Tuesday, September 03, 2013

தங்க மீன்கள் - சூப்பர் ராம்

ஏதோ பேச முற்படும் மனைவி ஆனால் பேச விடாது மெளனத்தை ராத்திரி இருட்டை கிழித்து கொண்டு ஓடும் ட்ரையினின் அதிக ஓசை.அப்பா நான் வயசுக்கு வந்தா தப்பாப்பா என்று கேட்கும் குழந்தை,தாத்தா இந்த Bag ரொம்ப வெயிட்டா இருக்கு இதை காரில் கொண்டு போ என்று சொல்லிவிட்டு அப்பாவுடன் சைக்கிளில் போகும் செல்லம்மா,குழந்தைக்கு மட்டும் தான் கால் அமுக்கி விடுவீங்களா என்று கேட்கும் மனைவி,நான் வரமாட்டேன் என்று சொன்னேனா நீங்க கூப்பிட்டதும் வந்தேனே என்று ஃபோனில் அழுகையுடன் சொல்லும் மனைவி,கூட படிக்கும் பெண் தனக்கு பொம்மை தரவில்லை என்று வரப்போகும் நாய் பற்றி க்ளாசில் கதை விடும் செல்லம்மா,அந்த நாய் அவசியமா என்ற நம் கேள்விக்கு ராமின் தங்கையிடம் பேசுவதன் மூலம் பதிலும் சொல்லுகிறார்.அந்த நாய் இவ்ளோ விலைன்னு எனக்கே நாலு நாளைக்கு முன் தான் தெரியும் என்று கூறும் போதும்....ராம் சூப்பர் ராம்...

பூரி அடடா அந்த பூரியின் ரசிகையான அந்த குட்டி பெண்ணும் கலக்குது. எவிட்டா மிஸ் போல எல்லோருக்கும் கிடைக்க ஆசை வருது. சடங்கு வீட்டில் அம்மா இழுத்து செல்லும் போது அந்த கேசரியை வாயில் வைத்து கொண்டு போவது வாசலில் இருக்கும் ஜிகினா பேப்பரை கையோடு உருவி கொண்டு போவது அது ஜன்னலில் மாட்டி வைத்திருப்பது,ஏன்மா ஸ்கூல்ல அடுத்தவர்கள் சாமான்களை எடுத்த என்ற போது மிக பெருமையாய் தான் எடுத்த ஒவ்வொரு பொருளாய் ஜன்னலுக்கு வெளியில் காண்பிப்பது..ராம் சூப்பர் ராம்..

ஆனந்த யாழை மீட்டுகிறாய்..என்ன ஒரு வாய்ஸ்
சூப்பர் லொகேஷன்ஸ்..ஒரு ஹார்ட் ஷேப் குட்டி குளம்(வயநாடு) மலைஜாதியினரை தேடி போகும் போது வருதே அந்த குளம் தான். ஆனந்த யாழ் பாடல் அச்சன் கோயிலாம். படத்தில் வரும் இடங்கள் எல்லாம் சூப்பரா இருக்கு.ராம் சூப்பர் ராம்.

முதலில் அந்த குழந்தை ஓவர் ஆக்ட் செய்யுற மாதிரி தோணுது.ஆனா போக போக இயல்பாக உள்ளது. ராம் அடிக்கடி அழுதிருக்க வேண்டாம். எவிட்டா மிஸ் வரும் காட்சிகளை இன்னும் நிறைய வைத்திருக்கலாம். அந்த மோசமான மிஸ்ஸிற்கு நிறைய காட்சிகள் அப்ப தான் அந்த குழந்தை ஏன் அந்த பள்ளியை வெறுக்கிறது என்று நாம் உணருவோம் என்று இருக்கும் போல.பத்து பதினைந்து வருடமாய் ஜெயித்து விடவேண்டும் என்று இந்த சினிமா உலகில் போராடி வரும் ராமிற்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.எனவே தான் காட்சி அமைப்புகள் சூப்பரா இருக்கு.கரெக்டா ராம்.

                                     குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம்.என்ன இந்த
             நாய் கேட்டு நம் குழந்தைகளும் நம்மை படுத்த சான்ஸ் உள்ளது. ஏன்னா என்னுடைய 20 வயசு குழந்தை ஒரு வருடமாக என்னை படுத்தி கொண்டிருக்கிறான் இந்த நாயை கேட்டு!!!!

2 comments:

கார்த்திக் சரவணன் said...

இன்னும் பார்க்கவில்லை... பார்த்தால் அழுதுவிடுவேனோ என்ற அச்சம்... பார்க்கத் தூண்டும் உங்கள் விமர்சனம்.... நன்றி..

சசிகலா said...

ஆனந்த யாழை மீட்டுகிறாள்... என்ற பாடல் வரியை ரசித்து கேட்டேன். படம் பார்க்கும் ஆவலை உங்கள வரிகள் ஏற்படுத்தி விட்டன.