Friday, August 26, 2011

காஷ்மீர்

”1846-ல் பிரிட்டிஷ் சர்க்கார் காஷ்மீரினை குலாப் சிங்கிற்கு எழுதிக் கொடுத்தனர். பதிலுக்கு 72 லட்சம் ரூபாய் பணம்,ஆண்டுக் கப்பமாய் ஒரு குதிரை, 12 செம்மறி ஆடு, மூன்று செட் காஷ்மீர் சால்வைகள் கொடுக்க வேண்டும்.குலாப் சிங்கின் கொள்ளு பேரன் தான் விடுதலை அடைந்த போது காஷ்மீரில் மன்னராக இருந்த ஹரி சிங்.”

இதை கிழக்கு பதிப்பகம் பா.ராகவனின் காஷ்மீர் புத்தகத்தில் படித்தது.

இன்னும் புத்தகத்தினுள்

1.5000 வருட பாரம்பரியமிக்க பண்டிட்டுகள் கிறிஸ்த்துவின் பிறப்பிற்கு 250 ஆண்டுகள் முன்பே காஷ்மீரில் செல்வ செழிப்போடு வாழ்ந்து இருக்கிறார்கள்.

2.புத்த மதம் செழிக்க ஆரம்பிக்கவும் மன்னர் சுகதேவர் இந்து மதத்தின் செல்வாக்கை குறைக்க ஆப்கானில் இருந்து முஸ்லீம் அறிஞர்களை வரவழைத்து தலா ஒரு கிராமத்தினை கொடுத்து குழுவாக தங்க அனுமதிக்கிறார்.

3.துலுச்சா என்ற செங்கிஸ்கான் வழி வந்தவன் காஷ்மீர் மீது படையெடுத்து அதன் அமைதி அழிய ஆரம்பிக்கிறது.

4.பிறகு முகலாயர்கள் காலத்தில் அக்பர் 1588-ல் படையெடுத்து அடுத்து வந்த முகலாயர்கள் அனைவருக்கும் காஷ்மீர் ஒரு போக பொருளாயிற்று.

5.19 ஆம் நூற்றாண்டில் காஷ்மீர் சீக்கியர் வசமாகியது. பிரிட்டிஷார் பஞ்சாப்பினை கைப்பற்றிய போது காஷ்மீரில் டோக்ரா இனத்தை சேர்ந்த தளபதி(பஞ்சாப் மன்னரால் நியமிக்கப்பட்டவன்) குலாப்சிங் பிரிட்டிஷாரிடம் ஒரு ஒப்பந்தம் போட்டு கொண்டார். அது தான் முதல் பத்தியில் சொன்னது.


6.இப்ப காஷ்மீர் குலாப்சிங்கின் வசமாகியது.ரன்பீர் சிங்,பிரதாப் சிங், ஹரி சிங் என டோக்ரா இனத்தை சேர்ந்த இந்து மன்னர்கள் காஷ்மீரினை ஆண்டனர்.

7. இவர்கள் காலத்தில் முஸ்லீம்கள் கொடுமையினை அனுபவித்தனர். எனவே, ஷேக் முகம்மது அப்துல்லா போராட துவங்கினார்.

8.ஹரி சிங் தன் பாட்டன் சொத்தாக காஷ்மீரை நினைத்தார். ஷேக் அப்துல்லாவை சிறையில் அடைத்தார். நேருவிற்கு ஷேக் அப்துல்லா நெருங்கிய நண்பர்.எனவே ஹரி சிங்கிற்கு காங்கிரஸ் பிடிக்காது. ஹிந்து என்பதால் முஸ்லீம்கள் பிடிக்காது. எனவெ, சுதந்திரம் அடைந்ததும் தனி நாடாகவே இருக்க விரும்பினார்.

9. இந்திய பாகிஸ்தான் சுதந்திரத்திற்கு பிறகு ரெஸ்ட் எடுக்க ஜின்னா காஷ்மீர் செல்ல விரும்பினார். அதற்கும் அனுமதிக்கவில்லை ஹரிசிங். அதன் பிறகு தான் பாகிஸ்தான் தன் வேலையினை ஆரம்பித்தது. மவுண்ட்பேட்டன் இந்தியாவுடன் சேர்ந்து விடும்படி பேச சென்றார்.அவரை உடல்நிலை சரியில்லை என்று பார்க்காமல் இருந்தார் ஹரிசிங். காந்தி போய் பேசி பார்த்தார். ஷேக் அப்துல்லாவை மட்டும் விடுதலை செய்ய ஒப்புக் கொண்டார். காந்தியிடமும் இந்தியாவுடன் சேர முடியாது என திட்டவட்டமாக அறிவித்து விட்டார்.

10.ஜின்னாவை காஷ்மீருக்குள் அனுமதிக்க மறுத்ததை பாகிஸ்தானால் ஜீரணிக்கவே முடியவில்லை. வடமேற்கு எல்லைப்புற பதான் ஆதிவாசி இனமக்களை ஆயுதங்களுடன் காஷ்மீருக்குள் அனுப்பி வைத்தனர். புனித போர் என்று அதற்கு பெயரிடப்பட்டது. இதை எதிர்ப்பார்க்காத ஹரிசிங் நேருவின் உதவியினை நாடினார். சர்தார் படேல் தனது செயலாளரான வி.பி. மேனனை அனுப்பி ஹரிசிங்குடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். இந்தியாவுடன் காஷ்மீர் இணைவதற்கான ஒப்பந்தம் அது. மவுண்ட்பேட்டன் பாகிஸ்தான் சென்று பேச்சு வார்த்தை நடத்தினார். ஜின்னா இந்தியாவின் தந்திரம் என்று சொன்னார். ஆனால், அவர் தான் ஆதிவாசிகளுக்கு உதவியதை ஒத்துக் கொள்வாரா என்ன? நேரு ஐக்கிய நாட்டு சபைக்கு பிரச்சனையினை கொண்டு சென்றார்.

11.மக்கள் எந்த நாட்டுடன் சேர வேண்டும் என்று வாக்கெடுப்பிற்கு இந்தியாவும் ஒப்புக் கொண்டது. ஆனால், ஆதிவாசிகளை முற்றிலும் திரும்ப அழைக்க பாகிஸ்தான் மறுத்தது. இந்திய ராணுவம் காஷ்மீரில் இருக்கும் வரை வாக்கெடுப்பு நடக்க கூடாது என்பது பாகிஸ்தானின் வாதம். ஹரிசிங் தேசிய மாநாட்டு கட்சியின் ஷேக் அப்துல்லாவை பிரதமராக நியமித்தார். இவரை பார்த்து பாகிஸ்தான் பயந்தது. இவர் வாக்கெடுப்பை தமக்கு சாதகமாக்கி கொள்வார் என பாகிஸ்தான் நினைத்தது.

12.இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370-ஆவது பிரிவு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை நிர்ணயித்தது. இதில் காஷ்மீரில் வாக்கெடுப்பு நடத்துவது பற்றி ஒரு அறிவிப்பும் அதில் இல்லை. அதாவது இந்தியாவின் ஒரு மாநிலம் காஷ்மீர்.கொதித்து போனார்கள் காஷ்மீர் மக்கள்.
ஜம்மு பிரஜா பரிஷத் என்ற அமைப்பிற்கு மன்னர் வேறு உதவினார். அவர்கள் இந்துக்களை மீட்டு எடுக்க வந்தவர்களாக நடந்து கொண்டனர்.

13.ஷேக் அப்துல்லா நேருவால் கைது செய்ய பட்டார். பக்க்ஷி குலாம் முகம்மது காஷ்மீரின் பிரதமனார்.இவர் காலத்தில் தான் பிரதமர் என்பது மாற்றம் பெற்று முதல் அமைச்சர் என அழைக்கப்பட்டார்.இப்படி நிறைய விஷயங்கள்....

14.ஷேக் அப்துல்லாவின் பேரன் உமர் அப்துல்லா தான் இப்பொழுது அங்கு முதலமைச்சர்.

இந்த புத்தகத்தை படித்து முடித்ததும் காஷ்மீர் தனி நாடாகவே இருந்து இருக்கலாமோ என்று தான் தோன்றியது.போன வருடம் ஏப்ரலில் காஷ்மீருக்கு குடும்பத்துடன் போய் வந்த போது தெரியாத பயம், ஆஹா இந்த புத்தகத்தினை படித்த பின் இவ்வளவு பிரச்சனையுள்ள ஒரு இடத்திற்கு எப்படி தில்லாக குழந்தைகளுடன் போய் வந்தோம் என்று இப்போது திகிலாக இருக்கிறது.நாங்கள் போன போது சந்தித்த முஸ்லீம் நண்பர்கள் உங்கள் ஊருக்கு போய் நிறைய நண்பர்களிடம் சொல்லி காஷ்மீருக்கு டூர் வரும்படி சொல்ல சொன்னார்கள். ஏறத்தாழ 15 வருடங்களாக டூரிசத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள்,வருமானம் இல்லாமல் இருப்பதால் இப்பொழுது நிலைமை கொஞ்சம் பரவாயில்லை என்றே சொன்னார்கள்.
எங்கேயும் எப்போதும் பாதுகாப்பிற்கு நம் மிலிட்டரி ஆட்கள்.ஆனால், அவர்களை பார்க்கும் போது தான் ஒரு பயம் வருகிறது.


காஷ்மீர்-1,  காஷ்மீர்-2,  காஷ்மீர்-3காஷ்மீர்-4

போக விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.முடிந்த உதவி செய்து தரப்படும்.போக வர பணம் எல்லாம் தரமுடியாது!!!

9 comments:

Chitra said...

ஏறத்தாழ 15 வருடங்களாக டூரிசத்தை மட்டுமே நம்பி இருப்பவர்கள்,வருமானம் இல்லாமல் இருப்பதால்.....


..... Very sad scenario!

Chitra said...

காஷ்மீர் பற்றி நிறைய தகவல்களை தெரிந்து கொண்டோம். பகிர்வுக்கு நன்றிங்க.

Unknown said...

காஷ்மீர் பற்றிய தகவல்கள் அருமை, எல்லோரும் தங்களின் சுயநலத்திற்கு செய்த வேலைகள் இன்று காஷ்மீர் பற்றி எரிகிறது..

ஹுஸைனம்மா said...

நேற்றுதான் என் பெரியவன், காஷ்மீரில் என்னதான் பிரச்னை என்று கேட்டான். தெரிந்தவரை சொன்னேன்.
எனினும் மன்னர்காலத் தகவல்கள் புதிது. இவற்றையும் சொல்கிறேன்.

சுசி said...

//போக வர பணம் எல்லாம் தரமுடியாது!!!//

hahaahaa.. romba thelivuthaan ponga..

tnx for sharing amutha :)

ADHI VENKAT said...

காஷ்மீர் பற்றிய தகவல்கள் அருமை. பகிர்வுக்கு நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

ஹி..ஹி. பணமெல்லாம் வேணாங்க. உங்க கிட்ட போயி, நாங்க பணமெல்லாம் வாங்குவோமா?..























டிமாண்ட் ட்ராப்டாவே கொடுத்துடுங்க. கூடவே பாதுகாப்புக்கு மிலிட்டரியும்
:-))

Anonymous said...

போக விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளுங்கள்.முடிந்த உதவி செய்து தரப்படும்.போக வர பணம் எல்லாம் தரமுடியாது!!!

லொள்ளு -:)

cheena (சீனா) said...

காஷ்மீர பற்றிய பல தகவல்கள் பகிர்வினிற்கு நன்றி - வாழ்க வளமுடன்