Friday, March 28, 2008

ஆண்களும் பாத்துக்கணும் கண்களை...(பெண்களைப் போல)

ப்ளாக் படித்துப் படித்து அல்லது டைப் அடித்து அடித்து சோர்ந்துப் போன கண்களுக்கு.....

வெள்ளரிக்காயைச் சின்ன சின்ன வட்டத் துண்டுகளாய் வெட்டி எல்லா துண்டுகளையும் உள்ளே தள்ளி விட்டு ரெண்டை மட்டும் கண்களின் மேலே வச்சுகிட்டு படுத்துகோங்க(பழைய காதலை நினைத்துக் கொண்டு)

காலையில் குளிக்க போகும் போது( போவீங்களா) இரண்டு சொட்டு தேங்காய் எண்ணை எடுத்து கண்களின் மேலே தேய்த்துக் கொண்டே போகலாம்.( பாடிக் கொண்டும் போகலாம்).

இல்லைனா.. சில்லுனு இருக்கும் பாலை எடுத்து கண்களின் மேலே பூசிக்கொண்டும் போகலாம்( பால் வடியும் முகம்)

இரவு படுக்கும் போது விளக்கெண்ணை இரண்டு சொட்டு கண்கள் மேலே தடவலாம்.(கூடப் படுபவர்கள் திட்டினால் நான் பொறுப்பு இல்லை.)

சாப்பாட்டில் உப்பை குறைத்தால்(தண்ணிப்போட்ட மாதிரி வீக்கம் கண்களை சுற்றி வராது)

தினம் ஒரு நெல்லிக்காய்(கனி) சாப்பிடலாம். கேரட் நல்லது.

எல்லாவற்றுக்கும் மேலே நன்கு தூங்கவும்.. நிறைய தண்ணீர் குடிக்கவும். நல்ல இணையங்களைப் பார்க்கவும்...

No comments: