Tuesday, April 10, 2018

Northeast States - 7

பயணம் 7

Guwahati ( Assam) to Dharmanagar ( Tripura) Train Route. 430 kms. Beautiful Train route.
Journey Time: 4.30 am to 5.30 pm by Kanchanjunga express

2016  March ல் தான் அகர்தலாவிற்கு ட்ரையின் Broad Guage லைனே வந்துள்ளது. அதற்கு முன் லும்டங் என்ற அசாமின் ஊரிலிருந்து தர்மாநகர் – திரிபுராவிற்கு மீட்டர் Guage லைன் மட்டும் தான். நாங்க 2016 நவம்பரில் போய் வந்தோம்.  புது லைனில் புது ட்ரையின் விட்டிருக்கலாம். எந்த ஊரிலோ கழிச்சு கட்டின கேரேஜேஸ்

இந்த ட்ரையின் ரூட்டுக்கு ஐரோப்பா நாடுகளில் இருக்கும் முழு கண்ணாடியிலான ட்ரையின் மாதிரி போட்டா இன்னும் அழகா இருக்கும். அதெல்லாம் எப்ப வருமோ.

ஆனா நம்ம மக்கள் இருக்கும் ட்ரையினை நல்லா வைச்சா தான் என்ன?? இதுக்கு மேல் அசிங்கமாக்க முடியாது.
புக் செய்த சைட் லோயரை பேப்பர் வைத்து சுத்தமாக்கிட்டு ஜன்னல் அருகில் உட்கார்ந்து திகட்ட திகட்ட வெளியே பார்த்தோம்.

காலையில் 4.30 க்கு ட்ரையின் ஏறியது.
ரெஸ்ட் ரூம் பக்கமே போகாதீங்கன்னு பசங்க சொல்லிடுச்சுங்க. ட்ரையின் வழியில் 4 ஸ்டேஷன்களில் நின்னது. அதில் மதியம் 12 மணிக்கு வந்த New Haflong என்னும் அதிக கூட்டமில்லாத ஸ்டேஷனில் வண்டி உள்ளே நுழையும் போதே நாங்க இருந்த கோச் ப்ளாட்ஃபார்மில் இருந்த வெயிட்டிங் ரூம் பக்கமா நிக்கவும் ட்ரையின் விட்டு ஓடோடி ரெஸ்ட் ரூம் போயிட்டு வந்தேன். 5 நிமிடங்கள் தான் அந்த ஸ்டேஷனில் நிற்குமாம்!.
இயற்கையை ரசிப்பதற்கு என்ன பாடெல்லாம் படவேண்டியிருக்கு. 

1. UNAKOTI - TRIPURA
 DHARMANAGAR 21 KM தூரத்தில் உன்னகோடி என்ற அற்புதம் இருக்கிறது.

Unakoti hill, literally meaning, one less a crore - koti in Bengali.
A wonderful place to visit. Amazing rock carvings.

Guwahati  யிலிருந்து அகர்தலா போகும் ட்ரையினில்  Dharmanagar என்ற ஊரில் இறங்கணும். நாங்க இறங்கும் போது மாலை 5.30 மணி. இந்த ஊர் குளிர் இல்லை.
மெயின் ஏரியா போய் Raat Din என்ற லாட்ஜில் தங்கினோம். மிக அருமையான ஒரு ரூம் ரூபாய் 700 க்கு கிடைத்தது.
அங்கேயிருந்து 21 கிலோமீட்டர் தூரத்தில் இந்த Unakoti இருக்கு. போக வர ஒரு ஆட்டோ 600 ரூபாய்க்கு பேசி  மறு நாள் காலை போனோம்.

உயரத்தில் இருந்து பார்க்கும் போது அப்படி ஒரு அழகு. பாறைகளில் அதன் போக்கிலேயே செதுக்கப்பட்ட சிவனின் தலை அதில் இரண்டு பக்கமும் விரிந்து கிடக்கும் முடி,வாயை மூடி இல்லாமல் வரிசையாக பற்கள்,கங்கை,நிலவு முடியில் இருப்பதை போல இருக்கு,
கொஞ்சம் இறங்கி பாத்தா பிள்ளையார் மூன்று சிலைகளாக!!

அங்கேயிருந்து மேலே பார்த்தா மூன்று இடங்களில் பாறைகளில் செதுக்கப்பட்ட பிரமாண்டமான சிலைகள்.
கொஞ்ச தூரம் ஒத்தையடி பாதையில் சென்றால் அங்கேயும் மூன்று முகங்களுடன் ஒரு சிலை.
முகம் சிதைந்து.
போகும் பாதை செடிகள் அடர்ந்து காட்டில் இருக்கோம் என்ற உணர்வை தந்தன.
சில சமயம் அருவியாக தண்ணீர் கொட்டியதால் சில பாறைகள் அடித்து செல்லப்பட்டு அங்கே இங்கே என சிற்பங்களாக கிடக்கின்றன. முகம் பாதியாக,இன்னும் வேலைப்பாடுடைய பாறைகள்.
ஒரு நந்தியும், ஒரு பெரிய பாறையில் சிவனின் கையில் ஏதோ ஏந்தி இருப்பதும் எலும்பு மாலையும் தெரிந்தது.
அந்த இடமே ரம்யமாக இருந்தது .

This holy place dates back between 7th to 9th centuries. சிவனையும் சேர்த்து கோடி கடவுள்களும், தேவர்களும் காசிக்கு போகும் முன் இந்த இடத்தில்  நைட் தங்கி இருக்கிறார்கள். காலையில் சூரிய உதயத்துக்கு முன் யாரும் எழுந்திருக்காத போது சிவன் மட்டும் எழுந்து மத்தவங்களை கல்லாகும் படி சாபம் கொடுத்து விட்டாராம். எனவே கோடிக்கு ஒன்று குறைவான சிலைகள் இங்கே இருக்காம்.
சமீபத்தில் கண்டு பிடிக்கப்பட்ட இந்த இடத்தை மேலும் செப்பனிட அரசு 12 கோடி ஒதுக்கி ஆர்க்கியலாஜி டிபார்ட்மெண்டிடம் கொடுத்து UNESCO விடமும் ஹெரிடேஜ் செண்டராக்க பேசி வருகிறதாம்.

இங்கேயும் வழக்கம் போல நாங்க நான்கு பேர் தான் இருந்தோம். ஆட்டோக்காரர் வெளியே வெயிட் செய்தார். அங்கு சாமியார்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தாங்க. நாங்கள் கிளம்பும் போது சில டூரிஸ்டுகள் வந்தனர்.

மிக அழகான மலைப்பகுதியில் இது வரை பார்த்தேயிராத ஒரு அழகு இந்த இடம்.  என் மகன் நகுலுக்கு நான் நன்றி சொன்னேன். எப்படிடா இப்படி ஒரு இடத்தை தெரிந்து கூட்டி வந்தன்னு.

திரிபுராவில் உன்னகோட்டி பார்த்து ரசித்து return to Dharmanagar by Auto. 14 நாட்களுக்கு பிறகு இங்கு கிடைத்த கெட்டி கெட்டி தயிர், தாளித்த பருப்பு, நெய் , சின்ன அரிசி சாதம், உருளை கிழங்கு வறுத்தது வாங்கி திருப்தியாக மதியம் சாப்பிட்டு
மதியம் 2 மணிக்கு ட்ரையின் ஏறி திரிபுராவின் தலைநகர் அகர்தலா கிளம்பினோம், 170 km போகணும்.

Previous post : https://m.facebook.com/groups/788208064700343?view=permalink&id=820423728145443
#northeast_states

No comments: