Monday, August 16, 2010

சந்தோஷ் சிவனின் தஹான்..

தஹான் என்ற 8 வயது காஷ்மீர் சிறுவனின் கதை. அவன் வளர்க்கும் பீர்பாலா என்னும் கழுதை மீது தஹானுக்கு உயிர். அவன் தந்தை 3 வருடங்களாய் காணவில்லை. தாய், சகோதரி மற்றும் தாத்தாவுடன் காஷ்மீரில் ஒரு மலை கிராமத்தில் சிறிய வீட்டில் வசித்து வருகிறான்.
தாத்தா இறந்ததும் அவனின் அம்மா கடன் சுமையால் வீட்டில் இருக்கும் பொருட்களுடன் சேர்த்து கழுதையையும் வட்டிக்காக கொடுத்து விடுகிறார். அதை பெற்றுக் கொண்டவன் கழுதையை ஒரு வியாபாரியிடம் விற்று விடுகிறான் .
அந்த சிறிய வியாபாரியிடம் கழுதையை கேட்டு போராடும் தஹானுக்கு, நடுவில் இட்ரிஸ் எனப்படும் ஒரு டெரரிஸ்டிடம் பழக்கம் ஏற்படுகிறது. இட்ரிஸ் தனக்கு ஒரு உதவி செய்தால் தான் கழுதையினை பெற்று தருவதாக கூறவே அதற்கு தஹான் ஒத்துக் கொள்கிறான். தஹான் அவன் தரும் வெடியினை செக்பாய்ண்டில் தூக்கி எறிந்து வெடிக்கும் படி செய்ய ஒப்பு கொள்கிறான்.
அதை தூக்கி எறிய முற்படும் போது தன் தந்தையினை மிலிட்டரி ஆட்கள் கூட்டி செல்வதை பார்க்கிறான். வெடியினை தூக்கி எறியும் போது மனம் மாறி அதை மிக பயத்துடன் ஒரு ஆற்றில் எறிகிறான். அது தண்ணீருக்குள் வெடித்து சிதறுகிறது. தன் ஊமை தாயிடம் தான் மலையில் தந்தையினை பார்த்தாதாய் கூறுகிறான். வியாபாரியின் பேரனுடன் நட்பு ஏற்படுகிறது. அந்த பேரன் தன் தாத்தாவிடம் பீர்பாலை தஹானுக்கே திரும்ப தரும்படி கூறவே பீர்பால் தஹான் வீட்டிற்கு வந்து விடுகிறது. தஹான் பெரும் மகிழ்ச்சி அடைகிறான்.
தஹானாக பூரவ் பாந்தரே, வியாபாரியாக அனுபம் கெர், ஊமை தாயாக சரிகா, கடன் கொடுத்தவராக ராகுல் கன்னா வாழ்ந்து உள்ளார்கள்.
18 வருடங்களுக்கு பின் காஷ்மீரில் படபிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. பஹல்காம் என்ற இடத்தில் படப்பிடிப்பு நடத்தும் போது அங்கிருந்த சிறுவர்கள் துப்பாக்கியினை பார்த்து ஆச்சரியப் படவில்லையாம். காஷ்மீரின் அமைதியான அழகு நமக்கு ஒரு பயத்தினை ஏற்படுத்துகிறது.
அந்த அமைதியினை கெடுக்கும் விதமான துப்பாக்கி சத்தம் காரணமாய் இருக்கலாம்.

காஷ்மீரின் பனிபடர்ந்த பிரதேசத்தினை மிக அருமையாய் சிவன் படம் பிடித்து உள்ளார். காஷ்மீர் போய் வந்தது போல் ஒரு எண்ணம் வருகிறது.

4 comments:

Chitra said...

அழகாகவும் இருக்கிறது..... பயமாகவும் இருக்கிறது..... ம்ம்ம்....

பாலா said...

தொடர் பதிவிற்கு அழைத்திருக்கிறேன், மறுக்காமல் எழுதுங்கள்...
நன்றி..
http://balapakkangal.blogspot.com/2010/08/blog-post_16.html

அமுதா கிருஷ்ணா said...

வருகைக்கு நன்றி சித்ரா..

ஓ தொடர் பதிவா என்னை அழைத்தமைக்கு நன்றி பாலா..

Anonymous said...

ஓ...சூப்பர்