Monday, April 25, 2011

பாருங் ”கோ” நான் பார்த்துட்டேன்

குட் ஃப்ரைடே அன்று காலையில் நகுல் மாயாஜாலில் மாலை காட்சிக்கு டிக்கெட் இருக்கு புக் செய்யட்டுமா யார் வரீங்க என்று கேட்டதும் நான் வரேன்,நான் வரேன் என்று 5 பேர் சேர்ந்து போனோம்.படம் வந்த முதல் நாளே எந்த விமர்சனமும் படிக்காமல் பார்த்ததால் படம் பார்க்க நல்லாயிருந்தது.

டைட்டிலில் வரும் ஃபோட்டாக்கள் அருமை.ராதா,அம்பிகாவிற்கு இடையில் இன்னொரு சகோதரி மல்லிகா என்று உண்டு அந்த பெண் தன் முகத்தினை எந்த பத்திரிக்கையிலும் காண்பித்தது இல்லை. கார்த்திகா அந்த பெரியம்மா போல் இருக்கிறார் போலும்.ராதா மாதிரி இல்லை.

டைரக்டருக்கு அழகான ஆண்கள் மேல் ஏதோ கோபம் போல் இருக்கிறது. கனாகண்டேன் பிரிதிவிராஜ் போல் இதில் அஜ்மல்.அஜ்மல் அசத்தி இருக்கிறார். என்னமோ ஏதோ பாட்டை இன்னும் நல்லா எடுத்து இருக்கலாம்.இந்த பாட்டில் வரும் குவியமில்லா,காட்சிப்பேழை என்றால் என்ன என்று என் அருமை புத்திரர்களுக்கு விளக்கினேன்.

ஸ்டேஜில் வெடி வெடிக்கும் போதே என் கணவர் யார் வில்லன் என்று சொல்லி விட்டார்.நான் நம்பவில்லை.ரிஷியோ அந்த ஸ்டேஜ் தன் காலேஜில்(SRM)போடப்பட்டதாய் சொல்லி பெருமைப் பட்டான்.

ப்யா சுறுசுறுன்னு இருக்காங்க.கார்த்திகா முழி முழின்னு முழிக்காங்க.

ஈ பார்த்துட்டு ஜீவா பிடித்து போச்சு.இதிலும் ஏமாற்றவில்லை.ப்யா ஜீவா நட்பு இந்த காலத்திய நட்பு.பிரகாஷ் ராஜ் கொஞ்ச நேரமே வந்தாலும் நச்.காரில் கார்த்திகா இண்டர்வியூ செய்யும் காட்சியில் நடக்கிறேன்,நடக்கிறேன், நான் நடந்தா என்னா ஆகும் என்று பார்க்கிறீயா என்று அழுத்தி சொல்வது அவருடைய ஸ்டைல்.

கடைசி சண்டை காட்சியினை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.சண்டை முடிந்ததும் தீபாவளி கொண்டாடி முடிச்ச மாதிரி இருந்தது அவ்வளவு டமால்,டுமீல்.காலேஜ் பாட்டு,முதல் கெட்-டு-கெதர் பாட்டு,வெண்பனி பாட்டை தவிர்த்து இருந்தால் படத்தின் நீளமும் கம்மியாகி இருக்கும்.அமளி துமளி பாட்டினை எடுத்தவிதம் மிக அருமை.மலை விளிம்பிலேயே ஜீவா,கார்த்திகாவினை நிறுத்தி எடுத்து இருக்கிறார்கள்.ஆடும் போது கீழே விழுந்து விடுவார்களோ என்று பக் பக்கென்று இருந்தது.லொகேஷன் நார்வேயாம். வெண்பனி பாட்டு சைனாவாம்.

படம் ஆரம்பம் முதல் கடைசி வரை போர் இல்லை.ஸோ, எல்லோரும் பாருங்”கோ”.


Sunday, April 10, 2011

ஒரு விஜயகாந்த் கணக்கு

தமிழ்நாட்டில் இருக்கிற மொத்தம் 234 தொகுதியில போட்டியிடுற வேட்பாளர்களின் எண்ணிக்கை மொத்தம் 724 பேர்களாம்.



அதுல கிரிமினல் கேஸ் பதிவானர்கள் 140 பேர்..அம்மா,அய்யா,கேப்டன் இவர்களையும் சேர்த்து.

அதுல கொலை செய்ய முயற்சித்தவர்கள் என்று கேஸ் இருப்பவர்கள் 25 பேர்..

அதுல 5ஆப்பு வரை படித்தவர்கள் 50 பேர்கள்

அதுல 8 ஆப்பு வரை படித்தவர்கள் 150 பேர்கள்

அதுல 10ஆப்பு வரை படித்தவர்கள் 200 பேர்கள்

டிகிரி வரை படித்தவர்கள் 250 பேர்கள்

முதுகலை படித்தவர்கள் 50 பேர்கள்

வக்கீல்,டாக்டர் மீதம் உள்ளவர்கள்.

பெண் வேட்பாளர்களில் கிரிமினல் கேஸ் இருப்பவர்கள் 4 பேர்

இவர்களில் யாரை தேர்ந்தெடுப்பது?

இப்ப மதுரை மேற்கு எடுத்துகிட்டீங்கன்னா போட்டியிடும் மூவருமே கிரிமினல் கேஸ் பதிவானவர்கள். அதில் இருவர் 10-ஆவதும் ஒருவர் டிகிரியும் படித்து உள்ளனர். அதில் கொலை முயற்சி வழக்கு யார் பேரில் இல்லையோ அவரை தேர்ந்தெடுக்கலாம்.ஆனால்,டிகிரி முடித்தவர் பேரில் கொலைமுயற்சி வழக்கு உள்ளது.எனவே 10 ஆப்பு படித்தவர் தான் ஜெயிப்பாரோ.

