Friday, May 14, 2010

காஷ்மீர் போலாமா--ஸ்ரீநகர்

ஸ்ரீநகர் பற்றி கொஞ்சமா ஜி.கே..
ஸ்ரீநகரின் குறுக்கே ஓடும் ஜீலம் நதியின் மேல் கட்டப்பட்டு உள்ள 9 பாலங்கள் ஸ்ரீநகரை இணைக்கின்றன. டூரிசத்தினை நம்பியே இந்த நகரின் பொருளாதாரம் உள்ளது. கிரிக்கெட் பேட்கள் செய்யப்படும் வில்லோ மரம் இங்கு அதிகம் காணப்படுகிறது. குங்குமபூவினால் அதிகம் அந்நிய செலவாணி கிடைக்கிறது. ஆப்பிள்,ரோஜா மலர்கள்,ஆப்ரிகாட்,செர்ரி,பாதாம்,அக்ரூட் முதலியவைகள் அதிகம் விளைகிறது. வைஷ்ணவி தேவி, அமர்நாத் யாத்திரை மூலமாக அதிகம் வருமானம் இந்த மாநிலத்திற்கு கிடைக்கிறது. சமீப காலங்களில் மீண்டும் யாத்திரை செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

நம் படையினரில் சிலர்,
ஜீலம் நதியானது மிக ஃபேமஸான தால் ஏரியில் கலக்கும் இடத்திற்கு அருகிலேயே எங்கள் படகு வீடு இருந்தது. தால் ஏரியில் சிக்காரா எனப்படும் சிறிய படகில்பயணம் செய்தோம். 2 மணிநேரம் மெதுவாக இந்த படகுகளை ஓட்டுகிறார்கள். நம் படகின் அருகிலேயே வியாபாரம் செய்யும் படகுகள வந்து விட நாம் வழக்கம் போல் பேரம் செய்து பாசி,ஸ்வெட்டர்,ஷால் என்று வாங்கினோம்.
ஜெமினி கணேஷும், வைஜெயந்தி மாலாவும் போனது போல் வாட்டர் ஸ்கேட்டிங் செய்ய ஆசைப் பட்டு அதிலும் சென்று பார்க்கலாம் என்று லைஃப் ஜாக்கெட் போட்டு தயார் ஆகி ஒவ்வொருவராய் போய் வந்தோம். சின்ன ரவுண்ட் தான் கூட்டி போகிறார்கள். ஆனால், அற்புத அனுபவம். போட்டுடன் கட்டப்பட்ட்ட ஒரு மர ஷீட்டில் நம்மை நிற்க வைத்து போட் ஸ்பீடாய் போகிறது. ஆரம்பத்தில் ஒரு ஜர்க் ஆகி பின் நாமெ நம்மை அஜஸ்ட் செய்து நிற்க முடிகிறது.

ஸ்ரீநகரில் முகல்தர்பார் என்ற மிக ஃபேமஸான ஹோட்டலில் மதியம் சாப்பிட்டோம். பிரியாணியிலிருந்து எண்ணெய் பிழிந்து எடுக்கலாம் அவ்வளவு எண்ணெய்.

முகலாய மன்னர் ஜஹாங்கீரால் ஏற்படுத்த பட்ட நான்கு பூங்காங்கள் மிக அழகாக உள்ளன. மதியம், மாலை முழுவதும் அந்த பூங்காக்களில் செல்விட்டோம்.ஷாலிமர் பூங்காவில் இயற்கையாக உள்ள ஒரு நீர் ஊற்றின் நீர் தித்திப்பாய் இருந்தது. இங்கு இருந்து தான் நேரு குடும்பத்திற்கு தண்ணீர் போகும் என்று சொல்கிறார்கள். எவ்வள்வு உண்மை என்று தெரியவில்லை.
இன்னும் வரும்....

2 comments:

Anonymous said...

உங்கள் பயண அனுபவக் கட்டுரை..பல பயனுள்ள கருத்துகள் தந்தது..அருமை தோழி

Anonymous said...

உங்கள் பயண அனுபவம் பல பயனுள்ள தகவல்கள் தந்தது தோழி..அருமை.