Tuesday, September 10, 2013

குறை ஒன்றும் இல்லை லட்சுமி அம்மா எங்கே இருக்கீங்க???


பதிவுலகில் நிறைய பயணத்தொடர் எழுதி கொண்டிருந்த http://echumi.blogspot.in/
லட்சுமி அம்மாவை (குறை ஒன்றும் இல்லை) கடந்த 9 மாதங்களாக பதிவுலகம் பக்கம் காணவில்லை.தனது சிங்கப்பூர் தொடரை போனவருடம் டிசம்பர் 31-ல் முடித்துள்ளார். பிறகு பதிவு எதுவும் எழுதவில்லை. தனது டிசம்பர் 31 பதிவில் பிப்ரவரி மாதம் பின்னூட்டத்திற்கு பதில் போட்டு இருக்கிறார். அதன்பிறகு அவர் யாருக்கும் பின்னூட்டம் போட்டாரா என்றும் தெரியவில்லை. அம்மா நன்கு உடல் நலத்துடன் இருப்பார் என்றே நினைக்கிறேன். 

Wednesday, September 04, 2013

தங்கமீன்கள்+தகர சுறாக்கள் இடையில் ஆசிரியர்கள்

அப்பா மகள் கதை என்பதை விட இன்றைய தனியார் பள்ளிகளின் நிலைமையை தன் தங்கமீன்கள் படத்தில் ராம் முக்கிய பிரச்சனையாக காண்பித்து இருக்கிறார்.படத்தில் கடைசியில் குறைந்த சம்பளத்திற்கு நன்கு உழைத்து கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு நன்றி என்று போடும் கார்டோடு படம் முடிகிறது.தனியார் பள்ளியில் அதிக வேலைப்பளுவில் மிக குறைந்த சம்பளத்தில் வேலை பார்க்கும்,பார்த்த அத்தனை ஆசிரியர்களும் ம் என்று ஒரு பெருமூச்சு விட்டு கொள்ளலாம்.


தனியார் பள்ளியில் பணிபுரிந்த போது ஏன் தான் இந்த பெற்றோர் இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த பள்ளிகளை நம்பி ஏமாந்து போறாங்களோ என்று தோன்றும். கம்பியூட்டரே காண்பிக்காமல் கம்பியூட்டர் ஃபீஸ் வாங்குவார்கள். ஒழுங்காய் கற்பிக்கும் ஆசிரியர்களை ஓவர்லோட் ஏற்றி அவர்களின் வேலையில் ஒரு சலிப்பினை ஏற்படுத்தி விடுவார்கள்.30 பேர் இருக்கும் இடத்தில் 45,50 என குழந்தைகளுக்கு கற்பிக்கும் நிலைமை அதுவும் சில நிமிடங்கள் ப்ரேக் இல்லாமல்.

சில பள்ளிகளில் சேரில் ஆசிரியர் க்ளாசில் உட்காரவே கூடாது, ஒரு ஆசிரியர் கூட இன்னொரு ஆசிரியர் பேச கூடாது.கட்டாயம் கொண்டை போட வேண்டும்.அதனால் தலை வலி வந்து நாள் முழுவதும் அந்த தலை வலியோடே இருக்க வேண்டியது இருக்கும். ஸ்கூலில் டூர் என்று அழைத்து போவார்கள் அதற்கு கட்டாயம் அவர்கள் சொல்லும் ஆசிரியர்கள் போக வேண்டும்.அதற்கு பணமும் தர வேண்டும். எட்டாம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவர்களை வெளியில் பார்த்தால் பெண் ஆசிரியைகள் அவர்களுடன் பேச கூடாது.

படத்தில் செல்லம்மா விரும்பும் கனவுப்பள்ளியை எந்த கல்யாணியாவது தொடங்க மாட்டாரா என்று தான் அனைவரும் ஏங்கி கொண்டிருக்கிறார்கள்.

அய்யோ இப்போ நினைத்தாலும் ஸ்கூல் போக பயப்படும் வெறுக்கும் குழந்தைகள் போலவே எனக்கும் இந்த தனியார் பள்ளிகளுக்கு வேலைக்கு போக வெறுப்பு தான் வருகிறது.

கணவரின் சம்பளம் குறைவாக இருப்பதாலோ இன்னும் பிற பொருளாதார சூழல் காரணமாகவோ தான் நிறைய ஆசிரியர்கள் நொந்து வெந்து போய் இந்த தனியார் பள்ளிகளில் வேலை பார்த்து  கொண்டிருக்கிறார்கள். இவ்ளோ ஃபீஸ் தனியார் பள்ளிகள் வசூலிக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்யும் அரசு இவ்ளோ சம்பளம் கட்டாயம் ஆசிரியர்களுக்கு கொடுக்க வேண்டும் என்றும் நிர்ணயம் செய்ய வேண்டும்.

வேளச்சேரி, அடையாறு போன்ற இடங்களில் ஒரு வீட்டிற்கு சமையல் வேலைக்கு வெறும் இரண்டு மணிநேரம் போகும் ஒரு சமையல்காரரை விட M.A.,Msc,M.Phil என படித்து விட்டு எட்டு மணிநேரத்திற்கும் அதிக நேரம் வேலை பார்க்கும் ஒரு ஆசிரியர் சம்பளம் குறைவு.


Tuesday, September 03, 2013

தங்க மீன்கள் - சூப்பர் ராம்

ஏதோ பேச முற்படும் மனைவி ஆனால் பேச விடாது மெளனத்தை ராத்திரி இருட்டை கிழித்து கொண்டு ஓடும் ட்ரையினின் அதிக ஓசை.அப்பா நான் வயசுக்கு வந்தா தப்பாப்பா என்று கேட்கும் குழந்தை,தாத்தா இந்த Bag ரொம்ப வெயிட்டா இருக்கு இதை காரில் கொண்டு போ என்று சொல்லிவிட்டு அப்பாவுடன் சைக்கிளில் போகும் செல்லம்மா,குழந்தைக்கு மட்டும் தான் கால் அமுக்கி விடுவீங்களா என்று கேட்கும் மனைவி,நான் வரமாட்டேன் என்று சொன்னேனா நீங்க கூப்பிட்டதும் வந்தேனே என்று ஃபோனில் அழுகையுடன் சொல்லும் மனைவி,கூட படிக்கும் பெண் தனக்கு பொம்மை தரவில்லை என்று வரப்போகும் நாய் பற்றி க்ளாசில் கதை விடும் செல்லம்மா,அந்த நாய் அவசியமா என்ற நம் கேள்விக்கு ராமின் தங்கையிடம் பேசுவதன் மூலம் பதிலும் சொல்லுகிறார்.அந்த நாய் இவ்ளோ விலைன்னு எனக்கே நாலு நாளைக்கு முன் தான் தெரியும் என்று கூறும் போதும்....ராம் சூப்பர் ராம்...

பூரி அடடா அந்த பூரியின் ரசிகையான அந்த குட்டி பெண்ணும் கலக்குது. எவிட்டா மிஸ் போல எல்லோருக்கும் கிடைக்க ஆசை வருது. சடங்கு வீட்டில் அம்மா இழுத்து செல்லும் போது அந்த கேசரியை வாயில் வைத்து கொண்டு போவது வாசலில் இருக்கும் ஜிகினா பேப்பரை கையோடு உருவி கொண்டு போவது அது ஜன்னலில் மாட்டி வைத்திருப்பது,ஏன்மா ஸ்கூல்ல அடுத்தவர்கள் சாமான்களை எடுத்த என்ற போது மிக பெருமையாய் தான் எடுத்த ஒவ்வொரு பொருளாய் ஜன்னலுக்கு வெளியில் காண்பிப்பது..ராம் சூப்பர் ராம்..

ஆனந்த யாழை மீட்டுகிறாய்..என்ன ஒரு வாய்ஸ்
சூப்பர் லொகேஷன்ஸ்..ஒரு ஹார்ட் ஷேப் குட்டி குளம்(வயநாடு) மலைஜாதியினரை தேடி போகும் போது வருதே அந்த குளம் தான். ஆனந்த யாழ் பாடல் அச்சன் கோயிலாம். படத்தில் வரும் இடங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு.ராம் சூப்பர் ராம்.

முதலில் அந்த குழந்தை ஓவர் ஆக்ட் செய்யுற மாதிரி தோணுது.ஆனா போக போக இயல்பாக உள்ளது. ராம் அடிக்கடி அழுதிருக்க வேண்டாம். எவிட்டா மிஸ் வரும் காட்சிகளை இன்னும் நிறைய வைத்திருக்கலாம். அந்த மோசமான மிஸ்ஸிற்கு நிறைய காட்சிகள் அப்ப தான் அந்த குழந்தை ஏன் அந்த பள்ளியை வெறுக்கிறது என்று நாம் உணருவோம் என்று இருக்கும் போல.பத்து பதினைந்து வருடமாய் ஜெயித்து விடவேண்டும் என்று இந்த சினிமா உலகில் போராடி வரும் ராமிற்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.எனவே தான் காட்சி அமைப்புகள் சூப்பரா இருக்கு.கரெக்டா ராம்.

                                     குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.என்ன இந்த
             நாய் கேட்டு நம் குழந்தைகளும் நம்மை படுத்த சான்ஸ் உள்ளது. ஏன்னா என்னுடைய 20 வயசு குழந்தை ஒரு வருடமாக என்னை படுத்தி கொண்டிருக்கிறான் இந்த நாயை கேட்டு!!!!

Monday, September 02, 2013

சுட சுட பதிவர் சந்திப்பு


ஞாயிறு காலை பல்லாவரத்தில் கிரஹப்பிரவேசம் நடந்த வீட்டிற்கு போய் விட்டு அப்படியே பதிவர் சந்திப்பில் கலந்து கொள்வதாக ப்ளான் செய்து இருந்தேன். அதன் படி கிரஹப்பிரவேச வீட்டிற்கு காலை 7.30 மணிக்கு போனால் அங்கு சாப்பாடு ஆர்டர் செய்த இடத்திலிருந்து சாப்பாடு வர மிக லேட்டானதால் அங்கேயே ஒரு மணிநேரத்திற்கும் அதிகமாக வெயிட் செய்து சாப்பிட்டு வர வேண்டியதாகி விட்டது. அப்புறம் என் சின்ன மகன் ரிஷியை கெஞ்சி அவனே காரில் கொண்டு வந்து என்னை வடபழனியில் விட்டு சென்றான்.

நான் சென்ற போது பதிவர்கள் அறிமுகம் மேடையில் நடந்து கொண்டிருந்தது. உள்ளே நுழையும் போதே தெரிந்த முகங்கள் எதுவும் இல்லை. சரி இனிமேல் எல்லோரையும் தெரிந்து கொள்ளலாம் என்று தென்றல் சசிகலா பக்கத்தில் உட்கார்ந்து கொண்டேன். சிறிது நேரத்தில் என் பெயரையும் மேடையில் அழைத்தார்கள்.மேடையில் அமர்ந்து இருந்த கேபிள் சங்கரிடம் கொஞ்ச நேரம் பேசிவிட்டு மைக்கில் என் பெயர் மற்றும் என் வலைபதிவை பற்றி சொல்லிட்டு மேடையை விட்டு இறங்கினேன். இறங்கி வரும் போது மோகன் குமார் சார் வந்து பேசினார்.அப்படியே திண்டுக்கல் தனபாலனை பார்த்து என் கணவரின் ஊரும் திண்டுக்கல் தான் நீங்கல் திண்டுக்கல்லில் எங்கே இருக்கீங்க என்று கேட்டு விட்டு அப்படியே கோவைடூடில்லி ஆதி லெஷ்மியிடம் என்னை அறிமுகப்படுத்தி கொண்டு அங்கேயே அமர்ந்தேன். அவரின் கணவர் வெங்கட் நாகராஜ் சாரிடமும் பேசினேன். பக்கத்தில் இருந்த திருமதி ரேவதி சதிஷ் நானும் திருநெல்வேலி தான் என்று பேசினார்.அவரின் கணவர் சதிஷ் பதிவர் என்றும் அறிமுகப்படுத்தினார்.