அதுவே மதுரவாயல் தொகுதியினை எடுத்துக் கொண்டால் போட்டியிடும் மூவரில் இருவர் செக்‌ஷன் 302(மர்டர் கேஸ்), ஒருவர் செக்‌ஷன் 307 கொலை முயற்சி வழக்கும் பதிவாகி உள்ளது. மர்டரை விட அட்டம்ட் மர்டர் பரவாயில்லை என்பதால் செக்‌ஷன் 307 பதிவாகி உள்ளவருக்கு ஓட்டு போடலாமோ.

அதுவே நாகப்பட்டிணம் தொகுதியினை எடுத்துக் கொண்டால் ஒருவர் அட்மட் மர்டர்,மர்டர் அது இது என்று 10 கிரிமினல் கேஸ்களில் சிக்கி உள்ளார். நல்லவேளை அவர் 10 ஆவது தான் படித்து உள்ளார். எனவே 10 கேஸ்கள் மட்டுமே.இன்னும் படித்து இருந்தால்??

ஆகா, தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் பெரிய கட்சியினை சேர்ந்த மூவருமே கிரிமினல் வழக்குகளில் சிக்கவில்லை. இப்படி மூவருமே நல்லவங்கன்னாலும் குழப்பம் தான்.அதனால்,ரோடு போட்டது யாரு?அந்த ரோடை பாழாக்கியது யாருன்னு தேடணும்.

வேலூர் பரமாத்தி தொகுதியில் போட்டியிடும் ஒருவரின் மேல் 36 கிரிமினல் கேஸ்கள்.மனிதர் எம்.ஏ.பொலிட்டிகல் சயின்ஸ். அடகொக்கமக்கா!!!

அம்மா மேல் 10 கேஸ்கள்.படித்தது 10ஆப்பு.

அய்யா மேல் 1 கேஸ்-எதிர்த்து போட்டியிடுபவர்கள் மேல் ஒரு கேஸும் இல்லை.அய்யாவும் 10 ஆப்பு பாஸ்

கேப்டன் மேல் 1 கேஸ்.இவரும் 10 ஆப்பு பாஸ்

ஸ்டாலின் மேல் நோ கேஸ்-டிகிரி ஹோல்டர்.

இப்படியே பார்த்தோமானால் யாருக்கு ஓட்டு போடறதுன்னே தெரியலை. முதல் முறையாக ஓட்டு போடப்போகும் என் மகன் என்னை கேட்கிறான் யாருக்கும்மா ஓட்டு போடறதுன்னு? ஏண்டா இப்படி ஒரு கேள்வி என்னை பார்த்து கேட்ட?இதற்கு பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம்டா.எக்ஸாம்னா சாய்ஸில் இந்த கேள்வியினை விட்டுடலாம்.

இந்த கணக்கெல்லாம் தோராயமாக எடுக்க உதவிய தளம் இதோ http://myneta.info/tamilnadu2011




Monday, April 04, 2011

அசத்தும் அஞ்சறைப் பெட்டி-9

அஞ்சறைப் பெட்டி பொதுவா நம் வீட்டு சமையலறையில் ஒன்றே ஒன்று இருக்கும்.

படம் பதிவர் சங்கவியிடம் சுட்டது!!

மஸ்கட்டில் இருக்கும் சுஜாதா சங்கர் (யாரோ) என்பவர் வீட்டில் இருப்பதோ ஒன்பது அஞ்சறைப்பெட்டிகளாம்.

1. ரூம் ஷெல்ஃபில்: மாத்திரைகள் போட்டு வைக்க.

2. ட்ரஸ்ஸிங் டேபிளில்: சேஃப்டி பின்,பொட்டு,சின்ன சின்ன தோடு, ரப்பர் பேண்ட்,ஹேர் பின் வைக்க.

3. ஷெல்ஃபில்: கலர் கோலப்பொடி வைக்க.

4. டைனிங் டேபிளில்: பாதாம்,முந்திரி, திராட்சை,அக்ரூட் வைக்க

5. சாமி ரூமில்: விபூதி, குங்குமம்,சந்தணம்,மஞ்சள் பொடி,சாம்பிராணி, சூடம் வைக்க.

6. ஃப்ரிட்ஜில்: சுத்தப்படுத்தி பொடியாய் நறுக்கிய கறிவேப்பிலை,மல்லி,புதினா இஞ்சி,பூடு,ப.மிளகாய்.

7. ஸ்டடி டேபிளில்: ஷார்ப்னர்,ரப்பர்,குண்டூசி,சிறிய கம் பாட்டில்,க்ரேயான் பென்சில்.

8. ஹால் ஷெல்ஃபில்: சில்லறை காசுகளுக்கு.

9. சமையலறையில்: இது வழக்கமாய் வைக்கும் பொருட்கள்.

என் வீட்டில் மூன்று உள்ளது. கலர் கோலப்பொடிக்கு பிளாஸ்டிக்கில் ஒன்று,சமையலறை,சாமி ரூமில் எவர்சில்வரில் இரண்டு.

மங்கையர் மலரில் படித்தது. நல்லாயிருக்குல்ல இந்த ஐடியா. ஃபாரினில் இருக்கும் சகோதரிகள் தேவைன்னா சொல்லுங்கோ அஞ்சறைப்பெட்டி எக்ஸ்போர்ட் செய்திடலாம்.(பிசினஸ் மைண்ட்!)