Sunday, August 28, 2011

வெரைட்டி-ஆவணி 2011

ஹாங்காங்கில் நாய்களுக்கு அமைதியாய் இருக்க யோகா சொல்லி தருகிறார்களாம்.அதற்கு டோகா என்று பெயராம்.அப்படியே அவைகள் அந்தரத்தில் மிதக்க நித்தியானந்தரிடம் அனுப்பலாம்.

அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ ஏன் ஐ மட்டும் ஒன்றே ஒன்று இருக்கு.ஒண்ணாப்பு படிக்கும் விஷால் என்னிடம் கேட்ட கேள்வி. அது அப்படி தான் என சமாளிச்சிங்.

நேற்று ஒரு வயதான அம்மா என்னுடன் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டு இருந்தார்கள்.மகன் வீட்டிற்கு வந்துட்டு என் வீட்டிற்கு போறேன்மா என்று அவர்களாகவே சொன்னார்கள்.தனியாவா இருக்கிறீங்க என்று கேட்டேன்.ஆமாம்மா,என் வீட்டுக்காரருடன் இருக்கிறேன். சொந்த வீட்டில் என் மூன்று மகன்களும் அவர் அவர் மனைவி குழந்தைகளுடன் இருக்கிறார்கள். நாங்க வாடகை வீட்டில் இருக்கிறோம். மருமகள்கள் பேர குழந்தைகள் படிக்கலை என்று தினம் அடிப்பதை பார்க்க சகிக்கலைம்மா.ஏன் இப்படி அடிக்கிறீங்க என்று கேட்டால் உங்களால் தான் இந்த குழந்தைகள் கெடுகிறார்கள் என்று சொல்றாங்கம்மா அதான் வாரம் ஒரு முறை மட்டும் பேரப்பிள்ளைகளை பார்த்து போவேன் என்றார். நான் இப்போது வீடு கட்டி கொண்டிருக்கும் ஏரியாவிற்கு போய்விட்டு மதியம் வீடு திரும்பி கொண்டு இருக்கும் போது அவர்களை சந்தித்தேன். அவர்கள் சொன்னதை கேட்டதும் இவ்வளவு கஷ்டப்பட்டு வீடு கட்டணுமா என்று தோன்றியது.

உலகிலேயே நீளமான பாலம் 36 கி.மீட்டருக்கு சைனாவில் இருக்கிறது.

ரயில்வே காலனியில் குடியிருந்த போது போது டிரைவர்,கார்டு.டி.டி.ஆர் வீடுகளில் லைனுக்கு போறேன் என்று சொல்லி வேலைக்கு போவார்கள். யாராவது வீட்டுக்காரர் எங்கே என்று கேட்டால் வீட்டில் இருக்கும் பெண்கள் அவரா ஆன் லைன்ல இருக்கிறார் என்று சொல்வார்கள்.இப்ப நெட் வந்த பிறகு தான் நாமெல்லாம் ஆன் - லைனில் இருக்கிறோம். அவர்கள் முன்பே ஆன் - லைனில் இருந்து இருக்கிறார்கள்!!!.

9 comments:

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

Anonymous said...

இனிமை....
இனிய பிள்ளையார் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...
ரெவெரி...

செங்கோவி said...

நீங்களா யோசிச்சதா.......நல்லா இருக்கு.

cheena (சீனா) said...

வெரைட்டி சூப்பர் அமுதா - விஷால் சூப்பரா கேள்வி கேக்கறானே -வாழ்க வளமுடன்

ஜோதிஜி said...

தமிழ்மணம் கொடுத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டவர்களின் பட்டியலில் நீங்களும் ஒருவர்.

ஆதி மனிதன் said...

//ஏன் இப்படி அடிக்கிறீங்க என்று கேட்டால் உங்களால் தான் இந்த குழந்தைகள் கெடுகிறார்கள் என்று சொல்றாங்கம்மா அதான் வாரம் ஒரு முறை மட்டும் பேரப்பிள்ளைகளை பார்த்து போவேன் என்றார்.//

கேக்கவே கஷ்டமாக இருக்கிறது. தாய் தந்தையரை புறக்கணிக்க ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்.

//அவர்கள் சொன்னதை கேட்டதும் இவ்வளவு கஷ்டப்பட்டு வீடு கட்டணுமா என்று தோன்றியது.//

????

உங்கள் தளம் கடந்த ஒரு மாதமாக பழைய பதிவுகளையே (ஜூலை மாதம்) காட்டிக்கொண்டிருந்தது. இப்போதுதான் ஆகஸ்ட் மாத பதிவுகள் தெரிகிறது. எல்லோருக்குமா? அல்லது எனக்கு மட்டுமா தெரியவில்லை.

வெங்கட் நாகராஜ் said...

வெரைட்டி நன்றாகவே இருக்கிறது.... பாராட்டுகள்...

ADHI VENKAT said...

வெரைட்டி ஆவணி நன்றாக இருந்ததுங்க.

சுதா SJ said...

அட நன்றாக இருக்கே, இப்படி ஒரு இடம் இருக்கிறது இதுவரை நமக்கு தெரியாமலே போச்சே ... இனி வருவோம் இல்ல தொடர்ந்து.......