Saturday, January 30, 2010

பள்ளிகளுக்கு ஒரு வேண்டுகோள்!!!!

மும்பை ரயில் : உலகிலேயே அதிக பணியாளர்களை கொண்டது இந்திய ரயில்வே துறை. 1.4 மில்லிய்னுக்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். 7000க்கும் அதிகமான ரயில்வே ஸ்டேஷன்கள் இந்தியாவில் உள்ளன.
மும்பை ரயில்வே 6.9 மில்லியன் பயணிகள் தினமும் பயணிக்க உதவுகிறது. இந்தியாவில் முதன் முதலில் 1983-ல் மும்பையிலிருந்து 34 கி.மீ தூரம் உள்ள தானே என்ற இடத்திற்க்கு தான் ரயில் விடப்பட்டது. நம் சென்னையை விட மிக அதிகமான நபர்கள் ரயில்வே லைனை சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறார்கள்.30 வருடங்களாக டிரைவராக பணியாற்றும் ஒருவர் இதுவரை 75 பேர் தான் பணியிலிருக்கும் போது டிரைனில் அடிப்பட்டு இறந்தாக கூறினார். ட்ராக்கின் நடுவே இறந்தவர் உடல் இருக்ககூடாது எனவே கீழே இறங்கி கார்டுடன் சேர்ந்து உடலை தூக்கி லைன் பக்கதில் வைத்து விட்டு பின் வண்டியை எடுப்போம் என்று கூறினார்.

ஒவ்வொரு வருடமும் 5,000-க்கும் அதிகமான பேர் இங்கு ரயில் விபத்தால் இறக்கிறார்கள். போரினால் கூட இவ்வளவு நபர்கள் இறப்பதில்லை. உலகிலேயே ரயில்வே லைன் அருகில் வசித்து வரும் மக்கள் தொகையும் இங்கு தான் அதிகம். விக்டோரியா டெர்மினஸ் தற்போது சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் (CST) என்று அழைக்கப் படுகிறது.

இவை அனைத்தும் டிஸ்கவரி சேனலில் மும்பை ரயில் என்ற நிகழ்ச்சியில் காண்பிக்கப் பட்டது. ரயில்வேயில் துணி வியாபாரம் செய்யும் ஒரு பெண்மணி தனக்கு இந்த ரயில் தான் பெற்றவர்கள் போல என்று கூறினார். ரயில்வே போலீஸிடம் அடிக்கடி மாட்டி ஃபைன் கட்டினாலும் இந்த தொழிலை தன்னால் விட முடியாது என்றும் கூறினார்.

இரண்டு மணிநேரம் காண்பிக்க பட்ட இந்த நிகழ்ச்சியை பள்ளிகளில் மாணவ்ர்களுக்கு காண்பித்தால் நன்றாக இருக்கும். ஒரு அறையும் அதில் ஒரு டி.வியும் வைத்து இருக்கும் ஒவ்வொரு பள்ளியும் வாரத்தில் ஒரு நாள் ஒரு மணிநேரம் டி.வி காண்பிக்க வேண்டும் என்றாலும் அந்த நேரத்திலும் படிப்பு, படிப்பு என்று தான் நேரத்தினை செலவு செய்கிறார்கள். மாணவர்கள் மிக விரும்பும் நல்ல நிகழ்ச்சிகள் டிஸ்கவரி சேனலில் அதிகம் காண்பிக்கிறார்கள். பள்ளிகள் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை காண்பிக்க ஏற்பாடு செய்யுமா?? நிறைய பள்ளிகள் பின்பற்றுவதில்லை. குழுவாக அமர்ந்து இது மாதிரி நிகழ்ச்சிகளை காணும் போது குழந்தைகளும் தங்கள் வீடுகளில் இது மாதிரியான நிகழ்ச்சிகளை பார்க்க ஆரம்பிப்பார்கள். வீணா போன சீரியல்களில் இருந்து தப்பிப்பார்கள்.

Tuesday, January 12, 2010

சென்னை சங்கமமும் பிரியாணியும்

நான்காம் வருடமும் சென்னை சங்கமம் சென்னையில் நேற்றிலிருந்து களை கட்டுகிறது. சாப்பாடு ராமன்கள் நிறைந்த நாடு இது. சாப்பாட்டு ராம்ன்களும், ராமிகளும்(இல்லைனா சீதைகளும் வைச்சுக்கலாமா) இருக்கும் போது எங்களை மாதிரி ஹோட்டல்கள் வைத்து இருப்பவர்களுக்கு ஒரு மேடையாகிறது இந்த சங்கமம். போன வருடத்தினை விட இந்த வருடம் ஸ்டால்களுக்கு இரண்டு மடங்கு அதிக வாடகை.

லாபம் இருக்கிறதோ இல்லையோ ஒரு விளம்பரம் கிடைக்கும் என்று இந்த முறை சென்னை மெரைன் டிரைவில் லேடி வெலிங்கடன் பள்ளி, அண்ணாநகரில் போகன்வில்லா பூங்கா, தி.நகர் வெங்கட நாராயணா ரோட், பெசண்ட் நகர் எலியட்ஸ் பீச்சில் எங்களின் திண்டுக்கல் பங்காரு பிரியாணி ஸ்டால்கள் 11-16 வரை நடக்க இருக்கிறது. சென்னை பதிவர்கள் வருகை புரிந்து உங்கள் ஆதரவையும், கருத்துக்களையும் தாருங்கள். நான் லேடி வெலிங்க்டன் பள்ளி வளாகத்தில் (மெரீனா பீச்சில் விவேகானந்தர் இல்லம் அருகில்) ஸ்டாலில் தினமும் இருப்பேன். புத்தக திருவிழாவில் அனைத்து பதிவர்களும் சந்தித்துக் கொண்ட மாதிரி சங்கமத்தில் திண்டுக்கல் பங்காருக்கு அனைவரும் வருகை தாருங்கள்.
தொடர்பு எண்: 9884068918