Tuesday, February 04, 2014

கைப்புள்ளயின் திநெவேலி பஞ்சாயத்து!!!


கைப்புள்ளயின் ஃப்ரெண்ட் ஒருவரின் கணவர் ஒன்றரை வருடங்கள் முன்பு வேலை பார்த்த தனியார் நிறுவனத்தில் மயக்கம் போட்டு விழுந்து பிறகு பக்கவாதம் வந்து உடனே மருத்துவம் பார்த்ததில் செயல் இழக்காமல் காப்பாற்ற பட்டு ஆனால், அந்நிறுவனம் இனிமேல் வேலைக்கு வேண்டாம் என்று கூறியதில் கிடைத்த அற்ப செட்டில்மெண்டில் வீட்டிலேயே இருக்கிறார். அவர் படித்தது ICWAI..இந்த படிப்பை முடிக்க பலர் குட்டிக்கரணம் போட்டு கொண்டு இருக்கின்றனர். இவர் இந்த படிப்பை முடித்து இப்பொழுது சும்மா இருக்கிறார்.

அவரின் தந்தை 20 வருடங்களுக்கு முன்பு தன் திநெவேலி  வீட்டை Mr. @#$% க்கு வாடகைக்கு விட்டு இருக்கிறார். அவர் கொஞ்ச நாளில் அந்த வீட்டிற்கு பின்னால் இருந்த இடத்தை விலைக்கு வாங்கி அதில் 4 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு, இவர்களின் வீட்டையும் யாருக்கோ வாடைகைக்கு 2000 முதல் 5000 வரை விட்டு போனா போகுது இதுங்க பாவம்னு 500,750 என்று கொஞ்சம் கொஞ்சமாக வாடகை கூட்டி 2013 நவம்பரில் 1100 ரூபாய் வாடகை என்று மணியார்டர் அனுப்பி வந்திருக்கிறார்.
இவர்களும் நேரில் போய் பார்க்காமல் சொற்ப வாடகையினை வாங்கி கொண்டு அடக்கமாக இருந்து கொண்டனர்.

தோழியின் கணவர் மிகுந்த பயந்த சுபாவம். அது அந்த Mr.@#$% - க்கு மிகுந்த தகிரியத்தை தர  உடல் நிலை சரியில்லாதவரை பார்க்க வந்தது போல்  சென்னை வந்து குட் இப்படியே இருந்துகோங்கோ அதை விட்டுட்டு தெற்கே தலை வச்சா தலை இருக்காது, நான் தர பணத்தை வாங்கிட்டு எனக்கே அந்த வீட்டை எழுதி கொடுங்கன்னு  பாசமாக மிரட்டி சென்று உள்ளார்.

தோழியின் குடும்பமும் அந்த பாசத்துக்கு அடிமையாகி சைலண்டாக இருந்து விட்டனர். அப்படியே பொழுதும் போச்சா கம்பெனி செட்டில்மெண்ட் பணம் காலியானவுடன்  படிக்கும் இரு குழந்தைகளை வச்சுக்கிட்டு அடுத்த மாதம் புவ்வாக்கு என்ன செய்வது என்ற கிலி வந்தவுடன் தோழிக்கு கைப்புள்ளயின் நினைவு வந்துருச்சு.

இப்படி இப்படி ஆச்சு இப்ப என்ன செய்றதுன்னு கைப்புள்ளகிட்ட சொல்ல எடுறா வண்டியை நேரா தெற்கே போய் தலையை வச்சுபுடுவோம் அந்த பாசக்கார Mr. @#$% -ஐ சந்திச்சுப்புடுவோம் என்று சென்னையிலிருந்து போன மாதம் வண்டி கிளம்பிடுச்சு. தலை தப்புச்சுன்னா வடக்கே ஓடி வந்துடுலாம்னு ஒரு நப்பாசை. கைப்புள்ள, தோழி அவரின் இரு கல்லூரி படிக்கும் குழந்தைகளுடன்(கைப்புள்ளயின் அடியாட்களே இவர்கள்!!!) திநெவேலியில் ஆஜர்.

கைப்புள்ள என்னதான் தகிரியமா இருந்தாலும் உள்ளுக்குள்ளே வெடவெடன்னு தானே இருக்கும். போய் இறங்கியதும் ஆத்தா பேராட்சி, அம்மா காந்திமதி, நடுவுல உச்சிமாளி என்று நேரில் ஒரு அட்டெண்டன்ஸ் போட்டு கொஞ்சூண்டு தகிரியத்தை தேத்திக்கிட்டு நேரே தோழியின் அந்த அரத பழசு வீட்டிற்கு ஆஜராகியாச்சு.

போனா Mr. @#$% மனைவி மட்டுமே அவர்களின் வீட்டில் இருந்தார். தோழியின் வீடு கீழே, மேலே என்று பூட்டி இருந்தது. அந்த அம்மா  கைப்புள்ளய பார்த்த நடுக்கத்தில்(எப்பூடி) மேல் வூட்டு சாவி மட்டும் இருக்கு இந்தாங்க என்று உடனே கொடுத்து விட்டது. என்னடா இது வந்த உடனே சாவியான்னு கைப்பிள்ளக்கு செம குழப்பம். கைப்புள்ளைக்கும் வேலையில்லை கூடவே வந்த அடியாட்களும் வேலையில்லை!!!. கீழ் வூட்டு சாவியில்லை அதில் குடியிருப்பவர் வெளியூர் போயிருக்கிறார். அவர் திரும்ப வர 10 நாட்கள் ஆகும்னு அந்தம்மா சொல்லிடுச்சு. சரிங்க உங்க வீட்டுகாரரை பார்க்கணும் என்று சொன்னதும் அவர் மதியம் சாப்பிட 1 மணிக்கு வருவார் அப்ப வாங்கண்ணு சொல்லிட்டாங்க.

சரியென்று அந்த மாடியில் கொஞ்ச நேரம் தூசிகளுக்கு நடுவில் இருந்துட்டு மதியம் சாப்பிட போனா அந்த கேப்பில் Mr.@#$%  எஸ் ஆகிடுவார்ன்னு 3 மணிவரை காத்திருந்து பசியில் கைப்புள்ள க்ளூக்கோஸ் ஏத்துற நிலைமைக்கு போய் விட்டதால் ஓடி போய் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து வாசப் படியில் ஆஜராகியாச்சு.

3 மணி இப்ப 5 ஆச்சு  ஒரு உச்சா கூட போகாமல் காலை 9 மணியிலிருந்து ஐந்து மணிவரை தேவுடு காத்துட்டு அந்தம்மாக்கிட்ட கேட்டாக்கா அவரு ஒரு மீட்டிங் போயிட்டாரு.வர ராத்திரி 9ஆகும்னாங்க. அடியாத்தீ இதை முதல்லேயே சொல்லி இருந்தா பக்கத்து தியேட்டரில் வீரம் பார்த்துட்டு இன்னும் கொஞ்சம் வீரமா வந்திருப்போமேன்னு புலம்பிக்கிட்டே. சரிங்க நாளைக்கு காலையில் 8 மணிக்கு வர்றோம் Mr. @#$% எங்கேயும் போகவேணாம்னு சொல்லுங்கன்னு சொல்லிட்டு கைப்புள்ள க்ரூப் கிளம்புச்சு.

சும்மா கிளம்பலை திநெவேலியில கைப்புள்ள படிக்கும் போது கூட படித்த ஒரு தோழரிடம் விஷயம் இப்படி இப்படின்னு சொன்னதும் அந்த பாசக்கார ஃப்ரெண்ட் ஒரு பட்டாளத்துடன் அங்கே ஆஜராகி விட்டார். படியிலே உட்கார்ந்தே ஒரு அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டிவிட்டு கூட்டத்தை கலைத்து விட்டு கிளம்பியாச்சு.

மறுநாள் காலை 8 மணிக்கே அந்த வீட்டில் ஆஜர். Mr.@#$%  அவரின் மனைவியினை விட சாந்தமாக இருந்தார். இங்கே பாருங்க எனக்கு யார் வீட்டு சொத்தும் தேவையில்லை நான் நிறைய பணம் அந்த வீட்டிற்கு செலவு செய்துள்ளேன் அதை கணக்காய் எழுதி வைத்துள்ளேன். அதை செட்டில் செய்துட்டு உங்க சாவியினை வாங்கிகோங்க. கீழ் வீட்டு சாவி பிப்ரவரி 10-ல் தான் தர முடியும் அதில் நிறைய சாமன்கள் இருக்கு சாவி இப்ப என்கிட்ட இல்லை. நான் டூர் வேறு போறேன். எனவே, கீயை 10 ஆம் தேதி வந்து வாங்கிகோங்கன்னு சொல்லிட்டார்.

கைப்புள்ள+தோழிக்கு ஒன்னுமே புரியலை. இந்த அப்புராணியை நேரில் பார்க்க இம்பூட்டு பயந்தோமே இவரா சென்னை வந்து மிரட்டினதுன்னு ஒரே ஆச்சரியம். சரிங்க நாங்க 10-ஆம் தேதி வர்றோம்ன்னு சொல்லிட்டு வந்தாச்சு.

மாடி சாவியை கைப்புள்ளையின் அந்த நம்பிக்கையான ஃப்ரெண்டிடம் கொடுத்து வந்தாச்சு. அவர் விலைக்கு வேணுமான்னு அவர் ஃப்ரெண்ட் வட்டாரத்தில் பேசிட்டு இருக்கார். (சாவியை இல்லைங்க,,வீட்டை) கைப்புள்ள+குரூப் அடுத்தும் தெற்கே தலைவைக்க போகுது. திரும்பவும் மூணு கோயில்களுக்கும் விசிட் அடிக்கப்போகுது!!!. திரும்பவும் தகிரியத்துடன் Mr.@#$% -ஐ சந்திக்க போகுது!!!எதுக்கு அவ்ளோ நல்லவரா அவர் பேசினார். பதுங்கினாரா இல்லை பாயப்போறாரா என்ற ஆயிரம் கேள்விகளுடன்

கைப்புள்ள

9 comments:

ஹுஸைனம்மா said...

எங்களுக்கும் சில பஞ்சாயத்துகள் பேச வேண்டிருக்கு. பஞ்சாயத்துக்கு மேடம் இப்ப என்ன ரேட்டு வாங்குறீங்கன்னு சொன்னா, கட்டுப்படியாகுமான்னு பார்க்கலாம்!! :-D

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லது நடந்தா சரி....!

அமுதா கிருஷ்ணா said...

ஹூஸைனம்மா என்னது ரேட்டா? அடிவாங்காமல் தப்பிப்பது எப்பூடின்னு யோசனையில் இருக்கேன். நீங்க வேற ஜோக் அடிச்சுகிட்டு!!!

அமுதா கிருஷ்ணா said...

நன்றி தனபாலன்..

சாந்தி மாரியப்பன் said...

கோயிலுக்கு வந்து சாமி கும்பிட்டீங்க, கொஞ்ச நேரம் வீட்ல உக்காந்துருந்தீங்க, அப்றம் ஹோட்டல்ல போயி சாப்பிட்டீங்க, அப்றம் ஒண்ணுமே புரியாம 10ம் தேதி வரோம்ன்னு வாய்தா வாங்கிட்டு வந்துருக்கீங்க. இதுல பஞ்சாயத்து சீனைக் காணோமே!!

எங்களுக்கு இப்ப இந்த உம்மை தெரிஞ்சாவணும் நாட்டாமை :-p

பால கணேஷ் said...

இவுங்க ஒரு படையக் கூட்டிக்கிட்டு வரவும்... முழிச்சுக்கிட்டாங்க போலருக்குன்னு உஸாராகி பதுங்கியிருப்பாருன்னு தோணுது. எதுக்கும் கைப்புள்ள கொஞ்சம் கெத்தாவே பில்டப்பு கொடுத்து அவரை மிரட்டறதே நல்லதுன்னு தோணுது. பாத்துக்கிடுங்க...

அமுதா கிருஷ்ணா said...

அட ஆமாம்ப்பா தலைப்பு தப்போ..சாந்தி மாரியப்பன்

அமுதா கிருஷ்ணா said...
This comment has been removed by the author.
அமுதா கிருஷ்ணா said...

ஆமாம் இந்த முறை செம கெத்தாக போணும்னு முடிவு செய்தாச்சு பால கணேஷ்..