Friday, March 28, 2008

இந்திய சினிமாவும் கிரிக்கெட்டும்

75 வருட இந்திய சினிமாவும், கிரிக்கெட்டும் மக்களுக்கு நன்குத் தீனிப் போடுகின்றன.

சினிமாவில் இருப்பவர்களுக்கு கிரிக்கெட் பற்றியும்., கிரிக்கெட்டில் இருப்பவர்களுக்கு சினிமா பற்றியும் என்னத் தெரியும் என்று நமக்குத் தெரியாது.
ஆனால், இரண்டு துறையில் இருபவர்களுக்கும் ஒருவிதமான ஈர்ப்பு இருப்பது மட்டும் உண்மை.

எராளமான கிசுக்கிசுகள், உடைந்துப் போன உறவுகள், ஜெயித்தக் காதல்கள்... என அனைத்தும் உண்டு.

1960-ல் அஞ்சு மகேந்த்ரா மேற்கு இந்திய வீரர் காரி சோபர் உடன் காதல்..

1980களில் நீனா குப்தா விவிலியன் ரிச்சர்ட் காதல், கல்யாணம் செய்யாமல் குழந்தை என புரட்சி செய்தனர்.

பாகிஸ்தான் வீரர் மோஸிஸ் கான், ரீனா ராய் மணம் முடிந்து பின் சிறிது நாட்களில் ரீனா மட்டும் பாகிஸ்தானில் இருந்து திரும்பினார்.

கபில்தேவ் சரிகா காதல் மட்டும் செய்தனர். திருமணம் கபிலுக்கு ரீமாவுடன்...
சரிகாவுக்கு கமலுடன்..

ரவிசாஸ்த்ரி அம்ரிதாசிங் நிச்சயம் நடந்து மணம் மட்டும் நடக்கவில்லை.

பட்டோடி ஷர்மிளா காதல் திருமணத்தில் முடிந்தது.

அசாருதின், சங்கீதா பிஜ்லானி காதல் நாமறிந்தது.
அசாருதின் முதல் மனைவியை விட்டு பிரிந்தார்.

கங்குலி நக்மா கோயில், குளம் என சுற்றினர். கங்குலி மனைவி டோனா தன் நாட்டியத் திறைமையால், தன் குட்டி பெண்ணாலும் கங்குலியை மீட்டார்.

இன்று கிரிக்கெட் வீரர்கள் நன்கு ஓடுகிறார்கள்.. யார் பின்னால் என்பது தான் முக்கியம். தோனி தீபிகா படூகோனேவை துரத்துகிரறா அல்லது யுவராஜ் சிங் தீபிகாவா ???
ஷாருக்கான்,, ப்ரீத்தீ ஜிந்தா ஒரு குழுவையே வாங்கும் அளவிற்கு கிரிக்கெட்டோடு நெருக்கம்.. வாழ்க வளமுடன்.....

No comments: