சாங்க போல

ஒரு வீட்டில் மிகவும் பழைய அரிசி..ஒரு வீட்டில் பாசுமதி அரிசி..ஆயிரம் வாட்டி ஃபோனில் சொல்லி இருப்போம் சீரக சம்பாஆஆஆஆஆஆஆ.

ஒரு வீட்டில் இருந்த பட்டையில் கலரோ வாசமோ சுத்தமா இல்லை...வீட்டில் இருந்த மரத்தில் இருந்து எடுத்து இருப்பாங்க போல..

ஒரு வீட்டில் அடுப்பில் செய்ய வேண்டாம்னு தீர்மானிச்சு கேஸ் அடுப்பில் செய்தால் கொடுத்த குக்கருக்கு வயது 25..கேஸ்கட்டுக்கு வயதே கணிக்க முடியலை இதுல விசில் நாங்க தான் வாயிலேயே அடிச்சுக்கணும் போல..

கேஸ் பெரிய பர்னர் சின்ன பர்னர் லட்சணத்தில் எறியும்..அதுல எப்ப கறி வெந்து எப்ப தண்ணீ கொதிக்க..

 நெய்யில் செய்தால் தான் எங்க வீட்டு(!) டேஸ்ட் வரும் ஆனா,கொலஸ்ட்ரால்னு சொல்லி ரீஃபைண்ட் ஆயில் கொடுத்தாங்க..நல்ல வேளை தேங்காய் எண்ணெய் இல்லை போல..

மிகவும் புளித்த தயிர் இல்லன்னா தரதரன்னு ஓடும் பிரிஞ்ச மோர் ஒரு வீட்டில் ..அந்த வஸ்துவை பார்த்தால் அழுகையே வரும்.

சிக்கனம் என்கிற பெயரில் நாம் சொல்லும் அளவிற்கு மட்டன் அல்லது சிக்கன் தரமாட்டாங்க..வாங்கி இருப்பாங்க அதுல கொஞ்சம் சைட்-டிஷ்ன்னு ஒதுக்கிடுவாங்க!என்ன ஒரு வில்லத்தனம்..

இஞ்சிக்கு சுக்கு மாதிரி ஒரு வஸ்து..இஞ்சிக்கு தாத்தாவோ..

மிக்சியை போட்டா அது ஏழூறுக்கு அலறும்..இல்லாட்டா இஞ்சி அரைக்க ஜூஸர் தருவாங்க..அடிங்க்..

இப்படி நல்லா செய்ய தெரியும் பிரியாணியை ஒரு வழியாக வேர்த்து விறுவிறுத்து அமுதாவும் கிருஷ்ணாவும் செய்து முடிப்போம்.

இதுல எடுபிடி வேலை அமுதா. பிரியாணி செய்வது கிருஷ்ணா.நான் தனியா போனாக்கா ஒரு பைய நம்ம கிட்ட பிரியாணின்னு மூச்சு விடமாட்டாங்க!!!நான் தனியா செய்தாக்கா அது புளியோதரைன்னு யாரோ போட்டு கொடுத்து இருக்காங்க போல..அது..

இப்போதெல்லாம் சீரக சம்பா அரிசி,பட்டை, பட்டை பொடி எங்க வீட்டிலிருந்தே எடுத்து போயிடுவோம். அதே போல அங்கே போய் சங்கடம் பார்க்காம அவுங்க கூட சேர்ந்து ஷாப்பிங் செய்துடுறோம்.எனவே பிரியாணி அழகா வருது. அப்படியும் இந்த குக்கர்,அடுப்பு சமாச்சாரம் சில சமயம் காலை வாரி விடுவதுண்டு!!!

 புதுகைத் தென்றலின் டீ போட்ட கதை தான் இதை எழுத காரணம்.



Thursday, November 13, 2014

ஆண் - அழகு


ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாய் தெரிகிறான்?

அதிகாலை பனியில் நனைந்த படி கோலம்  போடும் பெண்ணிற்கு துணைக்கு நிற்கும் போது.(இப்போதெல்லாம் கோலம் போடுறாங்களா என்ன சரி சரி கோலம் போட்டா தான் செயின் அத்துட்டு போறாங்களே)

பட்டு வேட்டி சட்டையில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வலம் வரும் போது.(இப்பொழுதெல்லாம் பெல்ட் போட்டு தானே வேஷ்டி கட்றாங்க)

பெண்களை மதித்து நடக்கும் போது.(அதுங்க உங்களை மதிக்காதுங்க)

பெண்களின் வலியினை காது கொடுத்து கேட்கும் போது.(உங்க காதுல வலி வந்தா பொறுப்பு நானில்லை)

தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தந்தையாய் இருக்கும் போது.(அதுங்க ஏமாத்திட்டு போயிடுங்க)

பெண்கள் கூட்டத்தை கடக்கும் போது ஏதேனும் சொல்லி கிண்டல் செய்வார்களோ என்று பயந்து கொண்டே செல்லும் போது.(கூட்டமா இருந்தா ரொம்பதான் ரவுசு செய்யுங்க)

தன் வீட்டு பெண்களுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் சமைக்கும் போது.
(சமையல் மட்டும் செய்துடுறேன்.எப்ப உடம்பு சரியாகுதோ அப்போ பாத்திரம் தேய்த்துக்கோங்க)

பிடிக்குதோ பிடிக்கலையோ கோயிலுக்கு பெண்களுடன் செல்லும் போது.(துணைக்கா வர்றோம்.அங்காச்சும் கலர் கலரா பார்க்கலாமேன்னு)

கட்டாயம் பிறரின் பிறந்தநாள்,திருமண நாட்களை மறக்கும் போது.(எம்பிறந்த நாளே தெரியாது இதுல....)



இப்படி பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க சார்..மேடம்..

எதோ ஒரு பதிவில் பெண் அழகுன்னு இப்படி ஒரு லிஸ்ட் ரொம்ப நாள் முன்னாடி படிச்சது.




Monday, September 01, 2014

வீட்டிலே இந்தியா பாகிஸ்தான்..

என் அம்மாவின் அம்மா (எனக்குஅவ்வா) அவரின் 15 ஆவது வயதில் திருமணம் முடித்து என் தாத்தாவின் வீட்டில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் தனது 59 வயது வரை உழைத்து கொண்டே இருந்தார்.அவரை ஏனோ என் தாத்தாவின் தம்பி,தங்கை,அக்கா,அம்மா,அப்பா என யாருக்கும் பிடிக்காது.எப்பவும் வேலை செய்து கொண்டிருந்தாலும் ஏதாவது குறை சொல்லி கொண்டே இருப்பார்களாம். அதிலும் தாத்தாவின் தம்பி என் அவ்வா வரும் போதும் போகும் போதும் தொண்டையை செருமி செருமி எச்சில் துப்புற மாதிரி பாவ்லா செய்வாராம். எதையும் கண்டு கொள்ளாமல் என் அவ்வா வேலை செய்வது மட்டும் நிறுத்தாமல் கடமையாய் செய்து கொண்டிருப்பராம். என் தாத்தாவின் தம்பி அவரின் அக்கா மகளை கட்டி கொண்டார்.என் அவ்வாவின் தம்பி என் தாத்தாவின் தங்கையை மணமுடித்தார். அதன் பின் அவரும் என் அவ்வாவிற்கு எதிரி ஆகிவிட்டார்.

தாத்தாவின் அப்பா சொத்து எதுவும் வாங்க சென்றால் இவர்கள் கூட்டமாக தடுத்து விடுவார்களாம். பணம் கொத்து கொத்தாக இரும்பு பெட்டியில் எண்ணி எண்ணி வைத்து விடுவார்களாம். அதை இந்த கூட்டம் அவ்வப்போது திருடி கொண்டிருக்கும். என் தாத்தா தான் 10ஆவதுடன் நிறுத்தி விட்டதால் தன் தம்பி படிக்க வேண்டும் என்று மிக ஆசை பட்டு 10ஆவது ஃபெயில் ஆன தன் தம்பியினை டூடோரியல் சேர்த்து அதன் பின் தன் முயற்சியால் பி.டி மாஸ்டருக்கும் படிக்க வைத்து(என் தாத்தா ஃபுட்பால் ப்ளேயர்) தன் செல்வாக்கால் லோக்கல் பள்ளியில் வேலையும் வாங்கி வைத்து வீட்டோடு வைத்து கொண்டார். தனது 15ஆவது வயதில் இருந்து தன் தந்தையின் ஹோட்டலில் உழைக்க ஆரம்பித்தார். ஒரு பெரிய வீட்டை வாங்கிய என் தாத்தா அதை தன் அப்பாவின் பெயரில் வாங்கினார். ஒரு ஹோட்டல் தன் சொந்த பெயரில் வாங்கினார். தாத்தாவின் அப்பாவின்  மரணத்திற்கு பிறகு இருந்த வீட்டின் மாடியில் தாத்தாவின் தம்பி குடும்பம் தனி குடித்தனம் சென்று விட்டனர். ஒரு நாள் என் தாத்தா யாரிடமும் சொல்லாமல் தன் பெயரில் இருந்த ஹோட்டலை தன் தம்பியின் பெயருக்கு மாற்றி கொடுத்து விட்டார். பாவம் வாத்யார் தொழிலில் தன் தம்பி கஷ்டப்படுவதாய் நினைத்து அவர் பஞ்சம் பாடவும் இப்படி ஒரு காரியத்தினை செய்து விட்டார். அது சொந்த இடமாகும் அதன் பிறகு ஒரு இடத்தை வாடகைக்கு பிடித்து அதில் தான் சாகும் வரை என் தாத்தா ஹோட்டல் நடத்தி வந்தார்.

தாத்தாவின் தம்பியால் என் தாத்தாவும் அவ்வாவும் மிகவும் கஷ்டப்பட்டனர்.ஆனாலும் பாசத்தால் என் தாத்தா அவரின் தம்பியை எதுவும் சொன்னதில்லை. ஆனால் காலப்போக்கில் தன் தம்பியுடன்  பேச்சை நிறுத்தி கொண்டார்.தான் சாகும் வரை தன் தம்பியுடன் பேசினதில்லை.  ஆனால், நேருக்கு நேர் சண்டை எதுவும் போட்டதில்லை.

ஒரே வீட்டில் மாடியில் அவர்களும்,கீழே நாங்களும் 1960லிருந்து 2000 வரை 40 வருடங்கள் பேசாமல் குடியிருந்தோம். அவர்களுக்கு கீழே ஒரு ரூமும் அந்த ரூமிலிருந்து மாடிக்கு படி போகும்,கீழே கிச்சனும் உண்டு,எங்கள் வீட்டு ஹாலில் ஒரு பாதியை நடைபாதையாக்கி கிச்சனுக்கு போய் வருவார்கள். அவர்கள் குடும்பமும் எங்கள் குடும்பமும் ஒரு நாள் கூட பேசி கொண்டதில்லை. எங்கள் வீட்டு விஷேஷத்திற்கு அவர்களை அழைக்க மாட்டோம். அவர்களும் அப்படியே.அக்னிநட்சத்திரம் கார்த்திக்,பிரபு போல அவ்வப்போது  இரு வீட்டாரும் முறைத்து கொள்வார்கள்.என் தாத்தா பாட்டி இருவரும் இறந்து விட்டார்கள்.தன் சுய சம்பாத்யத்தில் என் தாத்தா அவரின் அப்பா பெயரில் வாங்கிய வீட்டை 2006-ல் விற்று  அவரின் தம்பி,தங்கைகளுக்கும் பங்கு கொடுத்தாச்சு.

தாத்தாவின் தம்பி குடும்பத்துடன் அதே ஊரில் இருக்கிறார். என் அவ்வா இறக்கும் வரை அவர்கள் அவ்வாவிற்கு செய்த கெடுதல்களை கண்ணீருடன் என்னிடமும் என் தங்கையிடமும் சொல்லி இருக்கிறார்கள். இப்பவும் என் அம்மா சொல்லிக் கொண்டே இருப்பார்கள். அதனால் இன்றும் கூட அந்த குடும்பத்தை எங்காவது பொது இடத்தில் பார்த்தால் எனக்கு அப்படி ஒரு கோவம் வரும். அப்படியே ஒதுங்கி விடுவேன். அவர்களுடன் நான் சாகும் வரை பேசாமல் இருப்பதே என் அவ்வாவிற்கு நான் செய்யும் நன்றியாக நினைத்து இருக்கிறேன். என் அவ்வா செய்த தப்பெல்லாம் என் தாத்தாவை திருமணம் செய்தது மட்டுமே.

Thursday, August 28, 2014

இனிமே யாருக்காச்சும் உதவி செய்வியா?

அடராமா இப்படியும் யாராச்சும் இருப்பாங்களான்னு ரெண்டு நாளா யோசிச்சு யோசிச்சு ஆமா இருக்காங்களேன்னு யோசிக்கறதை விட்டுட்டேன்.

ஃப்ரெண்ட் ஒருவரின் மனைவி அவ்வப்போது  ஃபோனில் பேசுவார். நேரில் ஒரு முறை கூட பார்த்ததில்லை. ஃப்ரெண்ட் தண்ணீ பார்ட்டி புரொஃப்சர். அதனால் கணவன் மனைவி சண்டை. மகன் படிப்பு கெடகூடாதுன்னு போன வருடம் தனியே வீடு எடுத்து இருக்கிறாள். மகன் இந்த வருடம்  +2 எழுதினான்.

 சென்னை சிட்டியில் இருக்கும் ஒரு காலேஜில் சீட் கிடைச்சு இருக்கு. நாளைக்கு சென்னை வர்றோம் உங்க அட்ரஸ் சொல்லுங்க நாங்க இரண்டு பேரும் வர்ரோம்னு சொன்னாங்க. சரின்னு அட்ரஸ் கொடுத்து வழியும் சொல்லி பஸ்-ஸ்டாண்டில் காத்திருந்து கூப்பிட்டு வந்தேன். அன்று தான் முதல் முதலாக தாயையும்,மகனையும் பார்க்கிறேன்.

மறுநாள் அந்த காலேஜுக்கு கொண்டு விட துணைக்கு வாங்கன்னு சொல்லவும் சரின்னு கூட போய் ஹாஸ்டலில் விட தேவையான சாமான்களை காலேஜ் பக்கத்தில் பர்சேஸ் செய்தோம். ஹாஸ்டலில் அந்த சாமான்களை வைக்கப்போகும் போது தான் மிக மோசமான நிலையில் ரூம்கள் இருந்ததை பார்த்தோம். ரொம்ப மோசமா இருந்துச்சு. புலம்பிட்டே ரூமில் வச்சுட்டு வெளியே வந்தோம்.

அந்த பையனுக்கு மதியம் ஒரு மணிநேரம் காலேஜ் இருக்குன்னு சொல்லவும் இரண்டு பேரையும் காலேஜில் விட்டுட்டு நான் வீட்டுக்கு வந்துட்டேன். அவள் மாலை கோயம்பேடு போய் ஊருக்கு போவதாய் சொல்லவும் சரின்னு சொல்லிட்டேன்.


நான் வீட்டிற்கு வந்த ஒரு மணிநேரத்தில் அவளிடமிருந்து ஃபோன் அக்கா பாத்ரூம் படு மோசமா இருக்கு,ரூம் எல்லாம் குண்டும் குழியுமா இருக்கு என் பையனை எப்படி விட்டுட்டு போறதுன்னே தெரியலை வெளியே தங்க எங்காச்சும் ரூம் இருந்தா உங்களுக்கு தெரிஞ்சா சொல்லுங்கன்னு அழுகுற மாதிரி சொல்லவும். நான் விசாரித்து சொல்கிறேன்னு சொல்லிட்டு என் கணவரிடம், மகனிடம் அவனுக்கு வேறு ரூம் கிடைக்கும் வரை ஒரு வாரமோ,பத்து நாட்களோ நம் வீட்டுல இருக்கட்டும்மான்னு கேட்டதும் ரெண்டு பேரும் ஓக்கே இதை ஏன் கேட்டுட்டு இருக்க, இருக்கட்டும் கொஞ்ச நாள் தானேன்னு சொல்லிட்டாங்க. நானும் அவளுக்கு ஃபோன் செய்து ஒரு ஆட்டோ வைத்து சாமான்களை எடுத்துட்டு இங்கே வந்துடு. ஒரு வாரம் இங்கே இருக்கட்டும். இங்கே இருந்து ட்ரையினில் காலேஜ் போய் வரட்டும்னு சொல்லவும் ஐயோ அக்கா நீங்க நிஜமாவே ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவுங்க உடனே வர்ரேன்னு சொல்லி  வந்துட்டாங்க. டெரசில் இருக்கும் புத்தம் புது தனி ரூம் அட்டாச் பாத்ரூம் கீயை கொடுத்தேன்.

காலை 6.45 க்கு வீட்டிலிருந்து தினம் காலேஜுக்கு போகணும் எனவே காலை, மாலை மட்டும் இங்கே சாப்பிடட்டும், மதியம் காலேஜ் கேண்டின்ல சாப்பிட சொல்லிக்கோன்னு சொல்லிட்டேன். அவளும் மிக சந்தோஷமாக ஒத்துக்கொண்டு சரிக்கா நான் அடுத்த 2 ஆம் தேதி சனிக்கிழமை வருகிறேன். அதற்குள்ளாக ரூமிற்கு சொல்லி வையுங்கள் இல்லாட்டா சின்னதா வீடு கிடைச்சாலும் ஓக்கேன்னு சொல்லிட்டு மறுநாள் காலையில் ஊருக்கு போய்விட்டாள்.

இரண்டு நாளில் அந்த பெண்ணிடமிருந்து ஃபோன்.என் மகன் ரொம்ப சந்தோஷமா இருக்கான்க்கா,நல்லா சாப்பாடு தர்றீங்கன்னு சொல்றான். அவன் ”தன்” ரூமை ஃபோட்டோ எடுத்து தன் மாமா,சித்திக்கு எல்லாம் அனுப்பி இருக்கான். சொர்க்கம் மாதிரி இருக்குன்னு சொல்றான். ரொம்ப நன்றிக்கான்னு சொன்னா.(என் தலை கொஞ்சம் வெயிட்டா தோணுச்சு) என் பையனை விட்டுட்டு நான் இருந்ததே இல்லை இது தான் முதல் தடவை. தூக்கமே வரலைன்னு புலம்பினா. என் தலையினை கொஞ்சம் தட்டிட்டே அதுனால என்ன எல்லாம் கொஞ்ச நாளுக்குதானேன்னு சொல்லிவச்சேன்.


என் பெரிய மகன் படிக்க யூஸ் செய்யும் ரூம் ஒரு பக்கம் முழுவதும்  ஃப்ரென்ஞ் விண்டோ வைத்து புளூ டைல்ஸ்,ப்ளூ ஃபேன்,ப்ளூ ஸ்க்ரீன்,ப்ளூ கப்போர்ட், கீழே பெட் போட்டு ப்ளூ பில்லோஸ்,ப்ளூ பெட்கவர்ன்னு ஒரு ரகமாய் இருக்கும். நோ டிவி,நோ ம்யூசிக் சிஸ்டம். இரவில் மாடிக்கு போய் என் மகன் அவனுடைய புக்ஸ் எல்லாம் அள்ளிட்டு வந்து கீழே ரூமில் வச்சுக்கிட்டான்.

நான் லூசான்னு யோசிச்ச மொமண்ட்:

2ஆம் தேதி வர்ரேன்னு வரலை,அப்புறம் 9-ல் வர்ரேன்னு வரலை.14 நைட் வர்ரேன்னு சொல்லிட்டு 14த் காலை ஃபோன் வந்துச்சு அக்கா அக்கா என் பையன் லீவுக்கு இங்கே வர்ரணும்னு ஆசைப்படுறான் அதனாலே அவன் இங்கே வரட்டும் 17 காலை அவனுடன் சேர்ந்து நான் அங்கே வர்ரேன்னு சொன்னா..நான் சரிப்பான்னு சொல்லிட்டேன்..


16த் நைட் ஃபோன் வந்துச்சு. எனக்கு இங்கே ஒரு முக்கியமான வேலையிருக்கு!!! என் மகனை இப்ப அனுப்பிட்டு 23 சனியன்று நான் அங்கே வர்ரேன்னேன்னு சொன்னா அதுக்கும் சரின்னு சொல்லிட்டேன்.(கோவப்படாதே அமுதான்னு சொல்லிகிட்டேன்) தனியே கணவருடன் வாழாமல் மகனும் இங்கே இருக்க, வீட்டிலிருக்கும் இவளுக்கு என்ன முக்கிய வேலைன்னு தெரியலை

17 காலை 3 மணிக்கு எனக்கு ஃபோன் அந்த பையனிடமிருந்து வீட்டிற்கு வெளியில் நிற்கிறேன். கதவை திறங்கன்னு.தூக்க கலக்கத்தில் எழுந்து சாவியை கொடுத்தேன்.எப்படிடா அந்த நேரத்துக்கு வந்தன்னு கேட்டா லிஃப்ட் கிடைச்சுதுன்னு சொன்னான். சரின்னு விட்டாச்சு.

கன்ஃபார்மா நான் லூசுன்னு தோணின மொமண்ட்:

நடுவில என் ஃப்ரெண்ட் அம்மா ( 75 வயது) என்கிட்ட பேசினாங்க.  இங்க பாரும்மா எம்மகனை கவனிக்காம இப்ப அவனை நான் தான் கவனிச்சுட்டு இருக்கேன். நீ எங்களுக்காக என் பேரனை வீட்டில் வச்சது சந்தோசம்னு உனக்கு ஏன்ம்மா கஷ்டம்னு சொல்லிட்டு அவளை பத்தி தன் மகனை பத்தி புலம்பினாங்க. இது தெரிஞ்சு கிட்டு அவ எனக்கு ஃபோன் செய்து அக்கா எங்க மாமியார் உங்க மனசை கலைப்பாங்க.எனக்கு மூணாவது மகன் மாதிரி இவன்,இவனை வச்சு இருப்பது எனக்கு ஒரு கஷ்டமும் இல்லைன்னு சொல்லிடுங்கக்கா..அப்பதான் அந்த பொம்பளை!!! வாயை மூடும்னு எனக்கு செம அட்வைஸ்.(என்ன பதில் சொல்றதுன்னு எனக்கு தோணலை..சுறுக்குன்னு கோபம் வந்துச்சு) 25 வருஷமா அந்தம்மாகிட்ட பேசிட்டு இருக்கேன். நீ தான் எனக்கு புதுசுன்னு மட்டும் சொல்லி வச்சேன்.

பொறுத்தது போதும்னு யோச்சிச்ச மொமண்ட்:

22 வெள்ளி நைட் அந்த பையனிடம் உங்கம்மா நாளைக்கு வர்ராங்களான்னு கேட்டா தெரிலன்னு சொல்றான்.உடனே ஜெர்க்காகி போனேன். நைட்டே நெட்டில் Sulekha.com..ல் என் நம்பரை போட்டு ரிஜிஸ்டர் செய்தாக்கா..இந்த ஏரியாவில் ரூம் இருக்குன்னு வரிசையா என் ஃபோனுக்கு SMS-ம்,ஃபோனும் வந்துட்டே இருந்துச்சு. அவன் காலேஜ் கிட்ட உள்ள ரூமில் இடமும் கிடைச்சது.  தொகையும் பெரிசா இல்லை. உடனே அவளுக்கு ஃபோன் செய்து இப்படி இங்கே நிறைய ரூம் இருக்கு உன் பையன் நாளைக்கு காலேஜ் போகும் போது ரெண்டு ரூம் பார்த்துட்டு வர்ரட்டும் நீ வந்து சண்டே ரூமில் விட்டுடுன்னு  சொன்னா...அக்காக்கா அவன் சின்ன பையன்(நைட் 3.30க்கு தனியா வருவானாம்) அவனை தனியே அனுப்பாதீங்க...அவனுக்கு ஒன்னுமே தெரியாது..ஹேய் இந்த ஹாஸ்ட்டல் காலேஜ் பக்கம்ப்பான்னு சொன்னா காதுலேயே வாங்கலை. சரிஅப்படின்னா நீ வா வந்து ரூம் தேடுன்னு சொல்லிட்டேன். (கோபமா சொல்லலை ஆனா கோபம் வந்துச்சு)

சனியன்று காலையில் அந்த பையனிடம் அட்ரஸ் கொடுத்து மாலை ரூம் பார்த்துட்டு வாடான்னு சொல்லிட்டேன்.ஆனா அவன் அந்த பக்கமே போகலை.இவளும் வரலை.


சனியன்று மாலை என் அருமை ஃப்ரெண்ட் மிஸ்டர். @#$ எனக்கு ஃபோன் செய்றார். என் மகன் எப்படி இருக்கான். அவன் சின்ன பையன்ப்பா அவனை ட்ரையின்ல அனுப்பாத,காலேஜ் பஸ் விசாரிச்சு அதுல அனுப்பு,ட்ரையின்ல தொங்கிட்டு போவான்!!!.எப்பூடி..காலேஜ் சேர்த்து 25 நாட்கள் கழிச்சு எப்படி  அனுப்பனும்னு ஃபோன்.

நான் ஒரு புரொஃபசர்ட்ட சொல்லி இருக்கேன். அவன் காலெஜுக்கு பக்கத்தில் டீசண்டா இடம் பார்த்து தர்றேன்னு சொல்லி இருக்கார். இன்னும் கொஞ்சநாள் உன் வீட்டுல இருக்கட்டும்னு சொன்னான்.

என்ன எம்மவன் வந்துட்டானா? இல்லை எனக்கு தெரியாது நான்  மார்க்கெட்டில் இருக்கேன்னு பொறுமையா பதில் சொல்றேன். அய்யோ அவன் வீட்டுக்கு வரும்போது யாரு அவனுக்கு சாவி தருவான்னு கேட்டான்.எங்கம்மா இருக்காங்க அவுங்க தருவாங்கன்னு சொன்னேன். (பொறுமை பொறுமை அமுதான்னு சொல்லிட்டேன்). சரி அந்த ப்ரொஃபசர் நம்பர் கொடு நான் பேசிட்டு நாளைக்கு உன் மகனை அனுப்புறேன்னு சொன்னேன். அய்யோ அவன் சின்ன பையன்ப்பா (டேய் அடங்க மாட்டீங்களா) அவன் எப்படி தனியே போவான். நான் வர்ரேன்.வந்து செட்டில் செய்துடுறேன்னு சொன்னான்.சார், காலேஜ் அட்மிஷனுக்கே வர்லை.

நான் அவனின் மனைவிக்கு ஃபோனை போட்டேன். நாளைக்கு எப்ப வர்ரப்பான்னு கேட்டேன். நான் நினைச்சது இவன் ஃபோன் செய்தது அவளுக்கு தெரியாதுன்னு. அக்கா நாளைக்கு நான் வர்லக்கா ஃப்ரொஃப்சர் ஃபோன் செய்வாங்க அப்ப தான் நான் வருவேன்னு கூலா சொன்னா...உன் கணவர் பேச்சை நான் நம்பமாட்டேன்.இத்தனை நாட்கள் இல்லாத அக்கறை நானே ரூம் பார்த்ததும் தான் அவனுக்கு வந்ததா. இல்லை நீ வா நேர்ல நான் சொல்ற ரூமை பாரு, அந்த ஃப்ரொஃபசரையும் பாரு.

அடுத்த மாதம் நான் நிறைய ஊருக்கு டிக்கெட் போட்டிருக்கேன்.என் அம்மா என் தம்பி வீட்டிற்கு போய்டுவாங்க.அப்புறமா என் சித்தி பெண்ணிற்கு நிச்சயம் வீட்டில் செய்ய போறோம். வீட்ல 20 பேருக்கு மேல் தங்குவாங்கன்னு சொன்னேன். இந்த விளக்கம் தேவையில்லாதது. ஆனாலும் சொன்னேன்.

ரத்தக்கண்ணீர் மொமண்ட்:

அக்கா நீங்க எங்க வேணா போங்கக்கா என் பையனுக்கு சாப்பாடு கூட வேண்டாம். ஆனா அவன் பாட்டுக்கு மாடியில் இருந்துக்கட்டும்னு சொன்னா???? ஓ நான் ஊருக்கு போக மேடமே பெர்மிஷன் கொடுத்துட்டாங்கன்னு என் மகனிடம் என்னடா இந்த பொண்ணு இப்படி சொல்லுதுன்னு புலம்பினேன்.

ஒரு மாசமா பொறுமையா அனைத்தையும் பார்த்துட்டு இருந்த என் மகன் அம்மா லூசாம்மா நீ இப்பவே திரும்ப ,ஃபோன் செய்யுங்க நாளைக்கே வர சொல்லுங்க..இல்லாட்டி நான் நாளைக்கு அந்த பையனை நீங்க பார்த்த ரூமில் கொண்டு விட்டுட்டு வந்துடுறேன்னு சொன்னான்.


கோபமே பட்டுட கூடாதுன்னு மனசுல நினைச்சுட்டே நீ நாளைக்கு வா, இங்கே வந்து ரூம் தேடாம எப்படி ரூம் கிடைக்கும்னு கேட்டேன். சரி நாளைக்கு வர்ரேன்னு சொன்னா.

மறுநாள் என் தங்கை வீட்டிற்கு நான் போற வேலை இருந்துச்சு நானும் என் கணவரும் அங்கே காலையிலேயே போயிட்டோம்.24th இவ 10 மணிக்கு வந்திருக்கா வந்தவ நேரா மாடிக்கு போய் மகனை பார்த்துட்டு லக்கேஜ் எல்லாம் பேக் செய்துட்டு கீழே வந்து நான் வந்து அரை மணிநேரம் ஆச்சு எனக்கு கால் டாக்ஸி நம்பர் கொடுங்கன்னு கேட்டு இருக்கா. அம்மா கொடுக்கவும் திரும்ப மாடிக்கு போனவ டாக்ஸி வந்ததும் அம்மாகிட்ட சொல்லாம கீழே போய் கார் ஏறி போயாச்சு.

கொழுப்பான மொமெண்ட்:

அம்மா சொல்றாங்க தினம் ஒரு ஜூஸ்,சத்துமாவு கஞ்சி, பால், நெய் ரோஸ்ட், முட்டை தோசை,நான் - வெஜ்ஜூ, நைட் சாதம்,குழம்பு,காய்ன்னு செய்து கொடுத்தேல்ல சின்னப்பையனுக்கு கொழுப்பு ஜாஸ்தியா போயிருக்கும் அதான் அவளுக்கு கோபமாய் இருக்கும்னு சொல்றாங்க. அனுபவப்பட்டவுங்க சொன்னா சரியாதானே இருக்கும்.


 என் வீட்டிலிருந்த 30 நாட்களும் அந்த பையன் என்னை எந்த முறை சொல்லியும் கூப்பிடவேயில்லை.நான் போறேன்,சாவி வேணும்,வர்ரேன்னு இப்படி மொட்டையா பேசுவான். கேட்ட கேள்விக்கு ஒரு வார்த்தை பதில் சொல்வான்.அவசர அவசரமா சாப்பிடுவான்,மேலேப்போறேன்னு ஓடிடுவான். கொஞ்ச நேரம் டீவியில்,பேப்பர்,புத்தகத்தில் உட்கார மாட்டான். என் மகன்களை வம்படியாக பேசினாலும் பேச விரும்பவே மாட்டான். ஆமா,இல்லைன்னு விட்டேத்தியா பதில் பேசுவான்.என்னம்மா இந்த பையன் இப்படி இருக்கான்னு அதிசயபடுங்க. மாடியில் துணி காயப்போகும் போது அவன் மனசு வச்சால் தான் கதவை திறப்பான். ஒவ்வொரு முறை சாப்பிடவும் நான் மிஸ்ட் கால் கொடுத்தாதான் வருவான். ஒவ்வொரு முறை வீட்டுக்கு வரும் போதும் நாயை வெளியில் விட்டுடுவான்.

ரூமை கூட்டுடான்னு சொன்னா ஒரு நாளும் செய்ததில்லை. நான் மூன்று நாட்களுக்கொருமுறை நம் வீடு தானே நாசமா போகும்னு டாய்லெட் முதற்கொண்டு சுத்தம் செய்துட்டு வருவேன். இருந்த நாட்கள் மொத்தமும் ஒரு நாளும் குப்பையை எடுத்து வந்து கீழே போடவில்லை. வாஷிங் மெஷினில் ட்ரஸ் துவைத்து கொடுத்தேன்.போன ஜென்மத்துக் கடன் பாக்கின்னு நினைத்துக் கொண்டேன்.

கொசுவர்த்தி:

சென்னை வந்த 24 வருடத்தில் இது மாதிரி எங்க வீட்டுக்கு ஃபாரின் போறேன்,எம்ப்ளாய்மெண்ட் ரிஜிஸ்ட்ரேஷன்,வேலைக்கு இண்டர்வியூ,அண்ணா யுனிவர்சிட்டி கவுன்சலிங்க்,மெடிக்கல் கவுன்சலிங்,ஒரு நாள் விஷேஷம் குளிச்சுட்டு காலை சாப்பட்டு போறவுங்க, சாப்பிடாம போறவுங்க, நைட்  ஸ்டேயிங்,அமெரிக்க விசா இண்டர்வியூக்கு இரண்டு நாளைக்கு வந்தவுங்கன்னு, எண்ட்ரன்ஸ் எக்சாம் எழுத வந்தவுங்க அப்படி இப்படின்னு யாராச்சும் இவரின் அண்ணா பசங்க, தம்பி பசங்க,அக்கா பசங்க..அவுங்க ஃப்ரெண்ட்ஸ்.ஃப்ரெண்ட்சுக்கு ஃப்ரெண்ட்ஸுன்னு வருவாங்க சில பேரெல்லாம் 3 மாதம் 6 மாதம் கூட தங்கி இருக்குதுங்க...இப்படி ஒரு அனுபவம் எனக்கு இல்லை. அடி ஆத்தி இது புதுசால இருக்கு.


இப்ப வரைக்கும் நான் வீட்டுக்கு வந்தேன். நீங்க இல்லை பையனை கூட்டிப்போனேன். ஒரு மாதம் வச்சுருந்தீங்க அதுக்கு நன்றி(எனக்கு ஓவர் நினைப்பு தான் எப்பவும்) அப்படி இப்படின்னு ஒரு ஃபோன் கிடையாது. அந்த ஃப்ரெண்ட் என்னோடு PG இரண்டே இரண்டு வருடங்கள் கூட படிச்சவர்.



Monday, August 25, 2014

அம்மாவும் ஃப்ளைட்டும்



2011-ல் அம்மா பிறந்தநாள் அன்னைக்கு அம்மாவை ஃப்ளைட்டில் காசி கூப்பிட்டு போலாம் என்று ஜெட்-ஏர்வேஸில் டிக்கெட் போட்டு இருந்தேன். அம்மாக்கு முதல் ஃப்ளைட் பிரயாணம். எனக்கு அம்மாவை ஃப்ளைட்டில் கூட்டிப்போற பெருமை.

என் அம்மா எங்காச்சும் ட்ரையினில் பஸ்ஸில் போனால் ஹோட்டலில் வாங்கி சாப்பிட விரும்பவே மாட்டாங்க.எங்களையும் விடமாட்டாங்க.

அவர்கள் வராமல் நாம் மட்டும் போனால் கூட கடலை வறுத்து போட்ட சூப்பரான  புளியோதரை(முதல் நாளே காய்ச்சி வச்சது) அல்லது எலுமிச்சை சாதம்,வடகத்துவையல்,உருளைக்கிழங்கு ரோஸ்ட்,கொஞ்சம் வத்தல் என்றும் என் பசங்க வந்தா சுருங்க சுருங்க வறுத்த மட்டன்...காலைக்கு வெண்பொங்கல் அல்லது + சிறுபருப்பு சாம்பார்(நெய் பாட்டிலில் ஊத்தி வச்சுடுவாங்க)+வறுத்த தேங்காயில் கெட்டி சட்னி அல்லது குட்டி குட்டியாய் தோசை+ நல்லெண்ணெயில் மிதக்கும் தக்காளி சட்னி என்று வகைத்தொகையாய் செய்து பேக்கிங் ஆரம்பிச்சுவாங்க.வேணாம்மான்னு சொன்னாலும் கம்முன்னு இரும்மான்னு சொல்லிட்டு சத்தமில்லாமல் செய்ய ஆரம்பிச்சுடுவாங்க.

சில சமயம் கோயம்புத்தூர் என் பசங்க கூட காலை 6.30 மணி ட்ரையினிற்கு தாம்பரத்திலிருந்து செண்ட்ரல் போகும் போது அம்மா சத்தமில்லாமல் செய்து வச்சிருந்த மட்டன் பிரியாணி எடுத்துட்டு போவோம். முத நாள் நைட்டே பிரியாணிக்கு தாளிச்சு கறியை வேக வச்சுடுவாங்க.அது நெய்யில் ஊறிட்டு இருக்கும். காலையில் நாங்க குளிச்சு கிளம்பும் போது அதில் தண்ணீர் ஊத்தி கொதிச்சதும் அரிசி போட்டு இரண்டு விசிலில் பிரியாணி ரெடி.

இப்படி பார்த்து பார்த்து செய்து தரும் அம்மாவை முதல் முறையாக ஃப்ளைட்டில் கூப்பிட்டு போகும் போது என் பசங்க இன்னைக்கு வேலை எதுவும் செய்யாமல் அவ்வாவை கூட்டி போங்கம்மான்னு ஆர்டர் போட்டுடாங்க...

அவ்வா 6.30 மணி ஃப்ளைட்..அதில் சாப்பாடு தருவாங்க..அது பிடிக்கலைன்னா கூட 9 மணிக்கு டில்லியில் நீங்க சாப்பிடலாம்னு ஐடியா கொடுத்து கட்டாயம் எதுவும் செய்ய கூடாதுன்னு சொல்லிடுச்சுங்க..என் அம்மாவும் மனசேயில்லாம சரின்னு சொல்லிட்டாங்க.சரின்னு காஃபி மட்டும் வீட்டில் குடிச்சுட்டு 10 நிமிஷத்தில் வீட்டுக்கு பக்கத்தில் இருக்கும் ஏர்ப்போர்ட்டிக்கு காலை 5க்கு போயாச்சு.பாவம் அம்மா அப்பவே பசியிருக்கும் போல ஆனா ஒன்னுமே சொல்லலை.காலையில் சீக்கிரம் எழுந்து குளிச்சதால் பசி கட்டாயம் வந்திருக்கும்.

6.30க்கு ப்ளைட் கிளம்பியாச்சு.ஏர் ஹோஸ்டஸ் அங்கேயும் இங்கேயும் போறாங்க வராங்க ஒன்னுமே சாப்பிட தரலை.கொஞ்ச நேரம் கழிச்சு ப்ரெட்.பன்,பட்டர்,ஜாம்,வித்தாங்க.எங்க அம்மாக்கு அது பிடிக்காது. அதனால் 9 மணிக்கு டில்லியில் சாப்பிட்டுக்கலாம்னு சொல்லிடாங்க.நானும் சரின்னு விட்டுட்டேன்.  ரெண்டு நாய் பிஸ்கெட்டும் ஒரு தண்ணீ டீயும் ஃப்ரீயா கொடுத்தாங்க.கடனேன்னு அதை வாங்கி வேறு வழியில்லாமல் சாப்பிட்டோம். 9 மணிக்கு டில்லியில் ஃப்ளைட் இறங்காமல் டில்லி மேலேயே சுத்து சுத்துன்னு சுத்திட்டே இருக்கு. செம பனி அதனால் இறங்க முடியாதுன்னு ஒரு மணிநேரம் சுத்திட்டு FUEL தீர்ந்துடும்னு சொல்லிட்டு ஃப்ளைட் ஜெய்ப்பூர் போயிடுச்சு.

ஜெய்பூர் போனதும் நம்ம ஃப்ளைட் வெயிட்டிங்கில் 14ஆவது ஃப்ளைட்.13 ஃப்ளைட் டில்லி போனதும் நம்ம ஃப்ளைட் கிளம்பும்னு சொல்லிடாங்க.சரி ஒரு மணிநேரத்தில் போயிடலாம்னு நாங்க நினைச்சோம். எங்களுக்கு 11 மணிக்கு கனெக்டிங் ஃப்ளைட் காசிக்கு டில்லியிலிருந்து புறப்படும். ஒரே கம்பெனி ஃப்ளைட் அதனால் நமக்கு வெயிட் செய்வான்னு நம்பிக்கை. மெல்ல பசியெடுக்க ஆரம்பிச்சது. ஃப்ளைட்டில் எல்லோரும் கத்த ஆரம்பிச்சாங்க.ஏர் ஹோஸ்டஸ் ஒரு கலர் தண்ணிய எல்லோருக்கும் கொடுத்துச்சு.அப்புறமும் கத்த ஆரம்பிக்கவும் வெளியே போய் கொஞ்சம் நாய் பிஸ்கெட் வாங்கி வந்து ஆளுக்கு இரண்டு.கொலைப்பசி.என் அம்மாவை நான் நிமிந்தே பார்க்கலை. அம்மா பாவம் கண்ணை மூடிட்டு உட்கார்ந்து இருந்தாங்க. வெளியே விடுங்கடா நாங்க போய் சாப்பிட்டு வர்ரோம்னு சொல்லி பார்த்தா அது முடியாதுன்னு சொல்லிட்டாங்க. .என் சீட்டிற்கு முன்னாடி இருந்த ஒரு தமிழ்க்காரர் தன் ஃப்ரெண்டிற்கு மதியம் 1 மணிக்கு ஃபோன் செய்தார். அந்த பக்கம் ஃபோன் எடுத்ததும் என்னடா சாப்பிட்டாச்சான்னு கேள்வி கேட்டார்,அவர் ஆமாம்னு சொல்லவும் இவர் என்னடா சாப்பிட்டன்னு கேட்டார். அவர் சொல்ல சொல்ல இவர் சத்தமாக..என்னது மட்டன் பிரியாணியா,சிக்கன் சுக்காவா,என்ன ப்ரான் ரோஸ்ட்டா,அப்புறம் முட்டை ஆம்லெட்டான்னு சத்தமா எல்லோருக்கும் கேக்குற மாதிரி சொல்லிட்டு சரிடா நான் ஃபோனை வைக்கிறேன். நல்லாயிருப்படா நீன்னு சத்தமா சொல்லிட்டு ஃபோனை வச்சார். இதையெல்லாம் கேக்கவும் எல்லோரும் பசியை மறந்து சிரிச்சோம். ஆனா இதை கேக்கவும் எனக்கு ரொம்ப பசி வந்திடுச்சு.ஒரு ஏர் ஹோஸ்ட்டஸும் எங்க பக்கத்துல வர்லை. ஜன்னல் வழியா நான் ஒவ்வொரு ஃப்ளைட்டா எண்ணி கொண்டிருந்தேன். 13 ஃப்ளைட்டிற்கு அப்புறமா எங்க ஃப்ளைட் கிளம்பி மதியம் 3 மணிக்கு டில்லி வந்தோம். . . டில்லிக்கு வந்தா காசி ஃப்ளைட் எங்களை விட்டுட்டு போயிடுச்சு


காசி போறவுங்க நாளை காலை 9 மணிக்கு அனுப்பபடுவார்கள்னு சொல்லி கூட்டமா ஒரு இடத்தில் வெயிட் செய்ய சொல்லவும் கூட்டத்தை விட்டு அங்கேயிங்கே போக முடியலை.நாம் சாப்பிட போனா எங்க நம்மை விட்டுட்டு போயிடுவாங்கன்னு அவர்கள் சொன்ன இடத்தில் காத்துகிடந்தோம்.டில்லி ஏர்ப்போர்ட் வெளியே மாலை வேலையில் அப்படி ஒரு குளிர்.பனி மூஞ்சியில் அடிக்குது. அதை வேற சாமாளித்து அப்புறமா ஒரு பஸ்சில் ஏத்தி ஒரு 3 ஸ்டார் ஹோட்டலுக்கு அனுப்பினார்கள்.  6 மணிக்கு ஹோட்டல் வந்ததும் ரிஷப்ஷனில் மாலை 7 மணிக்கு டின்னர்ன்னு சொன்னாங்க..தேவுடான்னு இருந்துச்சு.ரூமிற்கு போய் ரிஃப்ரெஷ் செய்துட்டு டைனிங் ஹாலுக்கு ஓடி போய் .6.30 மணிக்கே உட்கார்ந்து கொண்டோம்.


அங்க பார்த்தா பஃபே.....ஆவி பறக்க எண்ணெய் ஒட்டாத பூரி,சப்ஜி,ஃப்ரைட் ரைஸ்,பனீர் மசாலா,சீஸ் பரோட்டா,குலோப் ஜாமூன்,கேரட் அல்வா, பட்டர் நான், பாயாசம்,ஐஸ்கிரீம்,ஃப்ரூட் சாலட் ஒரு வார்த்தை கூட பேசிக் கொள்ளாமல் ஒரு வெட்டு வெட்டிட்டு நிமிர்ந்தோம். காலை 5 மணியிலிருந்து பசி பசின்னு இருந்து மாலை 7 மணிக்கு அப்படி ஒரு சாப்பாடு. சாப்பாட்டின் அருமை புரிந்தது. என் அம்மாவை ஓட்டும் என் பசங்கக்கிட்ட ஃபோனில் ஜெய்பூரிலிருந்து  விஷயத்தை சொன்னா விழுந்து விழுந்து சிரிக்குதுங்க. அச்சச்சோ பாவம்மா அவ்வான்னு அப்புறம் சாரி சொல்லிச்சுங்க.விதவிதமா சமைத்து தரும் அம்மாவை ஃப்ளைட்டுல போறோம்னு ஒரு நாள் முழுசும் பட்டினி போட்ட கொடுமைக்காரி நான்.


Thursday, August 07, 2014

1965-75-ல் பிறந்தவர்கள்

1965 – 75-ல் பிறந்தவர்களும் சமூகமும்:

நார்மலா பிறக்காமல் சிசேரியன் மூலம் பிறக்க ஆரம்பித்தவர்கள்.

அதிகம் கவர்ன்மெண்ட் ஆஸ்பத்திரியில் பிறந்தவர்கள்.

3,4 பேருடன் கூடப்பிறந்தவர்கள்.

சித்தப்பா,சித்தி,பெரியப்பா,பெரியம்மா,அத்தை,மாமா,தாத்தா,பாட்டி என்று 
கூட்டு குடும்பத்தில் கொஞ்சகாலம் வாழ்ந்தவர்கள். அதில் கஷ்டத்தை அனுபவித்தவர்கள்.

அப்பாவிற்கு பயந்தவர்கள்.

குச்சி ஐஸ்,பால் ஐஸ், தேன் மிட்டாய்,தொக்கு 
உருண்டை,  நெல்லிக்காய்,கொடுக்காபுளி சாப்பிட்டவர்கள்.

பல்லாங்குழி,பரமப்பதம் என வீட்டிலேயும் கோலி,குச்சிக்கம்பு,கல்லா மண்ணா என்று தெருவிலே விளையாடி தீர்த்தவர்கள்.

சின்ன வயதில் டூர்ன்னா திருச்செந்தூர்,பழனி, கன்யாகுமரி, மாமல்லபுரம்,ஸ்ரீரங்கம் என அவர் அவர் ஊருக்கு பக்கத்து ஊருக்கு மட்டும் புளியோதரை கட்டி போனவர்கள்.

பெண்களுடன்/ஆண்களுடன் பேச கூச்சப்பட்டவர்கள்.

எம்.ஜி.ஆர்,இந்திராகாந்தி போன்றவர்களை சின்ன வயசில் நேரில் பார்த்தவர்கள்.

ஹை ஹிந்தி வேண்டாம் என்று எதிர்த்தவர்கள்.ஹிந்தி தெரியாம போச்சே என்று இப்ப புலம்புபவர்கள்.

எங்கே போனாலும் சைக்கிள்,நடை,டவுண் பஸ்,மாட்டு வண்டின்னு கிடைச்சதில் சலிக்காமல் போனவர்கள்.முதலில் லூனா ஓட்டியவர்கள்.

ரொம்ப இங்கிலிஷ் கலக்காமல் பேசுபவர்கள்.கலக்கும் இங்கிலிஷையும் சரியாக உச்சரிக்க முடியாமல் திண்டாடுபவர்கள்.

அதிகம் தமிழ் மீடியத்தில் படித்த கடைசி தலைமுறை.

தமிழை கொஞ்சம் நேசித்த,தமிழில் ஒரு பக்கமாவது ஒழுங்கா எழுத தெரிஞ்சவர்கள்.

எண்ட்ரன்ஸ் எக்சாம் புண்ணியத்தில் டாக்டர்,எஞ்சினியர் என்று மிடில் க்ளாஸ் மக்களும் படிக்க ஆரம்பித்தவர்கள்.

சுஜாதா, பாலக்குமாரன் போன்ற சூப்பர் எழுத்தாளர்களின் எழுத்தை உடனுக்குடன் ஸ்வாசித்தவர்கள்.

டீச்சர்களிடம் அடி வாங்கிய கடைசி தலைமுறை.

அவளை பாரு இவனை பாருன்னு அடுத்தவர்களுடன் படிப்பிற்கோ மற்றவற்றிற்கோ ஒப்பிடாமல் இருந்த டென்ஷன் ஏற்றாத கடைசி தலைமுறை பெற்றோருக்கு பிறந்தவர்கள்.

ரேங்க் கார்டில் அட்லீஸ்ட் ஒரு ரெட் கோடு இருக்க பிறந்தவர்கள்.

ஊரில் ஒன்றிரண்டு ஓடும் அம்பாசிடர் காரை ஆன்னு பார்த்தவர்கள்.

தந்தியின் உபயோகத்தையும், காதலுக்கு லெட்டரும் எழுதிய கடைசி தலைமுறை.

காதலை சொல்ல ரொம்ப ரொம்ப யோசித்து யோசிச்சு….இன்னமும் அப்ப சொல்லியிருக்கலாமோன்னு யோசிப்பவர்கள்.


1965 – 75-ல் பிறந்தவர்களும் டிவியும்:

முதல் முதலாக மங்கலாக தெரியும் இலங்கையின் ரூபவாஹிணியை ஆண்டனாவை அண்ணா மொட்டை மாடி ஏறி அட்ஜஸ்ட் செய்ய இப்ப சரி, இப்ப இல்லைன்னு சொல்லி அப்படியும் விடாமல் டி.வி பார்த்தவர்கள்.

அதன் பிறகு ஷோபனா ரவி என்னம்மா நியூஸ் வாசிக்கிறார்கள் என்று வாயை திறந்து  டி.டி பார்த்தவர்கள்.

ஊரே ஒன்று கூடி வெள்ளிக்கிழமை “ஒலியும் ஓளியும்” ப்ளாக் அண்ட் ஒயிட் டிவியிலும், அதில் ஒரு கலர் க்ளாஸ் ஒட்டி வைத்தும்  அப்புறம் நிஜ கலர் டி.வியிலும் பார்த்தவர்கள். திங்கள்கிழமை சித்ரஹார்,அவ்வப்போது வரும் ராஜீவ் பத்திய நியூஸ் கிளிப்பை ஆன்னு பார்த்தவர்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் போடோ மொழி படமானாலும் அதையும் ரசித்த கலாரசிகர்கள்.

காதில் கரகரன்னு வச்சு கேட்ட ட்ரான்ஸிஸ்டரை கடாசிட்டு கிரிக்கெட்டை டிவியில் பார்த்து ரசித்தவுங்க.

பெரிய பெரிய ரேடியோவில் டைப்ரைட்டிங்க் கீ மாதிரி இருக்கும் கீயை அமுக்கி அமுக்கி ஸ்டேஷன் மாத்தி கஷ்டப்பட்டவர்கள்.

சினிமாவும் 1965-75-ல் பிறந்தவர்களும்.

கமல் மட்டும் தான் நடிக்க,ஆட தெரிந்தவர்,அவர் மட்டும் தான் சிவப்பு, அழகு என்பதை நம்பியவர்கள்.

ஜினியை வெறியாக ரசித்தவர்கள்.
சிவாஜியை ஸ்ரீப்ரியா,அம்பிகா,ஸ்ரீதேவியுடன் கோட்டும் தொப்பையுமாய் பார்த்து நொந்தவர்கள், பிறகு முதல் மரியாதையில் சிவாஜி மீது ப்ரியம் கொண்டவர்கள்.

சினிமா பார்ப்பதை மட்டுமே பொழுதுப்போக்காக கொண்டவர்கள். ஒரே படத்தை இரண்டு மூன்று முறை பார்த்து 100 நாட்கள் ஓட்டியவர்கள்.

”அதுக்காக” பாக்யராஜ், இசைக்காக டி.ராஜேந்தர், ஸ்டைலுக்கு ரஜினி, டான்சுக்கு கமல், அடாவடிக்கு பார்த்திபன்,வில்லனுக்கு சத்யராஜ்,மைக்குக்கு மோகன்,பசுவுக்கு ராமராஜன்,அடிதடிக்கு விஜயகாந்த்,காலேஜ்னா முரளி, சுறுசுறுப்புக்கு கார்த்திக் இந்தனைக்கும் நடுவில் சில்க்,ஜெயமாலினி கட்டாயம் வேண்டும் என்று கேட்டு ரசித்தவர்கள்.

அம்பிகா,ராதா சம்பாதிக்க உதவினவர்கள்.ரேவதியின் நடிப்பை ரசித்தவர்கள்.

நதியாவை பார்த்து அவரை போலவே இருக்க ஆசைப்பட்டவர்கள்.

இளையராஜா,வைரமுத்து,எஸ்.பி.பி,ஜானகி,சித்ரா,ஜேஜுதாஸுடன் சேர்ந்தே வளர்ந்தவர்கள்.

கவுண்டமணி,செந்தில் ப்ரியர்கள். அய்யோடா என்று ஒய்.ஜி.மகேந்திரனை பார்த்து நொந்தவர்கள்.

பாலச்சந்தர்,பாரதிராஜா,பாக்யராஜ் என்று டைரக்டர்களை மதித்தவர்கள்.
நடிகர்,நடிகைக்கு லட்டர் போட்டு அவர்கள் அனுப்பும் ஃபோட்டோவை புத்தகத்தின் நடுவில் வைத்து ரசித்து மகிழ்ந்த கடைசி தலைமுறை.
.

 இன்னமும் நிறைய இருக்கு..உங்களுக்கு பாக்கி வைக்கிறேன்.

இதை படிச்சதும் இதை எழுத தோணுச்சு.




Tuesday, July 29, 2014

நவதிருப்பதி

இந்த மாதம் திருச்செந்தூர் போக வேண்டும் என்று முடிவு செய்ததும் நவதிருப்பதியும் போக வேண்டும் என்று முடிவானது.நெல்லையிலிருந்து மதியம் 1 மணிக்கு காரில் புறப்பட்டோம். நேராக நத்தம் - சந்திரன்,திருப்புளியங்குடி-புதன்,இரட்டைதிருப்பதி - ராகு,கேது, கடைசியில் பெருங்குளம் - சனி ஸ்தலம் தரிசனம் செய்தோம்.  இந்த கோயில்கள் மதிய நேரத்திலும் திறந்து இருக்கும் என்ற தகவலே நாங்கள் மதியம் நெல்லையிலிருந்து கிளம்ப காரணம்.இக்கோயில்கள் மாலை 6 மணியளவில் மூடப்படுகின்றன.

 நாங்கள் மாலை 6 மணியளவில் திருச்செந்தூர் சென்றடைந்தோம். அங்கே ஏற்கனவே ஃபோனில் புக் செய்து இருந்த சிவமுருகன் லாட்ஜில் தங்கினோம். மிகப்பெரிய 4 பெட் ரூமிற்கு Rs.1,200 ஒரு நாள் வாடகை. ரூம் நன்கு பெரியதாக விசாலமாக,சுத்தமாக இருந்தது.

அங்கேயிருந்து கோயிலிற்கும்,மணி ஐயர் ஹோட்டலுக்கும் நடந்தே போயிடலாம். கோயிலில் அதிக கூட்டம் இல்லை. 10 ரூபாய் டிக்கெட் எடுத்து தரிசனம் செய்துட்டு வெளியில் வந்தால் தங்கத்தேர் தரிசனமும் கிடைத்தது. அப்படியே கொஞ்ச நேரம் பீச்சில் உட்கார்ந்து விட்டு ரூமிற்கு வந்தோம். மறுநாள் காலை 5.30 மணிக்கெல்லாம் கடலில் குளிக்க போனோம். ஒரு மணிநேரம் நன்றாக குளித்து விட்டு ரூமிற்கு வந்து ட்ரஸ் மாத்திக்கொண்டு திரும்ப கோயில் போனோம். ஒரு மணிநேரத்தில் தரிசனம் செய்துட்டு மணி ஐயரில் காலை சாப்பாடு முடித்து கரெக்டா 9.30க்கு ரூமை காலி செய்துட்டு நேற்று பார்க்காத மிச்ச திருப்பதிகளை தரிசிக்க சென்றோம்.

தென் திருப்பேரை-சுக்ரன்,திருக்கோளூர் -செவ்வாய்,ஆழ்வார்திருநகரி-குரு,கடைசியாக ஸ்ரீவைகுண்டம்-சூரியன் தரிசனம் செய்து முடித்த போது மதியம் 12.30 மணியாகி இருந்தது. இந்த கோயில்கள் மதிய நேரத்தில் மூடப்பட்டு மாலை 4-8.30 வரை திறந்திருக்கும். தென் திருப்பேரைக்கு அடுத்து வழியில் நவக்கைலாசத்தில் ஒன்றான தென்காளகஸ்தி எனப்படும் ராஜாபதியில் கேதுவுக்கு ஒரு கும்பிடு.
ஒரே நாளில் 9 கோயில்கள் பார்க்காமல் இப்படி பிரித்து பார்த்தது நன்றாக இருந்தது.

மறுநாள் 1.30 மணியளவில் நெல்லை வந்தடைந்தோம். டவேரா கார் புக் செய்து இருந்தோம். RS.2700 ஆனது.

ஸ்ரீவைகுண்டத்தில் காலை 9.30க்கு சூரியன் ஸ்தலத்தை தரிசித்து விட்டு அங்கேயிருந்து ஆட்டோவில் (Rs.500)மதியம் 2 மணிக்குள் ஒன்பது கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்திடலாம். ஒரு முறை இப்படியும் நான் சென்றேன்.

அனைத்தும் அழகிய கோயில்கள்+பழமையான கோயில்கள், ஸ்ரீவைகுண்டம் தவிர்த்து அனைத்து கோயில்களிலும் பெருமாள் பிரமாண்டமாக இருக்கிறார். அனைத்து கோயில்களிலும் பூனைகள் நடமாடி கொண்டிருந்தன. எல்லா கோயில்களிலும் பூவோ,துளசி மாலையோ ரூபாய் பத்திற்கு கிடைத்தது. கோயிலில் ஐயர்களும் கோயில் பற்றி நன்கு விளக்கம் கொடுத்து பிறகு அர்ச்சனையும் செய்து தருகிறார்கள்.சுக்ரன் ஸ்தல அர்ச்சகர் ரிடையர்டு பி.டி மாஸ்டர் அல்லது ஹெட்மாஸ்டர் போல வந்திருந்த பக்தர்களை ரொம்பவும் மிரட்டி கொண்டே இருந்தார்.




Thursday, July 17, 2014

நானும் நதியா சைக்கிளும்

என் தம்பி மதுவிற்கு பிடித்த கிரகம்:

எட்டாப்பு படிக்கும் போது நான் சைக்கிள் ஓட்ட என் தம்பி எனக்கு கத்து கொடுத்தான். அப்ப அவனுக்கு கிரகம் சரியில்லை போல. என் அப்பாவின் சைக்கிளிலே கத்துக்கிட்டேன்.  ஓட்டும் போது கூடவே ஓடி வரும் என் தம்பி மீது சைக்கிள் விழும். அவன் எடுத்து நேராக்குவான்.  ஆனா ஒரு வாட்டி கூட நான் கீழே விழுந்தது இல்லை. சைக்கிளை கீழே போட்டுட்டு அப்படியே நேரா நிற்பேன். இது எப்படின்னு என் தம்பி குழம்பி போவான். ஆனாலும் கூடவே ஓடி வருவான்.அப்புறம் தனியே ஓட்டும் போது ஏதேனும் ஒரு மேட்டில் இடதுக்காலை வைத்துக் கொண்டே இருந்து விட்டு வலதுக்காலில் பெடல் செய்துதான் இடதுக்காலை எடுத்து அதன் பிறகு செமையா ஹேண்ட்பாரை ஆட்டி ஓரம் போ ஓரம் போ ருக்குமணி வண்டி வருதுன்னு அளப்பரை செய்துட்டு அதன் பிறகு ஒரு ஒழுங்காய் ஓட்ட வரும். எங்காச்சும் சைக்கிள் நின்று விட்டால் அட்லீஸ்ட் ஒரு கல் ஏதுவாக இடதுப்பக்கம் இருக்கும் பகுதிக்கு சைக்கிளை தள்ளிக் கொண்டே சென்று தான் ஓட்ட ஆரம்பிப்பேன். சொந்தமாக எனக்கே எனக்குன்னு ஒரு சைக்கிள் வாங்கி தரமாட்டாங்களான்னு ரொம்ப ஆசையாய் இருக்கும். ஆனா  ஓட்டுற லட்சணத்திற்கு அது ரொம்ப ஓவருனு கேட்டதே இல்லை. ஸ்கூலிங்  முடியும் வரை யாரோ ஒருவர் இருவரை பெண்களுக்கான சைக்கிளில் வயிறு எறிய பார்த்துட்டு போய்டுவேன்.

என் அப்பாவிற்கு பிடித்த கிரகம்:

காலேஜ் படிக்கும் போது நதியாவின் பூவே பூச்சூடவா படம் வந்தது. அப்பவே அந்த படத்தை மூணுவாட்டி எங்க ஊரு பூர்ணகலா தியேட்டரில் பார்த்தேன். சின்னக்குயில் பாடும் பாட்டு கேக்குதான்னு நதியா சைக்கிள் ஓட்டி வந்ததை பார்த்ததும் அது வரை தூங்கி கொண்டிருந்த சைக்கிள் ஆசை திரும்ப வந்தது. காலேஜிற்கு நிறைய பேர் சைக்கிளில் வருவதை பார்த்துட்டு அது வெறியா மாறிச்சு. என் க்ளாசில் ராஜி மற்றும் இந்திரா தினமும் லேடிஸ் சைக்கிளில் தான் காலேஜ் வருவார்கள்.  அவுங்க சைக்கிளை ஓசி அடிச்சு காலேஜ் கிரவுண்டில் நதியா கம்மல் போட்டு, சுடிதாரில்  லா லா லால்லாஆஆஆ . மாலையில் NGO - காலனியில் க்குக்குகூகூ கூ கூ. அப்புறமா வந்த பூக்களை பறிக்காதீர்களிலும் நதியா சைக்கிளில் வருவார். எனக்கு பைத்தியம் முத்திடுச்சு. ஓட்டி கொண்டிருக்கும் போது இரண்டு காலையும் அப்படியே லூசில் விட்டு சடாரென்று சைக்கிளை நிறுத்துவது,இடது காலுக்கு கல் இல்லாமலேயே அப்படியே பெடல் செய்து வண்டி ஸ்டார்ட் செய்வது, அப்படியே U-Turn போடுவதுன்னு கடைசி 2 வருடங்களில் நதியா ஸ்டைல் செய்ய இன்னும் சில பல ஓசி சைக்கிள்கள் கிடைத்தன.  அச்சோ,ஸ்பீடா போறப்போ அப்படியே வானத்தில் பறக்கிற மாதிரி இருக்கும்.அப்பா டீச்சரா இருந்ததால் சென்னைக்கு பேப்பர் கரெக்‌ஷன், மீட்டிங்குன்னு போறப்ப அந்த மொத்த காசுக்கும் நதியா கம்மல்,நெல்லையில் அப்ப கிடைக்காத சுடிதார் (சென்னையில் வாங்கி வர சொல்லி) என் அப்பா காசிற்கு வேட்டு வைத்தேன்.மிச்ச காசில் ஒவ்வொரு வருடமும் ரிலீசாகும் நதியா படங்களை இரண்டு மூணுவாட்டி பார்ப்பேன்.

எனக்கு பிடிச்ச கிரகம்:
அதன் பிறகு PG படித்த காலேஜில் கட்டாயம் Saree கட்ட வேண்டும் நதியா பைத்தியமும் ஓய்ந்தது. எனவே சைக்கிள் ஆசையினை மறந்து இருந்தேன். அப்புறம் கல்யாணம் ஆச்சு. எனக்கு பிடிச்ச கிரகத்தின் வேலை அப்படி. நெல்லையினை விட்டு தாம்பரம் ரயில்வே காலனியில் குடித்தனம். சைக்கிள் ஓட்ட நிறைய இடம் இருக்கும், ஆனா சைக்கிள் தான் இல்லை.


மகனுக்கு பிடித்த கிரகம்:

என் மகன் நகுலுக்கு மூன்று வயதானதும் அவனை LKG சேர்த்த ஸ்கூலில் நானும்  டீச்சராக வேலைக்கு சேர்ந்தேன். அப்ப தான் என் மகனுக்கு பிடிச்ச கிரகம் சைக்கிள் வாங்க வைத்தது. Neelam- கம்பெனி சைக்கிள் கொஞ்சம் உயரம் கம்மியாக இருந்தது. எனவே அந்த சைக்கிள் வாங்கலாம் என்று முடிவு செய்து அதையே 650 ரூபாய்க்கு என் முதல் மாத சம்பளத்தில் வாங்கினேன். மொத்த சம்பளமே அவ்ளோ தான்!!!.ஹை சொந்தமாக நமக்கே நமக்கான சைக்கிள் என்று அப்படி ஒரு சந்தோஷம் எனக்கு. என் மகனை  பின் சீட்டில் வைத்துக் கொண்டு நதியா ஸ்டைல் எதுவும் செய்யாமல் பத்திரமாக ஸ்கூலிற்கு போய் வந்தேன்.

 சைக்கிள் வாங்கிய,ஓட்டிய சந்தோஷம் போல வீட்டில் டூவீலர் வாங்கிய போதோ, என் மகன் கார் வாங்கிய போதோ எனக்கு வரலை.


Monday, July 14, 2014

ரேஷன் கார்டை தொலைக்கப் போறீங்களா??

போன வருடம் ஜூலை மாதம் நான் காசி போனப்போது என் அம்மா சுகர் வாங்க பால்க்காரம்மாவிடம் கார்ட் கொடுத்து இருக்காங்க.முக்கிய குறிப்பு: கார்ட் கொடுக்க வேண்டாம்னு சொல்லிட்டு தான் போயிருந்தேன்!!!!
நான் திரும்பி வந்து எதுக்கோ எங்கடா கார்ட் காணோம்னு தேடினா எங்கம்மா+அந்தம்மா ஙேன்னு முழிக்கிறாங்க.

வாங்கி வந்த பையில் சுகர் இருக்கு கார்ட் காணாமப் போச்சு - ரேஷன் கடையில் ரிப்போர்ட் செய்தால் மண்டல அலுவலகத்தில் ரிப்போர்ட் செய்ய சொன்னாங்க. ரேஷன் கடையில் இருக்கும் ஒரு பெரிய நோட்டில் எங்களுக்கான பக்கத்தில் கார்ட் மிஸ்ஸிங்ன்னு எழுதிக்கிட்டார்.
கார்ட் காணாம போனா 3 மாசத்துக்கப்புறமா தான் ரிப்போர்ட்டணும்னு மண்டல அலுவலகத்தில்  சொன்னாங்க.

இப்படி கார்டு காணோம்னு ஒரு பேப்பரில் எழுதி அதில் ரேஷன் கடைக்காரர் கையெழுத்து வாங்கி, மூணு மாதத்திற்கு அப்புறமா நவம்பர் மாதம் ஒரு நல்ல நாளில் ரிப்போர்ட்டினோம்

ஒரு மாதங்கழித்து வந்து டூப்ளிகேட் கார்ட் வாங்கிக்கோங்கன்னு ஒரு குட்டியூண்டு பேப்பரில் எழுதி தந்தாங்க.அதை ரொம்ப பத்திரமா யார் கண்ணிலும் படாமல் வச்சிருந்து ஒரு மாதம்  கழிச்சு டிசம்பர் கடைசியில் போனா உங்க டூப்ளிகேட் கார்டு ஆஃபிசில் டெலிட் ஆகிப்போச்சு!!! நம்ம நேரம்.

எனவே,  புது கார்ட் வேணும்னு அப்ளிகேஷன் போடுங்கன்னாங்க.
அதை ஜனவரியில் போட்டோம்.எப்ப வேணா வீட்டுக்கு செக்கிங் வருவோம்னாங்க.  பகலில் வீட்டை பூட்டாம பார்த்துக்கிட்டோம். யாருமே வரவேயில்லை.
பிப்ரவரியில் நேரே போய் கேட்டாக்கா எலக்‌ஷன் டேட் வந்தா எப்ப புதுக்கார்ட் தருவோம்னு எங்களுக்கே தெரியாது.சும்மா இங்க வராதீங்க ஃபோன் செய்தா இங்கே வாங்கன்னு ”அன்பா”சொன்னாங்க.எலக்‌ஷன் டேட்டும் வந்தது. சரி எப்ப ஃபோன் வருதோ அப்ப போலாம்ன்னு அந்த ஏரியா பக்கமே போகலை. எலக்‌ஷனும் வந்து அதன் ரிசல்ட்டும் வந்தது ஆனா எங்களுக்கு ஃபோன் கால் வரவேயில்லை.

சரி ஆனது ஆகட்டும்னு தைரியத்தோடு இந்த ஜூலை 7ஆம் தேதி போய் விசாரித்தா உங்க ஃபோன் எப்ப பார்த்தாலும் நாட் ரீச்சபிள்னு வருது. நீங்களா கார்ட் வாங்க வர மாட்டீங்களா? உங்க கார்ட் மார்ச் மாதமே ரெடியாகிடுச்சுன்னு திரும்ப “அன்பா” சொன்னாங்க.நீங்க தான் எலக்‌ஷன் முடியுற வரை இங்கே வராதீங்கன்னு சொன்னீங்க.ஃபோனும் வரலை,வீட்டிற்கு விசாரணைக்கும் யாரும் வரலை சரி இப்ப நான் என்ன செய்யட்டும்னு கேட்டேன். சனி,ஞாயிறு தவிர மத்த நாட்களில் மதியம் 3-5 வந்து கார்டை வாங்கிக்கோங்கன்னு சொன்னாங்க. அப்பாடா..ஜூலை 11 ஆம் தேதி எங்கள் புத்தம் புதிய ரேஷன் கார்டில் எங்க பேரெல்லாம் இருக்கா, அட்ரஸ் கரெக்டா இருக்கா, எங்க வீட்டுத்தலைவர் ஃபோட்டோவை கரெக்டா போட்டிருக்கான்னு செக் செய்து வாங்கி வந்தேன். காணாம போய் கரெக்டா ஒரு வருடம் கழித்து புது கார்ட் கிடைச்சுருக்கு.

பழைய கார்ட்டின் ஜெராக்ஸ் காப்பி,தற்சமயம் வசிக்கும் வீட்டின் முகவரிக்கு சிலிண்டர் பில் இரண்டையும் இணைத்து புது கார்ட் அப்ளை செய்தோம்.

இவையெல்லாத்தையும் விட முக்கியம்
அதிக பொறுமை,  போனாப்போகுதுங்குற மனப்பான்மை,நினைவு சக்தி,அலைவதற்கு ரெடியா இருந்தா நீங்களும் ரேஷன் கார்டை காணாப்போடலாம்.

அம்மாகிட்ட கண்டிஷனா சொல்லிடணும் சுகர் வாங்க யார்கிட்டேயும் கொடுக்காதீங்க நானே வாங்கி தரேன்னு.


Tuesday, June 17, 2014

நானும் திநெவேலி அல்வாவும்

நெல்லையில் அவசர ஒரு நாள் வேலை. இங்கே பெருங்களத்தூர் சென்று நேரா நெல்லை போற பஸ்ஸில் ஏறியாச்சு.காலை நெல்லைக்கு 7 மணிக்கு போயாச்சு.நேரா ஃப்ரெண்ட் வீட்டுக்கு போயிட்டு காலை 9 மணிக்கு வள்ளியூர் அங்கேயிருந்து ராதாபுரத்திற்கும் ஸ்டாண்டிங்கில் போய் 2 அவரில் போன வேலையினை முடித்து விட்டு திரும்ப நெல்லை வந்த போது 6 PM.

ஃப்ரெண்ட் வீட்டிற்கு ஓடோடி போய் பேக்கை எடுத்து கொண்டு ஜங்ஷனில் அல்வா,ஓமபொடி,காராச்சேவு வாங்கிட்டு பஸ்-ஸ்டாண்டில் சென்னை பஸ்ஸிற்கு நின்ற போது தான் தெரிந்தது நமக்கு சென்னைக்கு பஸ் கிடைக்காதென்று.15 ப்ரைவேட் பஸ்ஸில் விசாரிச்சாச்சு. நோ சீட்ஸ். சரி வா போகலாம் என்று நெல்லை புது பஸ்-ஸ்டாண்டிற்கு போனாக்கா சென்னை பஸ் நஹி. சரி கிடைச்ச பஸ்ஸில் போகலாம் என்று திருச்சி பஸ் தேடினால் ஃபுல்.அட ராமா என்னடா இது சோதனை என்று நினைத்த போதே அதோ

 கிடைச்ச ஒரு  மதுரை பஸ்ஸில் ஏறி கிடைச்ச சீட்டில் இப்ப என்ன 9 ஆ நைட் 12,30க்குள்ளே மதுரை போனாக்கா சென்னை ப்ஸ்ஸில் ஏறினாக்கா காலை 8 குள்ளே நம்சென்னைவீட்டுக்கே போயிடலாம் என்று குன்சா கணக்கு போட்டு கொண்டு உட்கார்ந்தாச்சு. காலையிலிருந்து உட்காரவேயில்லை. ஆஹா உட்கார்ந்தா இவ்ளோ சுகமா இன்று தானே இது தெரிஞ்சுதுன்னு நினைச்சுகிட்டே முகத்தில் மோதும் காற்றோடும்  நைட் சாப்பிடாத வயிற்றோடும், காதில் இளையராஜாவோடும் அப்படியே ஐக்கியமானேன்.

எல்லாம் நல்லாதான் போயிட்டு இருந்தது. ஆஹா பசிக்கிற மாதிரி இருக்கே அல்வாவாச்சும் சாப்பிடலாமா என்று நினைத்து பையில் கையை விட குனிந்தால் டமால்னு ஒரு சத்தம் போய் கொண்டிருந்த பஸ் அப்படியே நின்னிருச்சு. பஸ் டயர் பணால்.எல்லோரும் கீழே இறங்கி என்ன என்று பார்த்து கொண்டிருக்கும் போது நாம அல்வா தின்னாக்கா நல்லாயிருக்காதுன்னு நானும் கீழே இறங்கினேன். கோவில்பட்டியே இன்னும் வரலை பஸ் இதுக்கு மேலே போகாது பேக்கை எல்லாம் எடுத்துட்டு இறங்குகோங்கன்னு கண்டக்டர் சொல்லிட்டார். நினைவா அல்வா பேக்கையும் எடுத்துட்டு கும்மிருட்டில் மக்களோடு மக்காய் நின்று கொண்டேன். அடுத்த அரைமணிநேரத்தில் அங்கே வந்த ஒரு டவுண் பஸ்ஸில் கண்டக்டர் ஏறுங்க ஏறுங்கன்னு சொன்னதும் கூட்டத்தோடு என்ன ஏதுன்னு யோசிக்காம ஏறி ஜன்னலில் இடம் பிடித்தேன். அது தானே முக்கியம்.

அடுத்த அரை மணிநேரத்தில் கண்டக்டர் இந்த பஸ் ஷெட்டிற்கு போகுது எல்லோரும் இறங்குங்கன்னு சொன்னதும் தான் ஓஹோ இந்த டவுண் பஸ் மதுரைக்கு போகாது போலன்னு அடுத்த கும்மிருட்டில் நடுரோட்டில் இறங்கி கொண்டோம். அல்வா பத்திரம்னு மனசு சொல்லுச்சு.

நெல்லையிலிருந்து வரும் பஸ்களில் தான் சீட்டே இருக்காதுன்னு எனக்கு முன்பே தெரியுமே.சீட் இருந்தாக்கா கூப்பிடுங்கன்னு சொல்லிட்டு ரோட்டோரமாய் இருந்த ஒரு பாலத்தில் வசதியா உட்கார்ந்து சரி இப்பவாச்சும் அல்வா சாப்பிடலாமான்னு யோசித்து கொண்டிருக்கும் போதே அங்கே இருந்த ஒன்றிரண்டு மகளிரும் என் கூட உட்கார இடம் தேடி அந்த கும்மிருட்டிலும் வந்து விட்டார்கள். நைட் 11.30க்கு அல்வா தின்னா சிரிப்பாங்களேன்னு கம்முன்னு அம்மா தண்ணீ மட்டும் குடித்து விட்டு உட்கார்ந்து கொண்டேன். ஒரு பத்து பஸ்ஸாவது கண்டக்டர் நிறுத்தி இருப்பார். அவை எல்லாமே ஸ்டாண்டிங்கில் போயிட்டுருக்கு. ஃபுட்ஃபோர்ட்டில் மதுரை வரை போய் பழக்கமில்லைன்னு நான் எந்த பஸ்ஸிற்கும் அலையவில்லை.

திருப்பூர் பஸ் ஒன்று வந்தது.கண்டக்டர் தனியே வந்த  லேடிஸ் முதல்ல போயிருங்கன்னு அந்த பஸ்ஸில் கொஞ்ச பேரை கெஞ்சி ஏத்தி விட்டார். பஸ்ஸில் ஏறினாக்கா பஸ் ஃபுல்லா தூங்கி கொண்டிருந்தார்கள். நைசா கீழே தள்ளிவிட்டா கூட தெரியாத மாதிரி தூங்கிட்டுருந்த ஒரு ஆளை கண்டு பிடித்து அவருக்கு பக்கத்தில் இருந்த ஒரு கம்பியில் முட்டு கொடுத்து 12 AM -ல் ஸ்டாண்டிங்.தேவுடா, எங்காச்சும் சீட் கிடைக்காதான்னு யோசிச்சுகிட்டே நின்றேன். அல்வா பொட்டணத்தை திறந்தாக்க வாசத்தில் எல்லோரும் எழுந்திருச்சு பங்கு கேட்டாக்கா என்ன செய்றதுன்னு திறக்கலை.

ஒன்றரை மணிநேரம் ஸ்டாண்டிங்..சாத்தூர், விருதுநகர்,திருமங்கலம் கும்மிருட்டில் என்ன அழகுன்னு ரசிச்சுட்டே வந்தாக்கா..கோவில்பட்டியில் ஏறுனவுங்க எல்லோரும் திருமங்கலத்தில் இறங்கிகோங்கன்னு கண்டக்டர் சவுண்ட் விட்டார். பஸ் பை-பாஸில் போகுது மதுரைக்குள்ளே போகாதுன்னு அடுத்த சவுண்ட் விட்டார்.

அடபாவிகளான்னு நொந்து கொண்டே திருமங்கலத்தில் இறங்கி மதுரை வந்த அடுத்த பஸ்ஸில் ஏறினா சீட் கிடைச்சிருச்சு. நைட் 1.30 மணி.அடுத்த முக்கால் மணிநேரத்தில் மதுரை வந்தாச்சு. அங்கே அலங்காரமாய் நின்று இருந்த ஒரு மினி சென்னை பஸ்ஸை பார்த்ததும் உயிரே வந்துச்சு. ஏறு உட்கார்ந்தால் 700 ரூபாய் சென்னைக்கு.
லேடிசுக்கு முன்னாடி சீட் என்று கொடுக்கவும் அப்பாடா திரும்ப ஜன்னல் சீட்டுடான்னு உட்கார்ந்த அடுத்த நிமிஷம் அல்வாவையும், ஒடைஞ்ச டீவியில் ஓடி கொண்டிருந்த ஒரு அந்து போன சினிமா சத்ததையும் மறந்து தூங்க ஆரம்பித்தேன். 2 மணிக்கு யாருடா சினிமா பார்ப்பாங்க?

காலை 10 மணிக்கு வீட்டிற்கு வந்து பார்த்தாக்கா கால் இரண்டும் வீங்கி போயிருந்தன. என் பசங்க இரண்டும் அம்மா உனக்கு வயசாகிடுச்சுன்னு ஒரே கிண்டல். அதெல்லாம் இல்லை ஸ்டாண்டிங்கில் வந்ததால் தான் இப்படி ஆகி போச்சுன்னு அதுங்க கூட கத்திட்டு  11AM-லிருந்து 6PM வரை அப்படி ஒரு தூக்கம். மாலை ஆறு மணிக்கு எழுந்து அல்வாவை சூடு செய்து ஜமாய்க்கலாம் என்று தேடினால் வாங்கி வந்திருந்த அல்வா என் பசங்க சாப்பிட மாட்டார்கள் என்று என் அம்மா தன் மகன் வீட்டிற்கு கொடுத்து விட்டார்களாம். போச்சுடா நாம அல்வா சாப்பிட நினைத்தது அவ்ளோ தப்பா???
இனிமே அல்வா வாங்க நெல்லை போவேன்??

Monday, May 05, 2014

பெற்றோர்களே தாய்மார்களே!!

வரப்போகுது ரிசல்ட் திருவிழா.சொந்தக்காரர்கள்,நண்பர்கள் கூட்டத்தில் நிச்சயம் யாராச்சும் +2 எழுதி இருப்பார்கள். என்ன மார்க் எடுத்த என்று யார் கிட்டேயும் கேட்க கூடாது என்று இந்த வருடமும்  நினைத்து கொண்டுள்ளேன். யார் எவ்ளோ எடுத்தா நமக்கென்ன என்ற எண்ணம் இல்லை. இப்படி நாம் கேட்போம் என்பதற்காகவே அந்த மாணவி/மாணவன் மேல் அவர்களின் பெற்றோர்கள் வைக்கும் பிரஷர் இருக்கே.பாவம் அந்த கண்மணிகள். ஆனாலும் காத்தோடு சில விஷயங்கள் சில வருடங்கள் கழித்து கேட்டு தொலைக்க வேண்டியிருக்கே.

இப்படியும் நடக்கலாம்:

1. என்னுடன் முதுகலை படித்த ஒருவர் +2வில்,டிகிரியில் ஃபெயில்.முதுகலை வந்து நன்கு படித்து பிறகு M.phil படித்து இப்போ அரசு கல்லூரியில் H.O.D.

2. என் கணவருடன் படித்த ஒருவர் ஸ்கூலில் மிக சுமாராக படித்தவர். இப்போ அவர் இருக்கும் ஊரில் மிக நல்ல டாக்டர்.

3.  +2வுடன் படிப்பை விட்டு விட்ட ஒரு நண்பர் ஒருவர் தற்சமயம் தன் பெண்ணிற்கு 100 பவுன் நகை போடும் அளவிற்கு தன் காய்கறி பிசினசில் பணம் சேர்த்து உள்ளார்.

4. +2-வில் ஃபெயில் ஆன ஒருவர் தான் பாஸ் என்று தன் ஃப்ரெண்ட்ஸ்களுக்கு ஒரு பார்ட்டி கொடுத்துட்டு தன் சித்தி வீட்டிற்கு டில்லிக்கு ஓடி விட்டார். இது நடந்து 10 வருடங்கள் இருக்கும். இப்போ சென்னையில்  கேட்டரிங் பிசினசில் கொடிக்கட்டி பறக்கிறார்.

இப்படியும் நடக்கலாம்:

1.9 ஆம் வகுப்பில் இருந்து தன் ஒரே பெண்ணை நாமக்கல் ப்ராய்லர் பள்ளியில் தன் தகுதிக்கு மீறி செலவு செய்து படிக்க வைத்தார். +2வில் போன வருடம் ஃபெயில்.

2. இதே போல் இன்னொருவர் தன் மகளையும் அந்த பள்ளியில் சேர்த்தார்.+2-வில் மிக சுமாரான மார்க்.ஆனாலும் விடாமல் பணம் கொடுத்து போனவருடம் இஞ்சினியரிங் சேர்த்தார். ஒரு வருடம் மட்டும் தான் அந்த மாணவி கல்லூரிக்கு போனார். இப்பொ படிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு வீட்டில் இருக்கிறார். இந்த வருடம் கலைகல்லூரியில் சேர்க்க உள்ளார்கள்.
கலைக்கல்லூரியில் சேர்பவர்கள் எல்லோரும் மக்கு என்பது இவரின் பெற்றோர்கள் என் காதுபடவே சொல்லி உள்ளார்கள்.

3.இன்னொரு சொந்தக்காரர் தன் ஒரே மகனை ரிசல்ட் வரும் முன்னரே 15 லட்சம் கொடுத்து ஒரு கல்லூரியில் சேர்த்து விட்டார். இது தவிர வருடம் ஒன்றரை லட்சம் ஃபீஸ்.இரண்டு வருடங்கள் கழித்து போன மாதம் அந்த பையன் நான் காலேஜ் போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து இப்போ கலைக்கல்லூரியில் சீட் தேடுகிறார்கள். 12 அரியர்ஸாம்.

4.இன்னொருவர் மகன் 6 வருடங்களாக இஞ்சினியரிங் படித்து கொண்டேயிருக்கிறார்.

5. சிதம்பரம் காலேஜில் பணம் கொடுத்து சேர்த்த ஒருவரின் மகன் அங்கே தண்ணீ,போதை என்று பழகி இப்போ ட்ரீட்மெண்ட்டில் இருக்கிறார்.

6. சொந்தக்காரரின் மகள் +2வை பாதியில் விட்டுவிட்டு மனநல மருத்துவரை இப்போ பார்த்து கொண்டு இருக்கிறார். அவர்கள் தங்கள் மகளை டாக்டருக்கு படிக்க சொல்லி ஏகப்பட்ட பிரஷர்.

7. ஐந்து வருடம் முன்பு பெரியகுளத்தில்  +2 படித்த பெண் தூக்கு போட்டு கொண்டாள். பெற்றோருக்கு ஒரே பெண்.

8. தெரிந்த பெண் மருத்துவம் சீட் கிடைக்காமல் சூசைடு அட்ம்ட். பிறகு வெட்னரி படித்து திருமணம் முடித்து அமெரிக்கா போனார். இன்று வரை ஹவுஸ்-வைஃப்.

இப்படி நம்மை சுற்றி நிறைய கதைகளை கேட்டு இருப்போம். இதை எதையும் நம் குழந்தைகள் மீது திணிக்காமல் அவன்/அவளால் என்ன செய்ய முடியும். என்பதை யோசித்து கோர்ஸ் செலக்ட் செய்ய வேண்டும் .நிச்சயம் படித்த பெற்றோர்களால் அதை அளவிட முடியும். இதை படிக்கிறேன் என்று சொன்னதும் அய்யோ அதை படிச்சு என்ன செய்ய போற என்ற கேள்வி தான் நிறைய பெற்றோரிடம். எதையும் விரும்பி படித்தால் அந்த துறையில் உருப்படலாம் என்பது நிறைய பேருக்கு தெரிவதில்லை.புரிவதில்லை.

அவன் அமெரிக்கா போயிட்டான்,இவன் லண்டன் போயிட்டான் என்று  மட்டுமே பெற்றோர் கண்ணுக்கு தெரியுது. எத்தனை பேர் பி.ஈ படிச்சுட்டு 5000, 7000 என்று சம்பளம் வாங்குகிறார்கள் அதுவும் கிடைக்காமல் அலைந்து கொண்டிருக்கிறார்கள் என்பது புரியவே மாட்டேங்குது. இதில இன்னும் கொடுமை வேலை கிடைக்கவில்லை என்பதற்காக பணம் கொடுத்து M.E சேருகிறார்கள். ஏதாவது கல்லூரியில் ஆசிரியர் வேலையாச்சும் கிடைக்கும் என்பது தான் காரணம். வேறு வேலை கிடைக்கலை அதான் டீச்சரானேன் என்ற கதை நம் ஊரில் மட்டும் தான் நடக்கும்.

தெற்கே பைன்களை விட பெண்கள் தான் நிறைய பி.ஈ படிக்கிறார்கள். வேலைக்கும் போறதில்லை. கல்யாண பத்திரிக்கையில் ஏதாவது டிகிரி போட்டுக்க முன்பெல்லாம் பெண்கள் படிச்ச மாதிரி இப்ப பி.ஈ இருந்தா தான் கல்யாணம் நடக்கும் போல.

அமெரிக்காவிற்கு கணவருடன் போகும் போது சில விசாக்களில் அங்கே போய் 6 வருடங்கள் வரை வேலைக்கு போக முடியாமல் சும்மா இருக்க போவதற்கு எதற்கு பி.ஈ என்று தெரியவில்லை.

பி.ஈ படிச்ச பைன்கள் பி.ஈ படிச்ச பெண்கள் தான் வேண்டும் என்பது எழுதாத சட்டம் ஆகி போச்சு. கலைக்கல்லூரியில் பெண்கள் PG படிச்சு இருந்தாலும் மதிப்பதில்லை. அதனாலேயே எப்பாடு பட்டாவது பெண்களை பி.ஈ படிக்க வைச்சுடுறாங்க.

+2 படிக்கும் வரைக்கும் நம் சொன்ன பேச்சை கேட்கும் நிறைய குழந்தைகள் காலேஜ் போனதும் கேட்கவே மாட்டார்கள். +2 வரை ஆட்டு மந்தைகள் போல தலையாட்டும் இவர்கள் ஒரு வருடம்,இரு வருடம் கழித்து தைரியம் பெற்று பிடிவாதம் செய்ய தொடங்குகிறார்கள். அதன் பிறகு வருடங்களும் வேஸ்ட்,பணமும் வேஸ்ட். 17 வருடங்கள் வளர்த்த நமக்கே தெரிவதில்லை நம் பிள்ளை இதை செய்யுமா இல்லையா என்று.


ஆகவே பெற்றோர்களே தாய்மார்களே,பி.ஈ என்ற படிப்பில்லாமலும் இந்த சமூகத்தில் நாம் வாழ முடியும்.கட்டாயம் கல்வி அவசியம் தான் ஆனால் கல்வி என்றாலே அது பி.ஈ மட்டும் தான் என்று தொங்கி கொண்டே இருக்க வேண்டுமா???

என் இரு மகன்களையும் பி.ஈ படிக்க வைக்கவில்லை என்று நாங்கள் மிகப்பெருமையாக சொல்லி கொள்கிறோம். நிறைய பேர் என்ன இப்படி செய்தீட்டீங்க என்று ஆச்சரியப் படுகிறார்கள். நாங்கள் என்னவோ தப்பு செய்துட்ட மாதிரி. இரண்டும் மக்கு போல அதான் பி.ஈ படிக்க வைக்கலை என்றும் நினைத்து கொள்வார்கள். நினைச்சுக்கட்டுமே. ஒவ்வொருவரின் நினைப்பையும் நாம் மாற்ற முடியாது.

ட்ரக்கிங், ரயில் பயணங்கள்,காட்டில் விலங்குகள் சென்சஸ், போட்டோகிராபி என்று அடிக்கடி இருவரும் செல்கிறார்கள்.  இந்த உலகை புரிந்து கொள்கிறார்கள். வாழ்க்கையில் சந்தோஷம் என்பது பி.ஈயில் மட்டும் இல்லை என்று நாங்கள் புரிந்து கொண்டோம்.  யாரோ சம்பாதிக்க அவர்கள் நடத்தும் காலேஜிற்கு லட்சங்களை கொட்டி கொடுக்க துணிந்த பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எது சந்தோஷம் என்பதை அறிந்து அதற்காக சில ஆயிரங்கள் செலவு செய்ய அதிகம் யோசிக்கிறார்கள்.

20 ஆயிரம் சம்பளம் வாங்கும் இடத்தில் கலைக்கல்லூரியில் படிச்சவன் 10 ஆயிரம் வாங்கட்டுமே. டென்ஷன் இல்லாமல் இருக்கட்டுமே. நம் ஆசைகளை அவர்கள் மீது ஏன் திணிக்க வேண்டும். அவர்கள் வாழப்போகும் ஒரே ஒரு வாழ்க்கையினை அவர்களின் ஆசைப்படி வாழட்டுமே. எத்தனை சாஃப்ட்ஃபேர்க்காரர்கள் மன நிம்மதியோடு இருக்கிறார்கள்??


நான் புரிந்து கொண்டு என் பையன்களுக்கு அறிவுறுத்தியது..

யாரிடம் என்ன பேசணுமோ அதை ஒழுங்கா பேசி புரிய வைப்பது.
இரண்டுக்கும் மேல் பட்ட மொழியினை தெரிந்து கொள்வது.
உலக வரலாறு,புவியியல், நாடுகள் பற்றி அதிகம் தெரிந்து கொள்வது..
சின்ன வயதில் இருந்தே தினம் பேப்பர், புத்தகம் படிக்க தூண்டியது...
கார்ட்டுனுடன் சேர்ந்தே நியூஸ் பார்க்க தூண்டியது..
கிரிக்கெட் தாண்டியும் உள்ள நிறைய விளையாட்டுகளை பார்க்க தூண்டியது..
சின்ன வயதிலேயே நீச்சல்,சைக்கிள்,பைக்,கார் ஓட்ட கத்து கொடுத்தது..
இது எல்லாம் தன்னம்பிக்கையை தூண்டும் என்று நம்பினேன்.


இதற்கெல்லாம் மிக பெரிய வசதி தேவை இல்லை. ஒரு நாளும் பணத்தை ட்யூசனுக்கு செலவு செய்யலை. இப்படி உபயோகமாக செலவு செய்தோம். ஆனால் அப்படி அமைந்தாலும் பெரும்பாலான பெற்றோர்கள் அதை பயன்படுத்துவதில்லை. கீ கொடுத்த பொம்மைகளாக தான் தன் குழந்தைகளை நினைக்கிறார்கள். சமுதாயத்தில் ஸ்டேடஸ் உயர தன் குழந்தைகளை பணயம் வைக்கிறார்கள்.

இப்போ நம் தமிழக பெற்றோர்களுக்கு தான் அவசியம் நல்ல கவுன்சலிங் தேவை.

Friday, April 11, 2014

அழிக்க நினைத்தவன் அசத்துகிறான் -3

அசத்துகிறான் -1
அசத்துகிறான் -2

டாக்டர் அங்கிட்டு இங்கிட்டு போகும் போது என்னப் பிள்ளை வலி வந்துச்சா இல்லையா..எங்க ட்ரிப் ஏத்தி ஏத்தி கைதான் வலிக்குதுன்னு சொல்வேன்.10 ஆம் தேதி இரவு எங்கூட்டு ஆளுங்க + டாக்டர்கள் சதி திட்டம் தீட்டி 11 ஆம் தேதி காலையில 4 மணிக்கு சிசேரியன் செய்தாங்க.என்ன சார் வெளியில வரவே இஷ்டம் இல்லையான்னு சொல்லிக்கிட்டே ஒரு தடிப்பயலை வெளியில் எடுத்தாங்க பாருங்க நான் அழுக ஆரம்பிச்சுட்டேன். ரூமில் வந்து என்னை போடவும் என் பையனை என் பக்கத்திலேயே தான் போடணும் நான் அவனை பார்த்துட்டே இருப்பேன்னு தூங்கவேயில்லை.கொட்ட கொட்ட முழிச்சுட்டே இருந்தேன்.பையனுக்கு ஃபிட்ஸ் வருதா வருதான்னு செக்கிங்.மயக்கமா இருந்துச்சு ஆனா முழிச்சே இருந்தேன்.ஹெவி டோஸ் தூக்கத்துக்கு மருந்து கொடுத்திருக்கு இப்படி கொட்ட கொட்ட முழிச்சுட்டு இருக்காளேன்னு கண்ணை மூடி தூங்கு இல்லைன்னா உனக்கு பிராந்தி தான் கொடுக்கணும் என்று சொல்லிட்டு டாக்டர் சிரிச்சுட்டே போயிட்டாங்க.

                                            
மாமாவே குழந்தை நல மருத்துவர் தான். அவர் பையனை செக் செய்துட்டு நார்மலா இருக்கான்னு சொல்லிட்டு போனார்.ராத்திரிதான் தூங்கினேன்.7ஆவது நாள் தையல் பிரிக்கணும் என்று டாக்டர் சொல்லிட்டு காலை 11 மணிக்கு வருவோம்னு சொன்னாங்க.தையல் பிரிச்சா வீட்டிற்கு ஓடிடலாம்னு இருக்கும் போது கரெக்டா காலை 7 மணிக்கு பையனுக்கு ஃபிட்ஸ் வந்திடுச்சு.போச்சா இப்ப நான் அழுகவேயில்லை. என்ன என்ன மாத்திரை எவ்ளோ டோஸ் கொடுக்கணும்,விட்டமின் டி-3,கால்ஷியம் இவைகள் தான் தேவை என்று எனக்கு தான் தெரியுமே.
ஹாஸ்பிட்டலுக்கு வந்த என் கணவரை உடனே ரயில்வே ஸ்டேஷனுக்கு போய் அன்றிரவு எந்த ட்ரையினில் டிக்கெட் கிடைக்குதோ அதற்கு சென்னைக்கு டிக்கெட் வாங்கி வர சொல்லி அவர் முத்துநகரில் எமர்ஜன்சி கோட்டாவில் வாங்கி வந்தார். இன்னைக்கே போகணுமா உன்னால் முடியுமா முடியுமா என்று பாவம் கேட்டு கொண்டே இருந்தார். எவ்வளவு சீக்கிரம் போறோமோ அவ்வளவு சீக்கிரம் குழந்தைக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியுமே.

மறுநாள் காலையில் 10 மணிக்கெல்லாம் எக்மூர் சில்ண்ட்ரன்ஸ் ஹாஸ்பிட்டலில் அட்மிஷன் போட்டு வந்த டாக்டரிடம் என்ன என்ன ப்ளட் செக்கப் செய்ய வேண்டும் என்று நானே முந்திரிக் கொட்டையாய் சொல்லி பெரியவனின் கேஸ் ஹிஸ்டரி முழுவதும் ஒப்பித்து கால்ஷியம் லெவல், தைராய்டு லெவல் அடுத்த நான்கு நாட்களில் தெரிந்து கொண்டு 5 ஆவது நாளில் இன்று கட்டாயம் என்னை டிஸ்சார்ஜ் செய்து விடுங்கள் என்று நானே கேட்டு கொண்டு ஹாஸ்பிட்டலை விட்டு ஓடி வந்தேன்.பெரியவனுக்கு 23 நாட்கள் பட்ட துன்பத்தை இவனுக்காக 5 நாட்கள் மட்டும் அனுபவித்தேன். அதன் பிறகு ரொட்டீன் செக்கப் அது இது என தொடர்ந்த கவனிப்பால் இன்று இரண்டும் வளர்ந்து விட்டன.
                                           


பொறுமையாக வெளியில் வராமல் 20 நாட்கள் எக்ஸ்ட்ராவாக  வயிற்றிலேயே  இருந்த ரிஷி மிக பொறுமைசாலி.

அதிர்ந்தே பேசாது.வேண்டாம் வேண்டாம் என்று சொல்லிய என்னிடம் தான் மிக க்ளோஸ்.மிக பொறுமையாக பறவைகள்,விலங்குகள் என படம் எடுத்து அசத்துகிறான்.இன்று ரிஷிக்கு பிறந்த நாள்.சில மாதங்களாக கர்நாடகா காடுகளில் சுற்றி கொண்டிருக்கிறான்.இந்த துறையில் எவ்ளோ தூரம் சாதிக்க முடியும் என்று தெரியவில்லை. எனினும் சின்ன வயதில் ஒரு முயற்சி செய்யட்டுமே என்று அவன் விரும்பிய துறைக்கு செல்ல ஓக்கே சொல்லிட்டோம்.

அழிக்க நினைத்தவன் அசத்துகிறான் -2


அசத்துகிறான் - 1

முதலில் பையனா பிறந்ததால் தான் அவனுக்கு அப்படி ஆச்சு. இது பொண்ணா இருந்தா அந்த மாதிரி வரவே வராது.சயின்ஸ் படி அது சாத்தியமே இல்லை.xx,yy,xy,yx-ன்னு வரலாறு படித்த சயின்ஸ் பிடிக்கவே பிடிக்காத என்னை குழப்பினார்கள். அதுவுமில்லாமல் சமத்தா உன் பெரிய பையனை எப்படி வளர்த்து வர பாரு.அவன் தனியா இருப்பானா.நம்ம ஃபேமிலி எவ்ளோ பெரிசு பாரு.(என் கணவர் எட்டாவது குழந்தை) அவன் மட்டும் தனியாளா வளரணுமா அப்படி இப்படின்னு ப்ரையின் வாஷ் செய்து பயமுறுத்தி,போராடி என்னை வீட்டிற்கு அனுப்பி வைத்தார்கள்.யாருமே என் கட்சியில் இல்லை.

                                                 
சரி நடப்பது நடக்கட்டும் என்று ஊருக்கும் ரிடர்ன் வந்துட்டேன். இங்கே வந்து 4வது மாதத்தில் ஸ்கேன் செய்தால் நீ அசையவே கூடாது..குழந்தை பொஸிஷன் சரியில்லை.நான் என் தம்பியுடன் ஸ்கேன் செண்டர் போயிருந்தேன். பெரியவுங்க யாரையும் அழைச்சுட்டு வரலையா என்று ஏகமா பயமுறுத்தினாங்க. ஆஹா அடுத்த யுத்தம் ஆரம்பமா போச்சுடான்னு வீட்டிற்கு எலக்ட்ரிக் ட்ரையின் ஏறி வந்தேன்.என்னோட அம்மா பயந்து போய் என்னை திண்டுக்கல்லிற்கே அனுப்பி விட்டார்கள்.அங்கே போய் ஸ்கேன் செய்து பார்த்தா அதே பல்லவி. சரியென்று வேலை எதும் செய்யாமல் ஜம்முன்னு டாக்டர் பார்ப்பது மட்டும் வேலைன்னு இருந்துக் கொண்டேன்.

                                     

மார்ச் 23 டேட் கொடுத்து இருந்தார்கள்.வலியே வராது ஆனாலும் ஹாஸ்பிட்டல் வந்துடுன்னு சொன்னதும் 22 தேதியே ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆனேன். 23 சிசேரியன் செய்துடலாம் என்று ப்ளான். எதுக்கும் 22 ஆம் தேதி இரவு ஒரு ஸ்கேன் செய்யலாம் என்று பார்த்தால் 9 மாதமாக பொஸிஷன் சரியில்லை சரியில்லை என்று இருந்த குழந்தையின் பொஸிஷன் அன்னைக்கு திடீரென்று சரியாகி விட்டது. மறுநாள் வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள். வலி வரும் அப்ப வா.சிசேரியன் வேண்டாம்னு.சரின்னு வீட்டிற்கு வந்தாச்சு.வலி வந்துச்சா,வரலை,வந்துச்சா,வரலை.இது சரிபட்டு வராதுன்னு ஏப்ரல் 9 ஆம் தேதி என் அம்மா ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போயிட்டாங்க.ஏப்ரல் 14-ல் சித்திரை பிறக்குமே அவுங்க கவலை அவுங்களுக்கு. வலி வர 9,10 ஆம் தேதி ட்ரிப் ஏத்தினாங்க.      
                                        

வலி வந்துச்சா வரலியே..............


Thursday, April 10, 2014

அழிக்க நினைத்தவன் அசத்துகிறான் - 1

 பெரியவனுக்கு ஒரு வயதும் 3 மாதங்களும் நடந்து கொண்டு இருக்கும் போது திடீரென்று ஒரு நாள் ஒரு டவுட்.என் அம்மா தன் கடைசி தம்பியின் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்ய திண்டுக்கல் ஒரு மாதம் முன்பே போய் இருந்தார்கள்.கல்யாண நெருக்கத்துக்கு போலாம் என்று நாங்க ப்ளான் செய்து இருந்தோம்.ஆனால், நான் எனக்கு அந்த டவுட் வந்தவுடனே திண்டுக்கல் போகணும் என்று சொல்லவும் என் கணவரும் என் கூடவே கிளம்பி விட்டார்.



அங்கே போனதும் காலை 9 மணிக்கெல்லாம் என் சித்தி டாக்டர் காஞ்சனாவை பார்க்க ஓடி விட்டேன். எஸ் என்னுடைய டவுட் கரெக்ட் தான். இரண்டாவது குழந்தை 50 நாட்கள் வயிற்றில். தெரிந்ததும் சந்தோஷம் வரலை. அழுகை தான் வந்தது. எனக்கு இந்த குழந்தை வேண்டவே வேண்டாம். வேண்டாம் என்றதற்கு காரணம் இது தான். எனக்கு அபார்ஷன் செய்துடுங்க என்று ஒரே அழுகை.அம்மா,கணவர் எல்லோரும் வேண்டாம் என்று சொல்ல சொல்ல  அழுகை.


 டாக்டர் சரி செய்துடலாம். இன்னும் 6 நாட்களில் வீட்டில் கல்யாணம் இருக்கும் போது நீ மட்டும் ஹாஸ்பிட்டலில் இருப்பியா.எல்லாம் என்ன எதுக்கு என்று கேப்பாங்க, கல்யாணம் முடியட்டும் செய்துடலாம் என்று சொல்லி கல்யாணத்துக்கு புது புடவை எல்லாம் எடுத்தியா?ப்ளவுஸ் எல்லாம் தைச்சாச்சா?ஊரிலிருந்து வரும் போது நகை எல்லாம் எடுத்து வந்தியா? இப்படி மிக முக்கியமான கேள்வி எல்லாம் கேட்டு,பெரியவன் இப்ப எப்படி இருக்கான் என்று பேசி வீட்டிற்கு அனுப்பி விட்டார்கள்.
சரி இன்னும் 5 நாட்கள் தானே அதுக்கு அப்புறம் ஹாஸ்பிட்டல் வரலாம் என்று கல்யாண மூடில் வீட்டிற்கு போய் விட்டேன். கல்யாணமும் முடிந்தது. மறுநாள் டாணென்று ஹாஸ்பிட்டலுக்கு ஒரே ஓட்டம்.பார்த்தா என்னுடைய டாக்டர் மாமா,காஞ்சனா டாக்டர் அவர்களின் இன்னும் இரண்டு டாக்டர் ஃப்ரெண்ட்ஸ்.
ஒரு  டாக்டர் இருந்தாலே வயத்த கலக்கும். இதில் நான்கு டாக்டர்கள். இந்தோ பாரும்மா..அபார்ஷன் செய்தால் ரொம்ப ரத்தம் லாஸ் ஆகும்.நீ அண்டர் வெயிட்(44கிலோ) எனவே உன் உடம்பு தாங்காது. இல்லை நான் நல்லா சாப்பிட்டு உடம்ப பாத்துப்பேன். திண்டுக்கல்லிலே இருந்து தினம் பிரியாணி(தாத்தா ஹோட்டல் வைத்து இருந்தார்) மட்டன் அப்படி சாப்பிட்டு வெயிட் ஏத்திக்கிறேன். எனக்கு அபார்ஷன் வேண்டாம்னு சொல்லிடாதீங்கன்னு திரும்ப அழுவாச்சி.

அழுவாச்சி என்னாச்சு நாளைக்கு.....

Tuesday, February 25, 2014

சூப்பர் கைப்புள்ள!!!

பார்றா...கைப்புள்ளயின் சாமர்த்தியத்தை......

போன முறை திநெவேலிக்கு போயிட்டு குழப்பத்தோடு திரும்பி வந்த கைப்புள்ள கூட்டணி திரும்பவும் இந்த மாதம் 13 விடிகாலையில் திநெவேலியில் எண்டர் ஆனது.

தச்சநல்லூர் தாண்டும் போது ரோட்டோரெமெல்லாம் வருக வருக என பேனர்கள்.ஆஹா திநெவேலியில் போன முறை யார்கிட்டேயும் பணம் எதுவும் கொடுத்து ஏற்பாடு செய்யலையே அப்புறமா எப்படி இவ்ளோ கட்-அவுட்,பேனர் என்று ஜெர்க்காகி கண்ணை கசக்கி கொண்டு நிமிர்ந்து நிதானமாக பாத்தாக்கா வருக வருக குலவிளக்கே,வருக வருக சித்தியே,வருக வருக வாணி ராணியே ஓஓ இது நமக்கில்லையா ராதிகா அம்மாக்கா என்று தூக்கம் நன்கு கலைந்ததும் புரிந்தது. பிப்ரவரி 16-ல் அங்கு நடக்க இருந்த மாநாட்டிற்கு சரத் குமார் கட்சிக்காரர்கள் வைத்திருந்த பேனர்கள்.

எண்டர் ஆகும் போதே என்ன ஒரு அமர்க்களம். வியாழன் காலையிலேயே அந்த வீட்டில் ஆஜராகிட்டோம். Mr.@#$% இல்லை. ஆனால் அவரின் மனைவி எங்களுக்கு ஃபேனை போட்டுட்டு அவருக்கு ஃபோனை போட அவரிடம் பேசினேன். கீழ் வீட்டை இன்னும் காலி செய்யலை எனவே ஞாயிற்று கிழமை மதியம் 2 மணிக்கு வந்தால் சாவியை தந்து விடுவதாக கூறினார். இன்னா சார் நீங்க சொல்லி தான் இன்று வந்தோம் இப்படி எங்களை அலைய விடுறீங்களே என்று எரிச்சலுடன் சொல்லிட்டு 4 நாளும் அங்கேயே டேரா போடுவதென்று முடிவு செய்து விட்டோம்.

அப்படியே இன்னொரு ஃப்ரண்டை நடுரோட்டில்  பார்த்துட்டு சாவி ஞாயிறன்று தரலைன்னா அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று டிஸ்கஸ் செய்தோம்.

மறுநாளும் வெள்ளியன்றும் அங்கே போனோம்.வீட்டை யாரோ விலைக்கு பார்க்க வருவதாக கூறி மாடியினை திறந்து வைத்து கொண்டு இன்னும் சில ஃப்ரெண்ட்ஸ்களை கூட்டி வந்து சத்தமாக சிரித்து சிரித்து பேசிட்டு அப்புறமா காந்திநகர் போனோம். இங்கு தான் எனக்கு இந்த ஃப்ரெண்ட் அறிமுகம் ஆனவர்.இருவரும் சேர்ந்து பழைய கதைகளை பேசிக் கொண்டே 25 வருடங்கள் கழித்து அங்கேயிருந்த ஒன்றிரண்டு தெரிந்த வீட்டிற்கு விசிட் செய்தோம்.

மறுநாள் ஸ்ரீவைகுண்டம் பஸ்ஸில் போய் அங்கிருந்து ரூபாய் 500 க்கு கிடைத்த ஆட்டோவில் நவதிருப்பதிக்கும் விசிட் செய்துட்டு மதியம் சூப்பரா ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு திரும்பவும் ஃப்ரெண்டின் வீட்டிற்கு போனோம். Mr.@#$% -ன் மனைவியிடம் நாளை மதியம் கட்டாயம் வருவோம் சாவியினை கொடுத்து விடுங்கள் என்று மிரட்டலாக(???) சொல்லி விட்டு வந்தோம்.

மறுநாள் காலை “கதிர்வேலன் காதல்” பார்த்துவிட்டு லஞ்ச் சாப்பிட போனால் Mr.@#$% ஃபோன் செய்கிறார். மதியம் வர வேண்டாம். மாலை ராகு காலம் முடிஞ்சு 6 மணிக்கா வாங்கன்னு.சரியென்று ஃப்ரெண்ட் ஒருவரின் வீட்டில் மதியம் பேசிட்டே ரெஸ்ட் எடுத்துட்டு மாலை 6 மணிக்கு டாணென்று ஆஜரானோம்.

நாங்க 15,20 வருடங்களாக உங்க வீட்டிற்கு செய்த மராமத்து செலவு அது இது என்று ஒரு நீண்ட லிஸ்ட் எழுதி வைத்திருந்தார் Mr.@#$%. ஒவ்வொரு செலவுக்கும் எங்களிடம் வாடகையில் கழித்ததற்கு அவரே போட்ட 10 வருட லட்டர் எங்க கையில் இருந்தது.

இதெல்லாம் சரிப்படாதுங்க 15 வருடம் நீங்க கொடுத்த வாடகையினை இப்படி மொத்தமாக வசூலிக்கிறீங்க எங்களால் இவ்ளோ எல்லாம் கொடுக்க முடியாதுன்னு சொல்லவும்.பதிலுக்கு அவரும் எகிறினார். அப்புறம் இரு தரப்பும் சமாதானமாகி நாங்கள் சொன்ன தொகையினை அவரின் மனைவி ஏற்று கொண்டு Mr.@#$% டம் விடுங்க தானம் செய்ததாக நினைத்து கொள்ளலாம் என்று பெரிய மனதுடன்(???) சொன்னார்.

அடிங்ங்ங்ங்......யார் தானம் செய்றாங்க என்று மனதிற்குள் நினைத்து கொண்டு ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் இவ்ளோ பணம் ஒரு மாதத்திற்குள் தானமாக நாங்க தர்றோம்னு எழுதி கொடுத்துட்டு சாவியினை வாங்கி கொண்டு காத்திருந்த என் தோழரிடம் கொடுத்துட்டு 9 மணிக்கு சாப்பிடாமல் அவசர அவசரமாக சரத்க்குமார் மாநாடு முடிக்கும் முன்பு ஊரை விட்டு ஓடினா போதும் என்று சென்னை செல்லும் ஆம்னி பஸ்ஸில் சென்னைக்கு வெற்றிகரமாக வந்தோம்.

Tuesday, February 04, 2014

கைப்புள்ளயின் திநெவேலி பஞ்சாயத்து!!!


கைப்புள்ளயின் ஃப்ரெண்ட் ஒருவரின் கணவர் ஒன்றரை வருடங்கள் முன்பு வேலை பார்த்த தனியார் நிறுவனத்தில் மயக்கம் போட்டு விழுந்து பிறகு பக்கவாதம் வந்து உடனே மருத்துவம் பார்த்ததில் செயல் இழக்காமல் காப்பாற்ற பட்டு ஆனால், அந்நிறுவனம் இனிமேல் வேலைக்கு வேண்டாம் என்று கூறியதில் கிடைத்த அற்ப செட்டில்மெண்டில் வீட்டிலேயே இருக்கிறார். அவர் படித்தது ICWAI..இந்த படிப்பை முடிக்க பலர் குட்டிக்கரணம் போட்டு கொண்டு இருக்கின்றனர். இவர் இந்த படிப்பை முடித்து இப்பொழுது சும்மா இருக்கிறார்.

அவரின் தந்தை 20 வருடங்களுக்கு முன்பு தன் திநெவேலி  வீட்டை Mr. @#$% க்கு வாடகைக்கு விட்டு இருக்கிறார். அவர் கொஞ்ச நாளில் அந்த வீட்டிற்கு பின்னால் இருந்த இடத்தை விலைக்கு வாங்கி அதில் 4 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு, இவர்களின் வீட்டையும் யாருக்கோ வாடைகைக்கு 2000 முதல் 5000 வரை விட்டு போனா போகுது இதுங்க பாவம்னு 500,750 என்று கொஞ்சம் கொஞ்சமாக வாடகை கூட்டி 2013 நவம்பரில் 1100 ரூபாய் வாடகை என்று மணியார்டர் அனுப்பி வந்திருக்கிறார்.
இவர்களும் நேரில் போய் பார்க்காமல் சொற்ப வாடகையினை வாங்கி கொண்டு அடக்கமாக இருந்து கொண்டனர்.

தோழியின் கணவர் மிகுந்த பயந்த சுபாவம். அது அந்த Mr.@#$% - க்கு மிகுந்த தகிரியத்தை தர  உடல் நிலை சரியில்லாதவரை பார்க்க வந்தது போல்  சென்னை வந்து குட் இப்படியே இருந்துகோங்கோ அதை விட்டுட்டு தெற்கே தலை வச்சா தலை இருக்காது, நான் தர பணத்தை வாங்கிட்டு எனக்கே அந்த வீட்டை எழுதி கொடுங்கன்னு  பாசமாக மிரட்டி சென்று உள்ளார்.

தோழியின் குடும்பமும் அந்த பாசத்துக்கு அடிமையாகி சைலண்டாக இருந்து விட்டனர். அப்படியே பொழுதும் போச்சா கம்பெனி செட்டில்மெண்ட் பணம் காலியானவுடன்  படிக்கும் இரு குழந்தைகளை வச்சுக்கிட்டு அடுத்த மாதம் புவ்வாக்கு என்ன செய்வது என்ற கிலி வந்தவுடன் தோழிக்கு கைப்புள்ளயின் நினைவு வந்துருச்சு.

இப்படி இப்படி ஆச்சு இப்ப என்ன செய்றதுன்னு கைப்புள்ளகிட்ட சொல்ல எடுறா வண்டியை நேரா தெற்கே போய் தலையை வச்சுபுடுவோம் அந்த பாசக்கார Mr. @#$% -ஐ சந்திச்சுப்புடுவோம் என்று சென்னையிலிருந்து போன மாதம் வண்டி கிளம்பிடுச்சு. தலை தப்புச்சுன்னா வடக்கே ஓடி வந்துடுலாம்னு ஒரு நப்பாசை. கைப்புள்ள, தோழி அவரின் இரு கல்லூரி படிக்கும் குழந்தைகளுடன்(கைப்புள்ளயின் அடியாட்களே இவர்கள்!!!) திநெவேலியில் ஆஜர்.

கைப்புள்ள என்னதான் தகிரியமா இருந்தாலும் உள்ளுக்குள்ளே வெடவெடன்னு தானே இருக்கும். போய் இறங்கியதும் ஆத்தா பேராட்சி, அம்மா காந்திமதி, நடுவுல உச்சிமாளி என்று நேரில் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு கொஞ்சூண்டு தகிரியத்தை தேத்திக்கிட்டு நேரே தோழியின் அந்த அரத பழசு வீட்டிற்கு ஆஜராகியாச்சு.

போனா Mr. @#$% மனைவி மட்டுமே அவர்களின் வீட்டில் இருந்தார். தோழியின் வீடு கீழே, மேலே என்று பூட்டி இருந்தது. அந்த அம்மா  கைப்புள்ளய பார்த்த நடுக்கத்தில்(எப்பூடி) மேல் வூட்டு சாவி மட்டும் இருக்கு இந்தாங்க என்று உடனே கொடுத்து விட்டது. என்னடா இது வந்த உடனே சாவியான்னு கைப்பிள்ளக்கு செம குழப்பம். கைப்புள்ளைக்கும் வேலையில்லை கூடவே வந்த அடியாட்களும் வேலையில்லை!!!. கீழ் வூட்டு சாவியில்லை அதில் குடியிருப்பவர் வெளியூர் போயிருக்கிறார். அவர் திரும்ப வர 10 நாட்கள் ஆகும்னு அந்தம்மா சொல்லிடுச்சு. சரிங்க உங்க வீட்டுகாரரை பார்க்கணும் என்று சொன்னதும் அவர் மதியம் சாப்பிட 1 மணிக்கு வருவார் அப்ப வாங்கண்ணு சொல்லிட்டாங்க.

சரியென்று அந்த மாடியில் கொஞ்ச நேரம் தூசிகளுக்கு நடுவில் இருந்துட்டு மதியம் சாப்பிட போனா அந்த கேப்பில் Mr.@#$%  எஸ் ஆகிடுவார்ன்னு 3 மணிவரை காத்திருந்து பசியில் கைப்புள்ள க்ளூக்கோஸ் ஏத்துற நிலைமைக்கு போய் விட்டதால் ஓடி போய் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து வாசப் படியில் ஆஜராகியாச்சு.

3 மணி இப்ப 5 ஆச்சு  ஒரு உச்சா கூட போகாமல் காலை 9 மணியிலிருந்து ஐந்து மணிவரை தேவுடு காத்துட்டு அந்தம்மாக்கிட்ட கேட்டாக்கா அவரு ஒரு மீட்டிங் போயிட்டாரு.வர ராத்திரி 9ஆகும்னாங்க. அடியாத்தீ இதை முதல்லேயே சொல்லி இருந்தா பக்கத்து தியேட்டரில் வீரம் பார்த்துட்டு இன்னும் கொஞ்சம் வீரமா வந்திருப்போமேன்னு புலம்பிக்கிட்டே. சரிங்க நாளைக்கு காலையில் 8 மணிக்கு வர்றோம் Mr. @#$% எங்கேயும் போகவேணாம்னு சொல்லுங்கன்னு சொல்லிட்டு கைப்புள்ள க்ரூப் கிளம்புச்சு.

சும்மா கிளம்பலை திநெவேலியில கைப்புள்ள படிக்கும் போது கூட படித்த ஒரு தோழரிடம் விஷயம் இப்படி இப்படின்னு சொன்னதும் அந்த பாசக்கார ஃப்ரெண்ட் ஒரு பட்டாளத்துடன் அங்கே ஆஜராகி விட்டார். படியிலே உட்கார்ந்தே ஒரு அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டிவிட்டு கூட்டத்தை கலைத்து விட்டு கிளம்பியாச்சு.

மறுநாள் காலை 8 மணிக்கே அந்த வீட்டில் ஆஜர். Mr.@#$%  அவரின் மனைவியினை விட சாந்தமாக இருந்தார். இங்கே பாருங்க எனக்கு யார் வீட்டு சொத்தும் தேவையில்லை நான் நிறைய பணம் அந்த வீட்டிற்கு செலவு செய்துள்ளேன் அதை கணக்காய் எழுதி வைத்துள்ளேன். அதை செட்டில் செய்துட்டு உங்க சாவியினை வாங்கிகோங்க. கீழ் வீட்டு சாவி பிப்ரவரி 10-ல் தான் தர முடியும் அதில் நிறைய சாமன்கள் இருக்கு சாவி இப்ப என்கிட்ட இல்லை. நான் டூர் வேறு போறேன். எனவே, கீயை 10 ஆம் தேதி வந்து வாங்கிகோங்கன்னு சொல்லிட்டார்.

கைப்புள்ள+தோழிக்கு ஒன்னுமே புரியலை. இந்த அப்புராணியை நேரில் பார்க்க இம்பூட்டு பயந்தோமே இவரா சென்னை வந்து மிரட்டினதுன்னு ஒரே ஆச்சரியம். சரிங்க நாங்க 10-ஆம் தேதி வர்றோம்ன்னு சொல்லிட்டு வந்தாச்சு.

மாடி சாவியை கைப்புள்ளையின் அந்த நம்பிக்கையான ஃப்ரெண்டிடம் கொடுத்து வந்தாச்சு. அவர் விலைக்கு வேணுமான்னு அவர் ஃப்ரெண்ட் வட்டாரத்தில் பேசிட்டு இருக்கார். (சாவியை இல்லைங்க,,வீட்டை) கைப்புள்ள+குரூப் அடுத்தும் தெற்கே தலைவைக்க போகுது. திரும்பவும் மூணு கோயில்களுக்கும் விசிட் அடிக்கப்போகுது!!!. திரும்பவும் தகிரியத்துடன் Mr.@#$% -ஐ சந்திக்க போகுது!!!எதுக்கு அவ்ளோ நல்லவரா அவர் பேசினார். பதுங்கினாரா இல்லை பாயப்போறாரா என்ற ஆயிரம் கேள்விகளுடன்

கைப்புள்ள

Tuesday, January 28, 2014

பொழுது போணும்ல!!!

சீரியல் பார்த்து பார்த்து டயர்டாகி,  இந்த சீரியல்ல நேத்து இந்த பெண்  எதிர் வீட்டு மகேஷுடன் ஓடி போனாளே இப்ப எதுக்கு பக்கத்து வீட்டு சுரேஷுடன் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கான்னு குழப்பமா யோசிச்சுட்டே ரெஸ்ட் எடுக்கும் போது தான் கரெக்டா நம்ம ஃபோனுக்கு கால் வரும் இந்த நம்பருக்கு நாம மிஸ்ட் கால் கொடுக்கலையேன்னு யோசிச்சுகிட்டே ஃபோனை எடுத்தா நாங்க ரிலையன்ஸ்,ஐசிஐசி,பிபிசி,இன்னும் என்ன என்னவோ சிசியில் இருந்து பேசுறோம் மேடம்னு பேசுவாங்க.சரி பேசு நா உம் கொட்டுறேன்னு ரெண்டு ம்ம் சொல்லும் போதே நீங்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தாக்கா (அடகொக்கமக்கா இங்கே முழுநேரமும் வெட்டியாதாண்டா இருக்கோம்) நாங்க வீட்டிற்கு வந்து எங்க பாலிசி பத்தி பேசுறோம்பாங்க.

வாடி வா நீயா வந்து மாட்டுனாக்க அது உன் தலையெழுத்துன்னு நினைச்சுகிட்டே ஆனா எடுத்தவுடன் சரி வா நான் வெட்டின்னு சொன்னா மருவாதை இல்லைன்னு இல்லைப்பா நேரமே இல்லைன்னோ என்கிட்ட பணமே இல்லைன்னு கொஞ்சமா பிகு செய்தாலும் விடுவதேயில்லை. உங்க பாலிசியே எடுக்க போறதில்லைன்னாலும் மேடம் நாங்க வர்றோம். ஜஸ்ட் விளக்கம் மட்டும் கொடுக்க போறோம் எங்க டார்கெட்ட்ன்னு சொன்னதும் தினம் பொழுதே போகாம என்னடா செய்றதுன்னு இருக்குற நம்ம மேலே நாமே  பாவப்பட்டு நமக்கு ஒரு நா பொழுதும் போகுமேன்னு சரி வா ராசான்னு சொல்லிடுவதுண்டு.

வர பலியாட்டுக்கு வீட்டுக்கு வழி சொல்லி சொல்லியே எஞ்கூட்டுக்கு மெயின் ரோடிலிருந்து எத்தனை லெஃப்ட்,எத்தனை ரைட்டுன்னு மனப்பாடமாகி போச்சு.

வரும் தம்பிக்கு சில்லுன்னு ஃபேன் போட்டு அதை விட சில்லுன்னு குடிக்க தண்ணீர் கொடுத்துட்டு  நாம் பேட்டிக்கு தயாராகி உட்கார்ந்த கொஞ்ச நிமிஷத்தில் அவர்கள் வாயை திறப்பதற்குள் ஏன்ப்பா நீ என்ன படிச்சு இருக்க,எங்க வீடு, உங்க குடும்பத்தில் எத்தனை பேர்,எதுக்கு இந்த வேலைக்கு வந்த,இப்ப எங்கேயிருந்து வரன்னு சில பல முக்கியமான கேள்விகளை கேட்டதும் வந்த வேலையினை மறந்து விட்டு சொந்த கதை சோக கதைகளை கக்கிகொண்டே இருக்கும் போது இருப்பா வரேன்னு சொல்லிட்டு உள்ளே போய் போன தீவாளிக்கு செய்து இன்னும் தீராமலேயே இருக்கும் பலகாரங்களை ஒரு தட்டில் வச்சு சாப்பிட்டுடே பேசுப்பா என்னும்  போது சில பேர் நமக்கு தெரியாம கண்ணீரை தொடச்சுக்கிட்டே தொடருவாங்க ஓ நீ திநெவேலி தானா சரி சரி மேலமாடவீதியா இல்லை தெக்குப்பு தெருவான்னு கேட்டா தூத்துக்குடிக்கு பக்கத்திலோ, திருச்செந்தூர் பக்கத்திலோ கேள்வியே படாத ஒரு ஊரு பேரை சொல்லுங்க. நமக்கு ஊரா முக்கியம் சரிப்பான்னு இன்னொரு முறை நாம் எழுந்திருக்கும் முன்னாடி வரேன்க்கா என்று ஹெல்மெட்டை கையில் எடுக்குங்க
( அக்காவா??நுழையும் போது மேடமா இருந்த நான் இப்ப அக்கா!!!). அடுத்தவாட்டி இன்னொரு முறை வந்து எங்க பாலிசி பத்தி விளக்குறேன் எங்க ஆஃபிசிலிருந்து உங்களுக்கு கால் வந்தா ஆமா இப்படி நான் வந்து போனேன்ன்னு மட்டும் சொல்லுங்கக்கா என்று சில பேர் ஓடி போவதுண்டு. சில பேர் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன் என்கிற மாதிரி நான் போட்டு தரும்  ஒரு மொக்க டீ குடிச்சுட்டு பாலிசிய பத்தி பேசி நம்மள பலியாடாக்குவாங்க. சரிப்பா வீட்டில கலந்து பேசி (சும்மா) நாளைக்கு நீ கால் செய்யும் போது சொல்றேன்னு சொல்லி எஸ் ஆவதுண்டு.

 எது எப்படி என்றாலும் வாப்பா மொக்க மகாராசா நானே பொழுதே போகாமல்தான் உட்கார்ந்துட்டு இருக்கேன்.
வேணாம்னு சொன்னாலும் கேட்காம இந்த அக்காவ பார்க்க பெட்ரோல் விக்கிற விலையில எம்பூட்டு தூரத்தில இருந்து  பார்க்க வர உன்னை எப்படி வேணாம்னு சொல்றது.

இருங்க ஏதோ ஒரு கால் வருது.அட்டெண்ட் செய்துட்டு வரேன்....வரட்டாஆஆஆஆஆ......


Monday, January 13, 2014

2014 - புத்தகக் கண்காட்சி

ஒன்றுக்கும் உதவாதவன் படித்ததில் இருந்து அ.முத்துலிங்கம்  புத்தகங்கள் வாங்க வேண்டும் என்று மட்டும் முடிவு செய்திருந்தேன். மற்ற படி எந்த ஐடியாவும் இல்லை. நான், தங்கை குமுதா,தம்பி மது,மகன் ரிஷி மற்றும் என் கணவர் கிருஷ்ணா மிஸ்டர் முத்துலிங்கத்தை தேடி தேடி கடைசியில் காலச்சுவடு பதிப்பகத்தில் இந்த மூன்று புத்தகங்களும் வாங்கினோம்.

புதுமைப்பித்தன் அவ்ளோவா படிச்சதில்லை. இந்த புத்தகத்தில் 103 சிறுகதைகள் இருக்கு.விலை 315ரூபாய்.
எப்பவும் வா.மணிகண்டனின் நிசப்தம் படிக்க பிடிக்கும். எனவே அவருடைய சிறுகதைகள் லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் வாங்கியாச்சு.
ஆறாம் திணை விகடனில் வந்த தொடர். இதை படிச்சா மட்டும் போதாது. ஏதேனும் இரண்டு விஷயங்களை இந்த ஆறாம் திணையில் சொல்லியிருக்கும் படி தொடர வேண்டும்.  நம் பாரம்பரிய உணவை பற்றிய இந்த புத்தகம் எழுதியவர் சித்த மருத்துவர் சிவராமன். பாவண்ணன், நாஞ்சில் நாடன் புத்தகங்கள் மற்ற இரண்டும்.
கீழே இருப்பவை  வழக்கம் போல் என் வூட்டுக்காரர் கிருஷ்ணமூர்த்தி வாங்கியது.  எப்பவாச்சும் தூக்கம் வரலைன்னா நான் வூட்டுக்காரர் வாங்கி அடுக்கி வைத்திருக்கும் இங்கிலிபிஷ் புத்தகத்தை எடுத்து ஒரு பக்கம் வாசிக்க ஆரம்பிப்பேன் ஆஹா என்ன ஒரு அருமையான தூக்கம் வரும் தெரியுமா!!!!இரண்டாவது பக்கம் புரட்ட கூட முடியாது அதுக்குள்ளே இரண்டாம் உலகத்திற்கு போயிடுவேன். இந்த வருஷமாவது அட்லீஸ்ட் ஒரு புக்காவது பகலில் உட்கார்ந்து கொண்டே படித்து முடிக்க வேண்டும்.

இவை தவிர மாயவலை,இன்னும்  மூன்று பாவண்ணன் புத்தகங்கள் என் தம்பி வாங்கி இருக்கிறார். ஒரு மூன்று மாதத்திற்கு பொழுது போகும்.

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு போனோம். சின்னத்திரை நடிகையும் பாடகியுமான அனுராதா கிருஷ்ணமூர்த்தி என்பவரை பார்த்தோம். டிவியில் வருவதை விட மிக இளமையாக இருந்தார். சிவாஜி சார் மகன் ராம்குமாரையும் பார்த்தோம். நேரில் அவ்ளோவா குண்டாக இல்லை.
அகநாழிகை ஸ்டாலில் மணிஜியை பார்த்தேன்.பேசினேன். இன்னும் சிலரை பார்த்த மாதிரி இருந்துச்சு.ஆனால் பேசலை.

ஒரு மிகப்பெரிய கலரிங் புக் என் தம்பியின் மகனுக்கு வாங்கினேன். விலை 50 ரூபாய் மட்டுமே. சின்னவன் சித்தார்த் அத்தை இதுக்கு கலர் போட்டா என் கையே வலிச்சுடும்னு சொல்லிட்டான். பெரிசு விஷால் கலர் போட ஆரம்பிச்சு இருக்கு. இனிமேல் என்கிட்ட கலரிங் புக் கேக்கவே மாட்டார்கள் என நினைக்கிறேன்.