Wednesday, September 23, 2009

சவாரிகள்

குதிரை சவாரி : மெரினா பீச்சுல்ல,கொடைக்கானல்ல போயிருப்போம். கேதார்நாத் போன போது ஆசைக்கு கொஞ்ச நேரம் போய் வந்தேன்.


யானை சவாரி:

சின்ன வயதில் கோயில் யானை மேலே நாம் அழ அழ உட்கார வைக்க பட்டிருப்போம். ஆனால், முதுமலையில் யானை சவாரி மறக்கவே முடியாது. ஒரு யானையில் நான்கு பேர் அமர முடியும். ஏறியதும் அது காட்டு பகுதியில் போகுது. யானை பாகன் நம்முடன் அமர்ந்து இருக்க. இன்னொரு பாகனும் உடன் நடந்து வருகிறார். ஒத்தையடி பாதையில் யானை சகதியிலும் சேரிலும் படாமல் நடந்து வர கீழே நடப்பவர் உதவுகிறார். எதிரில்
யானை ஒன்றை ஒன்று பார்த்து கொண்டால் சண்டை போட்டுக் கொள்ளும் என்று சொல்லி பீதியினை கிளப்புகிறார். (விநாயகா நேரிலே வராதப்பா) வேறு ரூட் மாற்றிக் கொள்கிறார்கள் எதிரில் யானை வருவது தெரிந்தால். கொஞ்ச நேரம் நிறுத்தி வைத்து பின் பயணம் தொடர்கிறது. முதுமலையில் தமிழக அரசுக்கு சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் தங்கினோம்.

ரூம் ஒன்று ஒரு நாள் வாடகை 300 ரூபாய். அங்கு வேலை பார்ப்பவர்கள் தங்கும் காலனி சிறிதாக இருந்தது. ரூமிற்கு முன்னால் சிற்றோடை. மாலையில் யானைகள் நீர் குடிக்க, குளிக்க வருகின்றன. ரூமிற்கு பின்னால் மான்களும், மயில்களும் ஆடி கொண்டு இருந்தன. சாப்பாடு என்ன சொல்கிறோமோ செய்து தருகிறார்கள். சப்பாத்தி,சிக்கன்,சாதம் என்று புகுந்து விளையாடினோம். நைட் படுக்கும் போது கொஞ்சம் பயமாக இருந்தது. எதுவும் மிருகம் ரூம் பக்கம் வந்து விடுமோ என்று.

ஒட்டக சவாரி: ராஜஸ்தானில் ஜெய்சால்மர் என்னும் இடத்தில் உள்ள பாலைவனத்தில் செய்த ஒட்டக சவாரி சூப்பராக இருந்தது. கீழே உட்கார்ந்த பின் அதன் முதுகில் இரண்டு பக்கம் காலை போட்டு உட்கார வைக்கப் படுகிறோம். அது மெல்ல எழுந்திருக்கும் போது தான் அடடா தப்பு செய்து விட்டோமோ என்று எண்ண தோன்றுகிறது.
பாகன் முன்னாடி கயிற்றினை பிடித்து கொண்டு மிக வேகமாக நடக்கிறார்.இல்லை ஓடுகிறார். ஒட்டகமும் ஓட ஓட நமக்கு அங்கிருந்து கீழே விழுந்தால் என்ன ஆகும் என்ற பயம் வருகிறது. மெல்ல போகுமாறு சொன்னாலும் பாகன் கேட்பதில்லை.
நான் வேறு நல்ல உயரமான பெரிய ஒட்டகத்தினை செலக்ட் செய்து இருந்தேன். இப்படி ஓடும் என்று தெரிந்தால் சின்னதாய் ஒரு ஒட்டகம் பிடித்து இருப்பேன். ஒட்டக சவாரி முடிந்தவுடன் sand dunes-ல் அமர்ந்து சூரிய அஸ்தமனம் பார்க்கவும், வரிசையாக செல்லும் மற்ற ஒட்டகங்களை பார்க்க இரண்டு கண்கள் போதவில்லை. அனைவரும் மணற்பரப்பின் மேலிருந்து கீழே உருண்டு உருண்டு விளையாடிக் கொண்டு இருந்தனர். நேரம் ஆக ஆக குளிர ஆரம்பித்தது.

3 comments:

நர்சிம் said...

சுவாரஸ்யம்.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி நர்சிம் சார்..

Unknown said...

பலைவணத்தில் கேளிக்கை நன்றாக இருக்கும், ஆனால் பிழைப்பைத் தேடி இங்கிருப்பவர்களின் நிலை நிச்சயம் ரசனைக் குறியதாய் இல்லை, நன்றி

பாலையில் (பணத்தை) திரவியம் தேடுபவன்!