பதிவர் ராஜியிடமும் பேசினேன். அவரிடம் பேசி கொண்டு இருக்கும் போதே செமையா தண்ணீர் தாகம் தண்ணீர் குடிக்க போனால் சங்கவி அங்கே நின்று கொண்டிருந்தார். அவர் தண்ணீர்  பிடித்து கொடுக்க அதை குடித்து விட்டு அப்படியே ஆரூர் மூனா செந்திலிடம் , கடல் பயணங்கள் சுரேஷ் குமாரிடம் நானே போய் பேசி விட்டு வந்து அமர்ந்தேன். கொஞ்ச நேரத்தில் வால்பையன் அருண்,மற்றும் மயிலனிடம் பேசி கொண்டிருந்தேன். வேர்த்து வேர்த்து அங்கே அதிக வேலை பார்த்து கொண்டிருந்த மாதிரி டயர்ட் ஆகி விட்டது. நிஜமா வேலை பார்த்து கொண்டிருந்த குழுவினர் டரியலாகி இருப்பாங்க. அப்படி ஒரு வேர்வை எல்லோருக்கும். அப்படியே அவனில் உள்ளே இருப்பது போல் ஒரு நிலைமை.

சுரேகா அருமையாக தொகுத்து வழங்கினார்.
பாமரனின் பேச்சு நன்றாக இருந்தது. மயிலனின் கவிதை முழுவதும் கேட்கவில்லை. சவுண்ட் எக்கோ அடித்ததால் யாருடைய பேச்சையும் கோர்வையாக கேட்க முடியாமல் போயிற்று.

மதியம் சாப்பிட வெளியில் சென்றால் சென்னையில் நேற்று தான் அதிக பட்ச வெயிலோ என்னவோ. எப்படா உள்ளே வருவோம் என்ற நிலைமையில் சாப்பிட்டு விட்டு உள்ளே ஓடோடி வந்தோம்.

ரஞ்ஜனி அம்மா வந்து என்னருகில் அமர்ந்தார்கள். அரசனிடம் ஒரு சிறிய தொகையினை நான்,மயிலன்,ரஞ்ஜனி அம்மா கொடுத்தோம்.திருப்பூர் ஜோதிஜி வந்து அருகில் அமர்ந்து கொஞ்ச நேரம் பேசி சென்றார். ஜாக்கி சேகர்,மணிஜி,அகநாழிகை பொன்வாசுதேவன் இவர்களுடன் சிறிது நேரம் பேசிகொண்டு இருந்து விட்டு அரங்கை விட்டு வெளியே வந்து 100 அடி ரோடிற்கு வந்து பல்லாவரம் பஸ் பிடித்து வீட்டிற்கு வந்தேன்.

பெண் பதிவர்கள் 15லிருந்து 20 வரை வந்திருப்பார்கள் என நினைக்கிறேன்.

இனிமேல் சென்னையில் டிசம்பர் டூ பிப்ரவரி பதிவர் சந்திப்பு வைக்கலாம் என்பது என்னுடைய யோசனை. அந்த மூன்று மாதங்கள் தான் இப்படி அனலாய் சென்னை கொதிக்காது. மழையும் இருக்காது. சென்னைவாசிகளான எங்களுக்கே அந்த உஷ்ணம் மிக பாதிப்பை கொடுத்தது, கண்கள் எல்லாம் எரிந்தது என்றால் கோவை, பெங்களூர்வாசிகள் ரொம்ப கஷ்டப்பட்டிருப்பார்கள்.

பதிவர்கள் வருடம் ஒரு முறை ஒரு நல்ல தொகையினை கொடுத்து ஐ.டிக்காரகள் நடத்தும் கெட்-டு-கெதர் மாதிரி ஈ.சி.ஆரில் ஏதாவது ஒரு ரிசார்ட்டில் ஏசி ஹாலில் நடத்தினால் வியர்வை மழையில் இருந்து எல்லோரும் தப்பிக்கலாம் இன்னும் மகிழ்ச்சியாகவும் இருக்கலாம். அங்கே ஒரு நாள் சாப்பாடிற்கும் ஆர்டர் கொடுத்து வெளியூர் பதிவர்களை தங்க வைக்கவும் ரூம்கள் எடுக்கலாம்.சென்னைவாசிகளுக்கு பதிவர் சந்திப்பு எங்கே நடந்தாலும் ஒன்று தான்.எப்படியும் அவர்வர் வீட்டிலிருந்து வரப்போகிறார்கள். கொஞ்சம் அலைந்தால் நல்ல டீலிற்கு நிறைய ரிசார்ட்க்காரர்கள் நம்மிடம் இருக்கும் தொகைக்கு உட்பட்டு ஒத்து வருவார்கள்.இது கட்டாயம் இல்லை. வியர்த்த வியர்வையில் நேற்று உதித்த யோசனை இது.