Tuesday, January 28, 2014

பொழுது போணும்ல!!!

சீரியல் பார்த்து பார்த்து டயர்டாகி,  இந்த சீரியல்ல நேத்து இந்த பெண்  எதிர் வீட்டு மகேஷுடன் ஓடி போனாளே இப்ப எதுக்கு பக்கத்து வீட்டு சுரேஷுடன் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருக்கான்னு குழப்பமா யோசிச்சுட்டே ரெஸ்ட் எடுக்கும் போது தான் கரெக்டா நம்ம ஃபோனுக்கு கால் வரும் இந்த நம்பருக்கு நாம மிஸ்ட் கால் கொடுக்கலையேன்னு யோசிச்சுகிட்டே ஃபோனை எடுத்தா நாங்க ரிலையன்ஸ்,ஐசிஐசி,பிபிசி,இன்னும் என்ன என்னவோ சிசியில் இருந்து பேசுறோம் மேடம்னு பேசுவாங்க.சரி பேசு நா உம் கொட்டுறேன்னு ரெண்டு ம்ம் சொல்லும் போதே நீங்க அப்பாயிண்ட்மெண்ட் கொடுத்தாக்கா (அடகொக்கமக்கா இங்கே முழுநேரமும் வெட்டியாதாண்டா இருக்கோம்) நாங்க வீட்டிற்கு வந்து எங்க பாலிசி பத்தி பேசுறோம்பாங்க.

வாடி வா நீயா வந்து மாட்டுனாக்க அது உன் தலையெழுத்துன்னு நினைச்சுகிட்டே ஆனா எடுத்தவுடன் சரி வா நான் வெட்டின்னு சொன்னா மருவாதை இல்லைன்னு இல்லைப்பா நேரமே இல்லைன்னோ என்கிட்ட பணமே இல்லைன்னு கொஞ்சமா பிகு செய்தாலும் விடுவதேயில்லை. உங்க பாலிசியே எடுக்க போறதில்லைன்னாலும் மேடம் நாங்க வர்றோம். ஜஸ்ட் விளக்கம் மட்டும் கொடுக்க போறோம் எங்க டார்கெட்ட்ன்னு சொன்னதும் தினம் பொழுதே போகாம என்னடா செய்றதுன்னு இருக்குற நம்ம மேலே நாமே  பாவப்பட்டு நமக்கு ஒரு நா பொழுதும் போகுமேன்னு சரி வா ராசான்னு சொல்லிடுவதுண்டு.

வர பலியாட்டுக்கு வீட்டுக்கு வழி சொல்லி சொல்லியே எஞ்கூட்டுக்கு மெயின் ரோடிலிருந்து எத்தனை லெஃப்ட்,எத்தனை ரைட்டுன்னு மனப்பாடமாகி போச்சு.

வரும் தம்பிக்கு சில்லுன்னு ஃபேன் போட்டு அதை விட சில்லுன்னு குடிக்க தண்ணீர் கொடுத்துட்டு  நாம் பேட்டிக்கு தயாராகி உட்கார்ந்த கொஞ்ச நிமிஷத்தில் அவர்கள் வாயை திறப்பதற்குள் ஏன்ப்பா நீ என்ன படிச்சு இருக்க,எங்க வீடு, உங்க குடும்பத்தில் எத்தனை பேர்,எதுக்கு இந்த வேலைக்கு வந்த,இப்ப எங்கேயிருந்து வரன்னு சில பல முக்கியமான கேள்விகளை கேட்டதும் வந்த வேலையினை மறந்து விட்டு சொந்த கதை சோக கதைகளை கக்கிகொண்டே இருக்கும் போது இருப்பா வரேன்னு சொல்லிட்டு உள்ளே போய் போன தீவாளிக்கு செய்து இன்னும் தீராமலேயே இருக்கும் பலகாரங்களை ஒரு தட்டில் வச்சு சாப்பிட்டுடே பேசுப்பா என்னும்  போது சில பேர் நமக்கு தெரியாம கண்ணீரை தொடச்சுக்கிட்டே தொடருவாங்க ஓ நீ திநெவேலி தானா சரி சரி மேலமாடவீதியா இல்லை தெக்குப்பு தெருவான்னு கேட்டா தூத்துக்குடிக்கு பக்கத்திலோ, திருச்செந்தூர் பக்கத்திலோ கேள்வியே படாத ஒரு ஊரு பேரை சொல்லுங்க. நமக்கு ஊரா முக்கியம் சரிப்பான்னு இன்னொரு முறை நாம் எழுந்திருக்கும் முன்னாடி வரேன்க்கா என்று ஹெல்மெட்டை கையில் எடுக்குங்க
( அக்காவா??நுழையும் போது மேடமா இருந்த நான் இப்ப அக்கா!!!). அடுத்தவாட்டி இன்னொரு முறை வந்து எங்க பாலிசி பத்தி விளக்குறேன் எங்க ஆஃபிசிலிருந்து உங்களுக்கு கால் வந்தா ஆமா இப்படி நான் வந்து போனேன்ன்னு மட்டும் சொல்லுங்கக்கா என்று சில பேர் ஓடி போவதுண்டு. சில பேர் எவ்ளோ அடிச்சாலும் தாங்குவேன் என்கிற மாதிரி நான் போட்டு தரும்  ஒரு மொக்க டீ குடிச்சுட்டு பாலிசிய பத்தி பேசி நம்மள பலியாடாக்குவாங்க. சரிப்பா வீட்டில கலந்து பேசி (சும்மா) நாளைக்கு நீ கால் செய்யும் போது சொல்றேன்னு சொல்லி எஸ் ஆவதுண்டு.

 எது எப்படி என்றாலும் வாப்பா மொக்க மகாராசா நானே பொழுதே போகாமல்தான் உட்கார்ந்துட்டு இருக்கேன்.
வேணாம்னு சொன்னாலும் கேட்காம இந்த அக்காவ பார்க்க பெட்ரோல் விக்கிற விலையில எம்பூட்டு தூரத்தில இருந்து  பார்க்க வர உன்னை எப்படி வேணாம்னு சொல்றது.

இருங்க ஏதோ ஒரு கால் வருது.அட்டெண்ட் செய்துட்டு வரேன்....வரட்டாஆஆஆஆஆ......


16 comments:

ADHI VENKAT said...

ஆஹா! இப்படியெல்லாம் டைம் பாஸ் பண்றீங்களா!!!

சரியா போச்சு! ரியல் எஸ்டேட் ஆளுங்களும் இப்படித்தான்....நான் ஸ்டாப்பா பேசிக்கிட்டே இருப்பாங்களே....

திண்டுக்கல் தனபாலன் said...

சீக்கிரம் வந்துடுங்க...!

ஹுஸைனம்மா said...

உங்களுக்கு இருக்க திறமைக்கு பேசாம நீங்களே ஒரு ‘பாலிஸி ஏஜெண்ட்’ ஆகிடுங்க!! :-))

”தளிர் சுரேஷ்” said...

இன்னும் சில பேர் இருக்காங்க! அதுல கேஸ் சேவ் பண்றேன்னு ஒரு குட்டி சிலிண்டர் மாதிரி ஒண்ணை ஏமாத்தி தலையில கட்டி போவோரும் உண்டு.அவர்கள் பேச்சுக்கு பரிதாபப்பட்டு ஓரிரு முறை ஏமாந்தது உண்டு

பால கணேஷ் said...

ஹா... ஹா... ஹா...! அந்த ஸ்வீட்டுங்க எந்த தீவாளிக்குச் செஞ்சதுன்னு சொல்லவே இல்லிங்களே மேடம்! அந்த பலியாடுங்கள நெனச்சா.... ஹி... ஹி.... ஹி...!

அமுதா கிருஷ்ணா said...

ரியல் எஸ்டேட் வீட்டிற்கு வராது ஆதி வெங்கட்!!!

அமுதா கிருஷ்ணா said...

உங்களை காக்க வைப்பேனா திண்டுக்கல் தனபாலன்!!!

அமுதா கிருஷ்ணா said...

ஹூஸைனம்மா எதுக்கு இந்த கொலவெறி!!!

அமுதா கிருஷ்ணா said...

சுரேஷ்.எஸ்..இவுங்க இன்னும் எங்க ஏரியால மாட்டல!!!

அமுதா கிருஷ்ணா said...

பால கணேஷ் எந்த தீவாளின்னும் சொல்லலை..எந்த வீட்டு தீவாளின்னும் சொல்லவேயில்லை!!!!

ADHI VENKAT said...

ஐய்யோ! எனக்கு இந்த ரியல் எஸ்டேட் அனுபவம் உண்டு.... ஒருமுறை போய் பார்த்துட்டு வந்துட்டா தொடர்ந்து வருவதும், விடாமல் போன் பண்ணுவதுமாக தொல்லை தான்....:))) அதனால தான் சொன்னேன்...

Avargal Unmaigal said...

///போன தீவாளிக்கு செய்து இன்னும் தீராமலேயே இருக்கும் பலகாரங்களை ஒரு தட்டில் வச்சு சாப்பிட்டுடே பேசுப்பா என்னும் போது சில பேர் நமக்கு தெரியாம கண்ணீரை தொடச்சுக்கிட்டே தொடருவாங்க///

இந்த கண்றாவி பலகாரத்தையும் தின்னு தொலைக்க வேண்டியதிருக்கே என்பதால் அவர்கள் கண்ணிர் விட்டிருப்பர்களோ?

Avargal Unmaigal said...


ஒரு தடவை உங்க வீட்டு பலகாரத்தை தின்றுவிட்டால் அவன் ஜென்மத்துக்கும் திரும்ப உங்க வீட்டிற்கு வரமாட்டான்ல இது நல்ல ஐடியாவாக இருக்கே.

Avargal Unmaigal said...

நீங்க இன்னொன்று செய்யலாம் இந்த மாதிரி பலகாரங்களை செய்து இந்த பலகாரங்களை வாங்கி உங்க வீட்டிற்கு வரும் சேல்ஸ்மேங்களுக்கு கொடுத்தால் அவர்கள் யாரும் ஜென்மத்திற்கும் மீண்டும் வரமாட்டார்கள் என்று விளம்பரம் செய்து விற்கலாம். அதன் பின் நீங்க கோடிஸ்வரியாகலாம்

வெங்கட் நாகராஜ் said...

நல்லாத்தான் கலாய்க்கறீங்க!

அமுதா கிருஷ்ணா said...

Avargal Unmaigal...இந்த கோடீஸ்வரி ஆகும் ஐடியா ரொம்ப நல்லாயிருக்கு....