Wednesday, August 21, 2013

வெரைட்டி ஆகஸ்ட்- 2013

இந்தியன் பேங்க் டெபிட் கார்ட்+ 100 ரூபாய் எடுத்து கொண்டு தி.நகர் ஷாப்பிங் போனேன். முதல் மூன்று ஏ.டி.எம்மில் க்யூவில் இருந்த யாருக்குமே பணம் எடுக்க முடியவில்லை. சரி என்று அடுத்த ஏ.டி.எம் போனால் அங்கேயும் அதே கதை.இந்தியன் பேங்க் ஏ.டி.எம் போனதும் தான் தெரிந்தது பேங்கில் தான் ஏதோ ப்ராப்ளம் என்று. தி.நகர் போயிட்டு 10 ரூபாய்க்கு மூன்று கட்டு கொத்தமல்லியும்,20 ரூபாய்க்கு 2 கவர் பூவும் வாங்கிட்டு வீட்டிற்கு அசுர பசியோடு வந்தேன். எப்பவும் இந்த ஏ.டி.எம் கார்டை நம்பி நான் பணம் இல்லாமல் எங்கேயும் போகவே மாட்டேன். அன்னைக்கு என்ன ராசியோ.


மாம்பலம் ரயிலடியில் அடுத்து எடுத்து வைக்கும் அடியே சரவணாதான் என்று சமந்தா விளம்பரம் பார்க்கும்/கேட்டும் போதெல்லாம் எரிச்சலாய் வரும். எரிச்சல் சமந்தா மேல் அல்ல. அந்த கடைக்காரர் மேல். மார்க்கெட் பகுதியில் அந்த புதுக்கடைக்கு சைடாய் இருந்த 30 காய்,பழக்கடைகளை எடுக்க சொல்லி கட்டாய படுத்தி எடுத்தும் விட்டார்கள். கடைக்கு சைடாய் இருக்கும் கேட் வழியாக கடைக்கு சரக்கு எடுத்து செல்ல வேண்டும் என்று சொல்லி இந்த அநியாயம் நடந்து உள்ளது. 40 வருடங்களாய் கடை வைத்து இருந்தவர்கள் யாரிடம் முறையிட்டும் பயனின்றி புலம்பி கொண்டு இருக்கிறார்கள். அந்த மார்க்கெட் ரோடு யார் வீட்டு சொத்து என்று தெரியவில்லை.நான் மாம்பலம் போகும் போதெல்லாம் பட்டர் பீன்ஸ் வாங்கும் கடைக்காரம்மா எதிரில் இருக்கும் அவரின் மச்சினர் கடையின் வாசலிலேயே தன் கடையினை தொடங்கி விட்டார். நாசமாதான் போவாங்க என்று வாழ்த்தி கொண்டே வியாபாரம் பார்த்து கொண்டு இருந்தார்.


பஸ்ஸில் வரும் போது பல்லாவரம் பஸ்-ஸ்டாண்டில் எங்கள் பஸ்ஸில் இருந்து இறங்கியவர்களிடம் வெடு வெடு என இருவர் டிக்கெட் செக் செய்தனர். அப்போது பஸ்ஸில் ஒருவர் ஏறிவிட்டார். இறங்கியவர்களிடம் செக்கிங் முடிந்ததும் ஏற போனவர்களை யாரும் ஏறவேண்டாம் என்று கொஞ்சம் லேட்டாக சொல்லி விட்டு அவர் ஏறி படி அருகில் இருப்பர்களை செக்கிங் செய்ய பல்லாவரத்தில் ஏறியவர் இப்ப தான் ஏறினேன் என்று சொல்ல சொல்ல கேட்காமல் செமையாக திட்ட ஆரம்பித்தார்.அவர் ஏறியதை  நிறைய பேர் பார்த்தும் யாரும் அவருக்கு சப்போர்ட் செய்யவில்லை. நான் அவர் இங்கே ஏறியதை நான் பார்த்தேன் என்று சொல்லி விட்டு பக்கத்தில் இருந்தவர்களுக்கு டோஸும் விட்டேன்.அதன் பின் செக்கிங் ஆள் கீழே இறங்கினார். நம் மக்கள் ஏனோ நியாயம் பேச கூட ரொம்ப தான் யோசிக்கிறார்கள்.

கடந்த 5 வருடங்களாக எனக்கு ஒரு பழக்கம். மெயில் பாஸ்வேர்ட்களை நான் என் வாழ்க்கையில் என்ன நடக்க வேண்டும் என்று ஆசை படுகிறேனோ (நியாயமான ஆசை) அதையே வைத்து விடுவேன். நல்லதை நினைத்தால் அது நடக்கும் என்பார் என் அம்மா.

எனவே நல்லதை  நினைத்து கொண்டே டைப்பினாலும் நல்லதே நடக்கும் இல்லையா. ஒரு அக்கவுண்டிற்கு பாஸ்வேர்ட் காசி என்று வைத்தேன். கடந்த 5 வருடங்களில் 4 முறை காசி போயிட்டு வந்தாச்சு. இன்னொரு அக்கவுண்டிற்கு Own House என்பதே பாஸ்வேர்ட். கடந்த 3 வருடங்களாக வைத்து இருந்தேன். போன வருடம் புது வீடு கட்டி விட்டேன். அப்புறம் எப்பூடி?

4 comments:

செங்கோவி said...

//ஒரு அக்கவுண்டிற்கு பாஸ்வேர்ட் காசி என்று வைத்தேன். கடந்த 5 வருடங்களில் 4 முறை காசி போயிட்டு வந்தாச்சு. இன்னொரு அக்கவுண்டிற்கு Own House என்பதே பாஸ்வேர்ட். கடந்த 3 வருடங்களாக வைத்து இருந்தேன். போன வருடம் புது வீடு கட்டி விட்டேன். அப்புறம் எப்பூடி?//

ச்சே..எவ்வளவு ஈஸியான வழி!..இது தெரியாம இந்த குவைத் பாலைவனத்துல கிடந்து கஷ்டப்படறேனே!..ஓகே, இனிமே என் பாஸ்வேர்டு, just 100 crores!

அமுதா கிருஷ்ணா said...

ஹலோ செங்கோவி நியாயமான ஆசையா இருக்கணும்...

Robert said...

இப்போ உங்களோட பாஸ் வேர்ட் " மெர்சிடிஸ் பென்ஸ் " தானே????.

Robert said...

நானும் இனிமே என்னோட பாஸ்வோர்டை பில்கேட்ஸ் இல்லைன்னா துபாய் ஷேக்கு பேரை வைக்கலாமான்னு யோசிக்கிறேன் ஹி ஹி ...