Tuesday, May 25, 2010

ஜம்மு என்ற செல்ல பிள்ளை...

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் செல்லப்பிள்ளை.நம் அரசு ஊட்டி வளர்த்துக் கொண்டு இருக்கும் ஒரு முக்கியமான மாநிலம். இராணுவத்திற்கு அதிகம் செலவு செய்து இந்த மாநிலத்தை பாதுகாத்து வருகிறது. இந்துக்கள் அதிகம் இல்லாத ஆனால் ஒரு இந்து பெயருடன் கூடிய தலைநகரை கொண்டது. ஸ்ரீநகர் ஸ்ரீ என்றால் லெட்சுமி என்ற பொருள்.

முதலில் மெளரியர்கள்,குஷாணர்கள் என பலரால் ஆளப்பட்டது. பின்னர் முஸ்ஸ்லீம் வசமானது முகலாயர்கள் கால்த்தில் தான்.முகலாயர்களில் ஒளரங்கசீப்பிற்கு பின்னால் சிக்கியர்கள் வசமானது. ஆங்கிலேயர்கள் காலத்தில் ஆங்கிலேயர்களால் மறைமுகமாக ஆளப்பட்டது. குலாப் சிங் என்ற மன்னர் ஆங்கிலேயர்களால் நியமிக்கப்பட்டார்.அவரின் வாரிசான ஹரிசிங் 1947-ல் இந்திய விடுதலைக்கு பிறகு காஷ்மீர் தனி நாடாக இருக்கவே விரும்பினார். ஆனால், பாகிஸ்தான் படையுடன் சேர்ந்து மேற்கு பகுதி முஸ்லீம்கள் காஷ்மீரினை தாக்கவும் இந்தியாவின் உதவியினை நாடினார். இந்தியாவுடன் காஷ்மீர் சேர்ந்தால் உதவுவதாக மவுண்ட்பேட்டன் சொல்லவும் அதற்கு ஒத்துக் கொண்டு 26 அக்டோபர் 1947-ல் இந்தியாவுடன் சேர விரும்பி கையெழுத்து இட்டார்.

அப்போது 77% முஸ்லீம்கள் காஷ்மீரில் இருத்தனர். இந்திய படைகள் ஸ்ரீநகரில் குவிக்கப்பட்டன. ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு 1949-ல் பாகம் பிரித்தது. பாகிஸ்தான் தான் கைப்பற்றிய பகுதிகளை கொடுக்க மறுக்கவே, இந்தியாவும் பொது வாக்கெடுப்பு எடுக்க மறுத்தது. காஷ்மீரில் இருந்து பிரிந்த பகுதி ஆசாத் ஜம்முகாஷ்மீர் ஆனது.

1965,1971,கார்கில் போர் 1999 மூலமாக ஜம்மு காஷ்மீரில் 30% பாகிஸ்தான் வசமானது. 1962 சீனா 10% காஷ்மீர் பகுதியினை எடுத்துக் கொண்டது. நம்மிடம் இருப்பது 60% தான். அந்த பகுதியினை ஜம்மு,காஷ்மீர் பள்ளதாக்கு, லடாக் என்று மூன்றாக பிரித்து அதை 22 மாவட்டங்களாக இந்திய அரசு பிரித்து உள்ளது. இந்தியாவில் முஸ்லீம்கள் அதிகம் உள்ள ஒரே ஒரு மாநிலமாகும். காஷ்மீர் பள்ளதாக்கில் முஸ்லீம்கள் அதிகம்,ஜம்முவில் ஹிந்துக்கள் அதிகம்,லடாக்கில் புத்தசமயத்தினர் அதிகம் உள்ளனர்.

கோடைகாலத்தில் ஸ்ரீநகர் தலைநகராகவும், குளிர்காலத்தில் ஜம்மு தலைநகராகவும் இயங்கி வருகிறது.

நம் இந்திய அரசியலமைப்பில் 370-ஆவது பிரிவு காஷ்மீருக்கு என்று சில தனிப்பட்ட சலுகைகளை தந்து உள்ளது. அதன்படி காஷ்மீருக்கு தனி அரசயலமைப்பு,தனி கொடி உள்ளது.

வெளி உறவு துறை,இராணுவம், தகவல் தொடர்பு போன்ற துறைகளுக்கு மட்டும் தான் இந்திய பாரளுமன்றம் இந்த மாநிலத்திற்கு சட்டம் இயற்ற முடியும்.மற்ற அனைத்து துறைகளும் ஜம்மு காஷ்மீரினை கட்டுப்படுத்த முடியாது.

இந்தியாவின் மற்ற மாநிலத்தில் வாழும் இந்திய பிரஜை எவரும், காஷ்மீர் பெண்ணை மணந்த வேறு மாநிலத்தினை சேர்ந்த எவரும் ஜம்மு காஷ்மீரில் சொத்துக்கள் வாங்க முடியாது. இந்த சட்டத்தினால் பாகிஸ்தானிற்கு காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியே இல்லை என்ற எண்ணம் வலுக்கிறது.

காஷ்மீர் பண்டிட்கள் தங்கள் சொந்த மாநிலத்திலெயே அகதிகள் போல் வாழ்ந்து வருகிறார்கள். காஷ்மீர் பள்ளதாக்கில் இருந்த 1,50,000 காஷ்மீரி பண்டிட்கள் எனப்படும் பிராமணர்கள் 1990-ல் காஷ்மீர் பள்ளதாக்கினை விட்டு ஜம்முவில்,டில்லியில் தஞ்சம் புகுந்து தங்கள் சொத்துக்கள் அனைத்தினையும் இழந்து வாழ்ந்து வருகிறார்கள். தீவிரவாதிகளின் தொல்லையால் இந்த முடிவினை எடுத்தார்கள். நிரட்ந்தரமாக ஸ்ரீநகரில் அவர்கள் இப்பொழுது வந்து தங்கினால் இளைஞர்களுக்கு அரசு வேலை தருவதாய் சொல்லி உள்ளார்கள்.

எல்லா பிரச்சனையும் முடிந்து நிம்மதியாக வாழ வழியில்லாமல் ஆங்கிலேயர்கள் அன்றே மத வேறுபாடு என்ற விதை விதைத்து சென்று விட்டார்கள்.

2 comments:

மங்குனி அமைச்சர் said...

கசப்பான வரலாறு

வடுவூர் குமார் said...

ஒரு தடவை போய்வர வேண்டும்.