Wednesday, May 12, 2010

காஷ்மீர் போலாமா-சோன்மார்க்

போட் ஹவுஸ் எனப்படும் நூற்றுக் கணக்கான ஜீலம் நதியில் மிதக்கும் படகு வீடுகள் ஸ்ரீநகரில் வந்ததே ஒரு விபத்து என்று தான் சொல்லவேண்டும். அங்கு ஆண்ட மன்னர் ஆங்கிலேயேர்களை நிலத்தில் வீடுகள் கட்ட அனுமதி மறுத்ததால் அவர்கள் இந்த படகு வீடுகளைக் கட்டினராம். இன்றைய மதிப்பில் ஒரு படகு வீடானது ஒரு கோடி ரூபாய் ஆகும். குடும்பத்தினர் பரம்பரையாக இந்த வீடுகளை பராமரித்து வருகிறார்கள். படகில் சமைத்தும் தருகிறார்கள் . சமையலறையினை வாடகைக்கும் விடுகிறார்கள். நாமே சமைத்தும் சாப்பிடலாம். ஒரு 4 நாட்களாவது ஆண்களை ஃப்ரீயா விட்டுவிடலாம் என்று சமைக்க வேண்டாம் என்று சொல்லி, போட்டிலேயே சாப்பாடு ஆர்டர் செய்து விட்டோம்.

நாங்கள் 13 பேரும் தங்கி கொள்ளும் அளவிற்கு மூன்று பெரிய ரூம்களுடன், ஒரு பெரிய ஹாலுடன் அட்டகாசமாய் இருந்தது நாங்கள் தங்கி இருந்த படகு வீடு.படகு ரொம்ப ஸ்பீடாய் போகுது ஜாக்கிரதை என குழந்தைகளை எச்சரித்து விட்டு(சும்மாச்சும்) ஓடும் ஜீலம் நீரை வேடிக்கை காண்பித்து விட்டு இரவு சாப்பிட்டுவிட்டு தூங்க போனோம்.

படகு காரரிடம் காலை உணவு ஆம்லெட்,ப்ரெட் ஆர்டர் செய்தோம். அவர் பூவா,பூவா செய்து தரவா என்று கேட்டார். நான் தான் வரும் இடம் எல்லாம் சும்மா தோசை என்று பறக்கக் கூடாது என்று சொல்லிவிட்டு அவர் சொன்ன பூவா 3 ஆர்டர் சொல்லிவிட்டேன்.என்னவென்றே தெரியாததால் காலையில் பூவா அனைத்தும் எனக்கு தான் என்று நம் படையினர் சொன்னார்கள். காலையில் பூவாவை திறந்து பார்த்தால் அது நாம் செய்யும் அவல் உப்புமா!!!நன்றாகவே இருந்தது பூவா...சாப்பிட்டுட்டு சோன்மார்க் செல்ல தயாரானோம். தங்க நிலம் என்று அர்த்தமாம். கடுகு செடியின் மஞ்சள் பூக்கள் வழி நெடுக இருக்குமாம் மே மாதம் தான் சீசனாம். இப்ப்அகொஞ்சமாய் பூத்து இருந்தது.

நம்ம
மியாவ் 2 மணிநேரத்தில் சோன்மார்க்கில் இறக்கி விட்டார். கொஞ்சமாய் மழை பெய்து கொண்டு இருந்தது. எங்கு பார்த்தாலும் சுற்றிலும் தூரத்தில் பனி மலை. காரை விட்டு இறங்கியதும்,குதிரைக்காரர்கள் கூட்டம் கூடியது நம் படையினை சுற்றி. நம் படையினருக்கு ஏற்கனவே, குதிரை ஏறத்தெரிந்து இருந்ததால் ஆளுக்கு ஒரு குதிரையில் வாடகைக்கு குளிர்கால உடைகளை வாங்கி அணிந்துக் கொண்டு ஏதோ நிலாவில் இறங்க போகும் தோரணையில் புறப்பட்டனர். பாதையே இல்லாமல் கல்,மண்,மேடு,பள்ளம் என்று சவாரி ஆரம்பம் ஆனது.மழை வேறு அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது. நம் உயிர் நம் கையிலேயே இல்லை. கூட யார் வருகிறார்கள் என்று தெரியவில்லை. கையெல்லாம் மரத்து போனது. குதிரையையும் அதன் பையாவையும் நம்பி பயணம் ஆரம்பித்தது. மிக பள்ளமான இடங்களில் கண்களை இறுக்க மூடி கொண்டனர் அனைவரும்.அதை நான் ஓட்டை கண் விட்டு பார்த்தேன். ஒரு மணிநேரத்திற்கு அப்புறம் இந்த தாஜிவாஸ் கிளேசியர்ஸில் குதிரை நம்மை இறக்கி விட்டது. தப்பிச்சோம் பிழைத்தோம் என்று இறங்கி அங்கிருந்த ஒரு டீடெண்ட்டிற்குள் நுழைந்தோம். அங்கு தாக சாந்தி செய்துக் கொண்டு 30 நிமிஷம் நெருப்பின் அருகில் இருந்துவிட்டு கார் இருக்குமிடம் போக தான் வேண்டும் குதிரையினை விட்டால் வேறு வழி இல்லை என்று ஒரு மனதாக ஏறினோம். குதிரைக்காரர் அதிகாரிகளை தம் அடிக்க ஒதுங்கி கொள்ளவே நாமே நம்மையும் நம் குதிரையையும் பார்த்துக் கொண்டோம். கை,காலெல்லாம் மரத்துப் போனது. நிறைய போட்டாக்கள் எடுக்க படையினரின் கை வேலை செய்யவில்லை ஆனால் ஆளுக்கு ஒரு கேமிரா என்று கழுத்தில் ஏதோ தங்கபதக்கம் மாதிரி தொங்க விட்டிருந்தோம்.
நாங்கள் எதிர்பார்த்த பவுடர் மாதிரியான பனி துகள்கள் இங்கு இல்லை. அடர்த்தியான பனி போர்த்திய மலை தான் இங்கு இருந்தது.

இன்னும் வரும்...

2 comments:

மங்குனி அமைச்சர் said...

//ஒரு 4 நாட்களாவது ஆண்களை ஃப்ரீயா விட்டுவிடலாம் என்று சமைக்க வேண்டாம் என்று சொல்லி, போட்டிலேயே சாப்பாடு ஆர்டர் செய்து விட்டோம்.///


என்ன ஒரு பெருந்தன்ம ,

நல்லாருக்கு ,

Aravinthan said...

படங்களைப் பார்த்தால் நியூசிலாந்து ஞாபகம் வருகிறது