Thursday, December 19, 2013

உயர்ந்த பயணம்

 ட்ரையினில் செல்ல  டாக்டர் சர்டிஃபிகேட் இருந்தால் தான் பயணம் செய்ய முடியும்.பயணம் செய்பவர்களுக்கு ஆக்ஸிஜன் மாஸ்க் வழங்கப் படுகிறது. Xining,china -- Lhasha,Tibet 1956 km, இணைக்கும் Zang-2 ரயிலானது கடல் மட்டத்தில் இருந்து 5072 கி.மீ உயரத்தில் ஆளில்லா உலகிலேயே மிக உயரமான Tanqqula ரயில்வே ஸ்டேஷனை கடக்கிறது. ஆனால் இந்த ஸ்டேஷனில் ட்ரையின் நிற்கும் போது யாரும் இறங்கவோ ஏறவோ மாட்டார்கள்.எதிர் புறத்தில் வரும் ட்ரையின் க்ராஸ் ஆக மட்டுமே மற்ற ட்ரையின் இங்கு நிற்கும்.

 Fenghuoshan Tunnel உலகிலேயே உயரமானது. இதன் தூரம் 1338 மீட்டராம்.4010 மீட்டர் உலகிலேயே மிக நீநீநீளமானGuanjjiao tunnel இங்கு தான் இருக்கிறது. பெரும்பாலான இடங்கள் மிகவும் அபாயகரமானவை, வழியில்675 பாலங்கள்..45 ஸ்டேஷன்கள் அதில் 38 ஸ்டேஷன்களில் யாருமே கிடையாது.டாய்லெட்டில் தண்ணீர் சூடாக இருக்க வேண்டும்.இல்லையெனில் ஃப்ரீஸாகி விடும். ஒவ்வொரு ட்ரையினிலும் கட்டாயம் ஒரு டாக்டர் உண்டு.அந்த டாக்டர் ரொம்ப பாவம்பா.சைனாக்காரர்கள் மேஜிக் தான் செய்கிறார்கள் போல.இந்த ட்ரையினையும் பாதையையும் பற்றி படிக்கவே பயமாக இருக்கு. ஆனால், இந்த பாதையினை போட்ட சைனாக்காரர்களை என்னவென்று சொல்வது. மிக அருமையான அழகான ஏரிகள்,grass lands, இயற்கை எழில்கள் நிறைந்தது. ஆனா ரசிக்க தான் முடியாது ஏன்னா தலைசுற்றல்,மயக்கம்,வாந்தி,தூக்கமின்மை என்று எப்படா ட்ரையினை விட்டு இறங்குவோம் என்று ஆகிடும் அப்புறம் என்னத்த ரசிக்கிறது. அப்படியே பங்களாதேஷ்,இந்தியா வரை இந்த ரயில்வே லைன் எக்ஸ்டெண்ட் ஆக சான்ஸ் இருக்கிறது. அப்படி ஆச்சுன்னா ஒரு எட்டு போயிட்டு வந்துட வேண்டியது தான்.

6 comments:

ADHI VENKAT said...

பயங்கர த்ரில்லிங்கான அனுபவமாக இருக்கும் போல இருக்கிறதே...

இராஜராஜேஸ்வரி said...

உயர்ந்த பயங்கரப் பயணம் ..!

உஷா அன்பரசு said...

பயங்கரமாத்தான் இருக்கு... நாம ( நான்)எக்ஸிபிஷன் ரங்க ராட்டினத்திலயே உட்கார்ந்ததில்லை....! யப்பா நான் வல்லே..

krishnan said...

muthal thadavai flight pogumpothu kuda intha feeling than erunthirukum palaguna sariyaidum

வெங்கட் நாகராஜ் said...

தகவலுக்கு நன்றி.

இந்தியா வந்தால் போயிட வேண்டியதுதான்! :)

Muruganandan M.K. said...

பயங்கரமும் ஆச்சரியமும்