Tuesday, April 03, 2018

North East States - 4

.வடகிழக்கு மாநிலங்கள் பயணம் 4:

ரோட்டோரமாய் இருந்த மஞ்சள் மலர்களை சலிக்க சலிக்க பார்த்துட்டு, School விட்டு போகும் குழந்தைகள், முதுகில் குழந்தை சுமக்கும் பெண்கள் என பார்த்து கொண்டே,  மணிப்பூர் நெருங்க நெருங்க ரோட்டோரமாய் வரிசையாக லாரிகள். இரண்டு லாரிகளுக்கிடையில் ட்ரைவர்கள் படுத்து இருந்ததும், ரோட்டோரமாக ஸ்டவ் வைத்து சமைப்பதும் ஹாயாக அவர்கள் இருந்ததை பார்த்தால் அடிக்கடி இப்படி நிற்பார்களாம். இப்ப ஒரு வாரமாக இப்படி வெயிட் செய்றாங்க. மணிப்பூர் அரசு ஓக்கே சொன்னதும் மணிப்பூர் போவாங்களாம்.

Kohima to Imphal
5 h (136.9 km) via NH2

மாலை 5 மணியளவில் இம்பால்  போய் சேர்ந்தோம்.  மார்க்கெட் பகுதியில் நடந்து சுத்திட்டு இரவு உணவு சாப்பிட்டு  ரூமிற்கு போனோம். மறு நாள் இம்பாலின் முக்கிய மூன்று இடங்களை நாங்கள் கவர் செய்யும் ப்ளான்.

 மிக அருமையான உலகத்திலேயே இங்கே மட்டும் தான் இருக்கு என்ற அதிசயம் 3 இம்பால் பக்கம் தான் இருக்கு

1. Loktak Lake - Floating Paradise.

Imphal, the capital city of Manipur is 39 km away from the lake.
 It is the largest freshwater lake in Northeast India, and is famous for the phumdis (heterogeneous mass of vegetation, soil, and organic matter at various stages of decomposition) floating over it.
 It serves as a source of water for hydropower generation, irrigation and drinking water supply. The lake is also a source of livelihood for the rural fishermen who live in the surrounding areas and on phumdis, also known as “phumshongs”.
 Largest freshwater lake in India.
Covering an area of 300 square metres
The lake is referred to as the "lifeline of Manipur”
 Etymology of Loktak: Lok = "stream" and tak = "the end". The place where streams end.

 Lake ல் மிதக்கும் சின்ன சின்ன பச்சை புல்வெளிக்கு phumdis என பெயர்.

The best view of Loktak Lake can be had from a small hill top In the middle of the Lake.
இந்த குட்டி மேட்டு பகுதியை பார்க் மாதிரி வைத்து ஒரு சின்ன நீட்டான ஹோட்டலும் வைத்திருக்கு அரசு. அங்கே காலை சாப்பாடு ஆர்டர் தந்து பார்க்கில் இருந்து எங்கே திரும்பினாலும் தெரியும் ஏரியை ஆன்னு பார்த்துட்டே இருந்தோம். வாட்சிங் டவரும் இருந்தது. தூரமாய் தெரியும் பச்சை பச்சை தெப்பம் போன்ற மிதக்கும் அழகையும், ஏகப்பட்ட பறவை சத்தமும் அந்த விடிகாலையை நாங்க நால்வர் மட்டுமே அனுபவிச்சுட்டு இருந்தோம்.

நாட்டு படகு எனப்படும் நீட்டமான படகில் தலையில் கூம்பான தொப்பியுடன் மீனவர்கள் அமைதியாக மீன் பிடித்திருக்க, கொஞ்ச தூரத்தில் கரையில் குடிசைகளும் தென்பட்டன. .,

காலை பூரி. இந்த டூரிலேயே அதிகம் பணம் கொடுத்து சாப்பிட்டோம். இரண்டு பூரி 100 ரூபாய்.
 10 ரூபாய், 15 ரூபாய் தான் மத்த இடத்தில் எல்லாம்.
சாப்பிட்டு அந்த மேட்டு பகுதியை விட்டு இறங்கி வந்து போட் நிற்கும் பகுதிக்கு வந்தோம். டூரிஸ்ட்டுகளே அங்கே இல்லை நாங்க போன தினம்.

Boat 800 ரூபாய் கேட்டாங்க. கூட்டம் இருந்தா 50 ருபாய் ஒருவருக்கு. நாங்க 4 persons தான் எங்கேயும் முதலில் போய் தூங்குறவுங்களை எழுப்பி விட்டுட்டு இருந்தோமே!!

கார் நம் கையில் இருந்தால் இது ஒரு வசதி. கார் ஓட்ட இரு மகன்கள் இருந்தது இன்னும் வசதியாச்சு

ஒரு மணி நேரம் Boat ல்  சுத்தி வந்தோம். ஒர் வெள்ளை கொடி நடப்பட்டிருந்த Phumdis பகுதியில் போட் பையன் போட்டை கரை ஓரமாக நிறுத்தி எங்களை இறங்க சொன்னான். ஆஹா இதில் இறங்கலாமா. சூப்பர்ன்னு சொல்லி கொண்டே இறங்கி நடந்தோம், கொஞ்சமாக ஆடி கொண்டே. ஆனால் கால் அடியில் திக்காக இருந்துச்சு. கொஞ்சம் நம்மை குலுக்கினால் கால் நனைந்தது. செம த்ரில்.  இன்று இங்கேயிருக்கும் அந்த இடம் நாளை வேறு இடம் போயிடும்ன்னு தான் கொடிஅடையாளம். ஏரி 15 அடி ஆழமாம்.

என்ன ஒரு இயற்கை என ஆன்னு பார்த்து கொண்டே அந்த இடத்தை விட்டு பிரியவே மனசின்றி பக்கத்துலேயே இன்னொரு அதிசயத்தை பார்க்க போனோம்.

2. Keibul Lamjao Floating National park . 

இங்கே sangai என்னும் அரிய வகை மான்கள் நிறைய இருக்கும் அதை பார்க்க போவதாய் நினைத்து போனோம். அது ஒரு வறண்ட புல்வெளி போன்ற அமைப்புடன் ஓரத்தில் ஒரு வாட்சிங் டவரும் இருந்தது. அதில் ஏறி அந்த மிக பறந்த புல்வெளியை பார்த்த போது தூரத்தில் ஒன்றிரண்டு மான்களும் அந்த வாட்சிங் டவர் பக்கத்தில் சிலர் மராமத்து வேலை பார்த்து கொண்டும் இருந்தனர்.

 அந்த புல்வெளியின் நடுவில் ஒரு சிறிய நீரோடை இருக்க கரையில் ஒரு பழைய நீட்ட போட்டும் இருந்தது. அதை ஓட்ட ஆள் தேடினால் புல் வெட்ட போய் விட்டதாக் சொன்னாங்க. என் மகன் சத்தமாக கூப்பிட்டு கொண்டே அந்த புல்வெளியில் நடக்கவே உள்ளே இருந்து ஒருவர் வந்தார்.

 தான் வருவதாக ஒப்பு கொண்டார். ஒருவருக்கு 50 ரூபாய் என்றும் கூற நாங்கள் சந்தோசமாக அந்த நீரோடையில் உட்கார்ந்து போகும் போது தான் அந்த புல் எல்லாம் ஆள் உயரத்துக்கு வளர்ந்து இருந்தது தெரிந்தது. ஓரிடத்தில் போட்டை நிறுத்தியவர் எங்களை புல் வெளியில் இறங்க சொல்லி ஃபோட்டா எடுத்தும் கொடுத்தார்.

காலில் நீர் பட்டது அப்பதான் எங்களுக்கு தெரிந்தது அந்த மொத்த புல்வெளியும் தண்ணீரில் மிதப்பது. மிக ஆச்சரியமாக இருந்தது. என்ன ஒரு அற்புதம் . உலகிலேயே இது தான் இங்கே மட்டும் தான் இப்படி ஒரு மிதக்கும் மானின் புகலிடம் இருக்கிறது. 

ரொம்ப சந்தோசமாக இருந்தது. போட்க்காரருக்கு அதிக பணம் கொடுத்து நன்றி சொல்லி கிளம்பினோம்.

இந்த மான் தான் மணிப்பூர் மாநில விலங்காம். கோடை காலத்தில் வந்தால் அதிகமாக பார்க்கலாம் புல் வெளி குறைவாக இருக்கும். ஃப்ரெண்ஸ் எல்லாம் கூட்டி வாங்க என சொல்லி அனுப்பினார்.

 திரும்பவும் வாட்சிங் டவர் போய் அந்த மொத்த பகுதியையும் கண்னுக்கு எட்டிய வரை பார்த்து விட்டு மான் இருக்கு தெரியும் ஆனா இப்படி மிதக்கும் பார்க்குன்னு எனக்கே இப்ப தான் தெரியும் என்றான் நகுல்.

லக்ஷ்மி என்னும் ஹோட்டலில் மணிப்பூர் தாலி மிக ஃபேமஸ். இந்த ட்ரிப்பில் முழு சாப்பாடு சாப்பிட்டது இம்பாலில் மட்டும் தான். குட்டி குட்டி கிண்ணத்தில் ஏகப்பட்ட ஐயிட்டம். சில இனிப்பாக இருந்தது. கீரை,,பருப்பு,பாயாசம் அருமை.என் சின்ன மகன் மட்டும் மீன் குழம்பு வாங்கி கொண்டான்.

3. Ima Market:

இம்பாலின் ஊருக்கு நடுவே நம்ம கோயம்பேடு மார்க்கெட் மாதிரி மிக பெரிய மார்க்கெட். இந்த மார்க்கெட்டின் ஓனர்கள் பெண்கள் மட்டுமே. First world war சமயத்தில் போருக்கு நிறைய ஆண்கள் போனதாலும்.பெண்கள் ஒரு சக்தியாக இங்கே இருக்கிறார்கள் இன்னமும். கடையில் மொத்தமும் பெண்களே விற்கிறார்கள். கிடைக்காத பொருட்கள் இல்லை. காய்கறி, பூக்கள், மளிகை,,துணி,,மீன், இறைச்சி அப்பா சுத்தி சுத்தி வந்தோம் ஒரு ஆண் கூட கடை ஓனராக இல்லை. வேலையாட்கள், கஸ்டமர்கள் ஆண்கள்.
உலகிலேயே இது மட்டும் தான் இங்கே மட்டும் தான் இப்படி.

 IMA MARKET - IMA KEITHAL - அம்மா மார்க்கெட் - 100 years old - IMPHAL - MANIPUR
4000 Shops owned by Women. We can get anything and everything in this market.
4000 women shopkeepers selling a wide range of merchandise including vegetables, meat, dry fish, herbs, handmade jewelry, handcrafted artworks, and traditional clothes. Mostly local items.
The market will remain a unique historic symbol of women empowerment and women’s leadership in economic development
Women dressed in traditional Phaneks (sarong) and Innaphis(Shawls) with sandalwood marks on their forehead were down to business.

Irom Sharmila and Mary Kom மாதிரி ஜாடையில் நிறைய பெண்கள் போகும் வழிகளில் தெரிஞ்சாங்க.
Mostly older ladies and grandmothers come down to the market to trade; young mothers are left at home to tend to their children. Early morning around 5 to 6 this is place is very busy.

ட்ரெஸ்ஸும் வித்யாசம்.. பெண்கள் பயங்கர சுறு சுறுப்பு.
நெற்றியில் சந்தன கோடு மூக்கில் இருந்து ஆரம்பித்து போட்டிருந்தாங்க.. இங்கேயும் மாலையிலேயே ஊர் அடங்கி விடுகிறது.

நைட் இம்பாலிலேயே தூங்கி விட்டு மறு நாள் காலை 5 மணிக்கேல்லாம் ஊரை விட்டு கிளம்பி இமா மார்க்கெட் பக்கமாய் போனா அந்த விடியல் காலையில் பெண்கள் கூட்டம் கூட்டமாய். மாலையில் சீக்கிரம் வீட்டிற்கு போய் விடுவதால் விடிகாலையில் பொருட்கள் விற்க பக்கத்து கிராமங்களில் இருந்து பொருட்களை கொண்டு வந்து விற்க ஆரம்பிச்சாச்சு. ஆன்னு பார்த்து கொண்டே இம்பால் விட்டு புறப்பட்டோம்.

எதுக்கும் அட்லீஸ்ட் ஆயிரம் ரூபாய்க்காவது டீசல் போட்டா போகும் போது ரிஸ்க் இல்லைன்னு பெட்ரோல் பங்க் பார்த்தா ஒவ்வொரு பங்கிலும் 50 to.100 vehicle நிக்கிது.
ATM ஐ விட அதிகம் கூட்டம். Block - ல் ஒரு
rs. 300 வரை 1 Lr விப்பதாக கேள்வி பட்டோம்.

ஒரு பங்கில் 25 Vehicle தான் இருக்கும் போல தோன்றவும். சரின்னு நாங்களும் கியூவில் காரை நிறுத்தினோம்.
பெரிசு Nagul காரை விட்டு இறங்கி முன்னாடி Bunk உள்ளே போய் வேடிக்கை பார்க்க போனான். 5 நிமிஷத்தில் திரும்பி வந்து தன் தம்பியிடம் காரை பங்கை விட்டு வெளியே வரும் வழியாக உள்ளே போடான்னு சொல்லிட்டு ஓடி அந்த வழியில் எங்க காரை விட வழியும் ஏற்படுத்தி கொடுத்தான்.

25 வண்டிக்குள் இருந்து 75 தலையாச்சும் வெளியே எட்டி எங்க காரை பார்த்தது. டீஸல் போடும் இடத்தில் இருந்த போலீஸ் கூட்டம் எங்க காரை பாத்து ஒதுங்கி வழி விட கொஞ்சம் வெயிட் செய்து 1000 Rs.க்கு டீஸல் போட அங்கிருந்த இன்ஸ்பெக்டருக்கு கை குலுக்கி Thanks சொல்லிட்டு வந்தான்.

வாய் இருந்தா அதுவும் ஹிந்தி வாயிருக்கும் பிள்ளை பிழைச்சுக்கும்!!

நாங்க டீசல் போட காத்திருந்த போது எங்க காருக்கு முன்னாடி ஒரு மாருதி உள்ளே பெரிய ட்ரம் 2 வைத்து 120 லிட்டர் டீசல் போலீஸ் பாதுகாப்புடன் பிடிச்சுட்டு இருந்தாங்க. டூரிஸ்ட் என்பதால் எங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அந்த இன்ஸ்பெக்டர் புண்ணியமும் சேர்த்துட்டார் போல.

நாகாலாந்து நோக்கி எங்கள் பயணம் ஆரம்பித்தது.

ரூம் வாடகை 1200 rs. We saw many local buses and autos and rented cars in the city. Chennai to Imphal flights cost up and down rs. 12K. We can spend 3 days here. Worth to spend.

Previous Posts:
https://www.facebook.com/groups/Madhyamar/permalink/819436414910841/
#northeast_states














No comments: