Tuesday, February 25, 2014

சூப்பர் கைப்புள்ள!!!

பார்றா...கைப்புள்ளயின் சாமர்த்தியத்தை......

போன முறை திநெவேலிக்கு போயிட்டு குழப்பத்தோடு திரும்பி வந்த கைப்புள்ள கூட்டணி திரும்பவும் இந்த மாதம் 13 விடிகாலையில் திநெவேலியில் எண்டர் ஆனது.

தச்சநல்லூர் தாண்டும் போது ரோட்டோரெமெல்லாம் வருக வருக என பேனர்கள்.ஆஹா திநெவேலியில் போன முறை யார்கிட்டேயும் பணம் எதுவும் கொடுத்து ஏற்பாடு செய்யலையே அப்புறமா எப்படி இவ்ளோ கட்-அவுட்,பேனர் என்று ஜெர்க்காகி கண்ணை கசக்கி கொண்டு நிமிர்ந்து நிதானமாக பாத்தாக்கா வருக வருக குலவிளக்கே,வருக வருக சித்தியே,வருக வருக வாணி ராணியே ஓஓ இது நமக்கில்லையா ராதிகா அம்மாக்கா என்று தூக்கம் நன்கு கலைந்ததும் புரிந்தது. பிப்ரவரி 16-ல் அங்கு நடக்க இருந்த மாநாட்டிற்கு சரத் குமார் கட்சிக்காரர்கள் வைத்திருந்த பேனர்கள்.

எண்டர் ஆகும் போதே என்ன ஒரு அமர்க்களம். வியாழன் காலையிலேயே அந்த வீட்டில் ஆஜராகிட்டோம். Mr.@#$% இல்லை. ஆனால் அவரின் மனைவி எங்களுக்கு ஃபேனை போட்டுட்டு அவருக்கு ஃபோனை போட அவரிடம் பேசினேன். கீழ் வீட்டை இன்னும் காலி செய்யலை எனவே ஞாயிற்று கிழமை மதியம் 2 மணிக்கு வந்தால் சாவியை தந்து விடுவதாக கூறினார். இன்னா சார் நீங்க சொல்லி தான் இன்று வந்தோம் இப்படி எங்களை அலைய விடுறீங்களே என்று எரிச்சலுடன் சொல்லிட்டு 4 நாளும் அங்கேயே டேரா போடுவதென்று முடிவு செய்து விட்டோம்.

அப்படியே இன்னொரு ஃப்ரண்டை நடுரோட்டில்  பார்த்துட்டு சாவி ஞாயிறன்று தரலைன்னா அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று டிஸ்கஸ் செய்தோம்.

மறுநாளும் வெள்ளியன்றும் அங்கே போனோம்.வீட்டை யாரோ விலைக்கு பார்க்க வருவதாக கூறி மாடியினை திறந்து வைத்து கொண்டு இன்னும் சில ஃப்ரெண்ட்ஸ்களை கூட்டி வந்து சத்தமாக சிரித்து சிரித்து பேசிட்டு அப்புறமா காந்திநகர் போனோம். இங்கு தான் எனக்கு இந்த ஃப்ரெண்ட் அறிமுகம் ஆனவர்.இருவரும் சேர்ந்து பழைய கதைகளை பேசிக் கொண்டே 25 வருடங்கள் கழித்து அங்கேயிருந்த ஒன்றிரண்டு தெரிந்த வீட்டிற்கு விசிட் செய்தோம்.

மறுநாள் ஸ்ரீவைகுண்டம் பஸ்ஸில் போய் அங்கிருந்து ரூபாய் 500 க்கு கிடைத்த ஆட்டோவில் நவதிருப்பதிக்கும் விசிட் செய்துட்டு மதியம் சூப்பரா ஒரு ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு திரும்பவும் ஃப்ரெண்டின் வீட்டிற்கு போனோம். Mr.@#$% -ன் மனைவியிடம் நாளை மதியம் கட்டாயம் வருவோம் சாவியினை கொடுத்து விடுங்கள் என்று மிரட்டலாக(???) சொல்லி விட்டு வந்தோம்.

மறுநாள் காலை “கதிர்வேலன் காதல்” பார்த்துவிட்டு லஞ்ச் சாப்பிட போனால் Mr.@#$% ஃபோன் செய்கிறார். மதியம் வர வேண்டாம். மாலை ராகு காலம் முடிஞ்சு 6 மணிக்கா வாங்கன்னு.சரியென்று ஃப்ரெண்ட் ஒருவரின் வீட்டில் மதியம் பேசிட்டே ரெஸ்ட் எடுத்துட்டு மாலை 6 மணிக்கு டாணென்று ஆஜரானோம்.

நாங்க 15,20 வருடங்களாக உங்க வீட்டிற்கு செய்த மராமத்து செலவு அது இது என்று ஒரு நீண்ட லிஸ்ட் எழுதி வைத்திருந்தார் Mr.@#$%. ஒவ்வொரு செலவுக்கும் எங்களிடம் வாடகையில் கழித்ததற்கு அவரே போட்ட 10 வருட லட்டர் எங்க கையில் இருந்தது.

இதெல்லாம் சரிப்படாதுங்க 15 வருடம் நீங்க கொடுத்த வாடகையினை இப்படி மொத்தமாக வசூலிக்கிறீங்க எங்களால் இவ்ளோ எல்லாம் கொடுக்க முடியாதுன்னு சொல்லவும்.பதிலுக்கு அவரும் எகிறினார். அப்புறம் இரு தரப்பும் சமாதானமாகி நாங்கள் சொன்ன தொகையினை அவரின் மனைவி ஏற்று கொண்டு Mr.@#$% டம் விடுங்க தானம் செய்ததாக நினைத்து கொள்ளலாம் என்று பெரிய மனதுடன்(???) சொன்னார்.

அடிங்ங்ங்ங்......யார் தானம் செய்றாங்க என்று மனதிற்குள் நினைத்து கொண்டு ஒரு ஸ்டாம்ப் பேப்பரில் இவ்ளோ பணம் ஒரு மாதத்திற்குள் தானமாக நாங்க தர்றோம்னு எழுதி கொடுத்துட்டு சாவியினை வாங்கி கொண்டு காத்திருந்த என் தோழரிடம் கொடுத்துட்டு 9 மணிக்கு சாப்பிடாமல் அவசர அவசரமாக சரத்க்குமார் மாநாடு முடிக்கும் முன்பு ஊரை விட்டு ஓடினா போதும் என்று சென்னை செல்லும் ஆம்னி பஸ்ஸில் சென்னைக்கு வெற்றிகரமாக வந்தோம்.

4 comments:

ADHI VENKAT said...

அடடா! தானமா தராங்களா! நல்லா இருக்கு...:))

திண்டுக்கல் தனபாலன் said...

இதுவல்லவோ பெரிய மனது...!

வெங்கட் நாகராஜ் said...

மனிதர்கள்..... :((((

வல்லிசிம்ஹன் said...

திருநெல்வேலியிலும் இது போல மனிதர்களா. அநியாயமா இருக்கே. வீட்டுக்காரங்களுக்குத் தானம் தராங்களாமா/ வாயாரத் திட்டிவிட்டாவது வந்தீர்களா.