Monday, May 17, 2010

காஷ்மீர் போலாமா-குல்மார்க்

ஸ்ரீநகரில் இரவு நன்கு குளிர் உள்ளது. போகும் இடம் எல்லாம் ஆப்பிள் மரங்கள் நிறைய பார்த்தோம். தீபாவளி சமயம் தான் ஆப்பிள்கள காய்க்குமாம். ஸ்ரீநகரில் இருந்து 57 கி.மீ தூரத்தில் உள்ள குல்மார்க்கிற்கு போனோம்.1 மணிநேரம் பயணம். காலையில் மிக வேகமாக கிளம்பினோம். ஆனால், எங்களை விட மிக வேகமாக அதிகம் பேர் அங்கு வந்திருந்தனர். கோண்டாலா எனப்படும் கேபிள்கார் பனிமலைக்கு நம்மை அழைத்து செல்கிறது.
டிக்கெட் எடுக்க மிகப்பெரிய வரிசையில் ஹிந்திவாலாக்களுடன் சண்டை போட்டு நின்று டிக்கெட் வாங்க வேண்டி இருக்கிறது. கோங்தோரி என்ற இடம் வரை போக 300 ரூபாயும், அதற்கு மேல் முழுவதும் பனி மலை மேலே போக இன்னும் 500 ரூபாயும் செலுத்த வேண்டும். முதல் பாயிண்ட்லேயே பயங்கரமாய் குளிர் ஆரம்பிக்கிறது.

அதையும் தாண்டி இரண்டாவது பாயிண்ட் செல்வதற்கு கேபிள் காரில் ஏறினோம். கீழே எங்கு பார்த்தாலும் பனி தான். கேபிள் கார் இரண்டாவது பாயிண்டில் நம்மை இறக்கி விட்டதும் கீழே இப்படி
இருக்கும் படியில் இறங்கினால் பனி புயல் மாதிரி காற்றும் பனியும் கொட்டி கொண்டு இருந்தது. எல்லோருக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி. ஆனால் ரொம்ப நேரம் அதில் நிற்க முடியவில்லை. வெள்ளை பனி மலை மீது உலாவுவோம் என்று கொஞ்ச நேரம் உலாவி விட்டு கஷ்டப்பட்டு ஃபோட்டாக்கள் எடுத்துக் கொண்டு (வரலாறு ரொம்ப முக்கியம்) கிளம்பினோம். மிக நல்ல அனுபவம்.
கையில் பனிதுகள்களை அள்ளி எடுத்தாலே கெட்டியாகி நாம் உருட்டும் ஷேப்பிற்கு வருகிறது.
மே மாதமும் குல்மார்க் இப்படி தான் இருக்குமாம். காஷ்மீர் இப்பொழுது எந்த பயமும் இல்லாமல் போய் வரலாம். எங்கு பார்த்தாலும் மிலிட்டரி வேன்கள். மத்திய ரிசர்வ் போலீசாருக்கு தான் மிக அதிகம் வேலை.டூரிஸ்ட்களுக்கு மிக தகுந்த பாதுகாப்பு இப்பொழுது உள்ளது. முஸ்லீம் நண்பர்கள் தான் இங்கு அதிகம் தென்படுகிறார்கள். நாங்கள் தங்கி இருந்த படகின் ஓனர் முஸ்லீம். அவரின் வயதான தந்தை அவரை நாங்கள் பார்க்கும் போதெல்லாம் தொழுகையில் இருந்தார். அவரிடம் ஆசிர்வாதம் வாங்கி கொண்டோம்.மிக அன்பாக உபசரித்தார். மிக நல்ல ஒரு ட்ரிப்பாக எங்களுக்கு இந்த காஷ்மீர் அனுபவம் அமைந்தது. வசதிப்படும் நண்பர்கள் சென்று வாருங்கள்.

3 comments:

Madhu said...

Amutha innum details ethirparthen, payana katturai sariyaga illai.
romba urgenta ezhuthi irukenga?

எல் கே said...

nalla irukunga. kashmiravida, jammuthan kulir jastinu sonnanga

Aravinthan said...

காஸ்மீர் பக்கம் செல்வது பயமில்லையா?.