Thursday, November 13, 2014

ஆண் - அழகு


ஒரு ஆண் எப்போதெல்லாம் அழகாய் தெரிகிறான்?

அதிகாலை பனியில் நனைந்த படி கோலம்  போடும் பெண்ணிற்கு துணைக்கு நிற்கும் போது.(இப்போதெல்லாம் கோலம் போடுறாங்களா என்ன சரி சரி கோலம் போட்டா தான் செயின் அத்துட்டு போறாங்களே)

பட்டு வேட்டி சட்டையில் சுபநிகழ்ச்சிகளில் அங்கும் இங்கும் வலம் வரும் போது.(இப்பொழுதெல்லாம் பெல்ட் போட்டு தானே வேஷ்டி கட்றாங்க)

பெண்களை மதித்து நடக்கும் போது.(அதுங்க உங்களை மதிக்காதுங்க)

பெண்களின் வலியினை காது கொடுத்து கேட்கும் போது.(உங்க காதுல வலி வந்தா பொறுப்பு நானில்லை)

தம்பி தங்கைகளுக்கு இன்னொரு தந்தையாய் இருக்கும் போது.(அதுங்க ஏமாத்திட்டு போயிடுங்க)

பெண்கள் கூட்டத்தை கடக்கும் போது ஏதேனும் சொல்லி கிண்டல் செய்வார்களோ என்று பயந்து கொண்டே செல்லும் போது.(கூட்டமா இருந்தா ரொம்பதான் ரவுசு செய்யுங்க)

தன் வீட்டு பெண்களுக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில் சமைக்கும் போது.
(சமையல் மட்டும் செய்துடுறேன்.எப்ப உடம்பு சரியாகுதோ அப்போ பாத்திரம் தேய்த்துக்கோங்க)

பிடிக்குதோ பிடிக்கலையோ கோயிலுக்கு பெண்களுடன் செல்லும் போது.(துணைக்கா வர்றோம்.அங்காச்சும் கலர் கலரா பார்க்கலாமேன்னு)

கட்டாயம் பிறரின் பிறந்தநாள்,திருமண நாட்களை மறக்கும் போது.(எம்பிறந்த நாளே தெரியாது இதுல....)



இப்படி பின்னூட்டத்தில் சொல்லிட்டு போங்க சார்..மேடம்..

எதோ ஒரு பதிவில் பெண் அழகுன்னு இப்படி ஒரு லிஸ்ட் ரொம்ப நாள் முன்னாடி படிச்சது.




3 comments:

Anonymous said...

Fantastic!!
good one!!!

-small brother.(tamil-la chinnatthambi)

Avargal Unmaigal said...

//அதிகாலை பனியில் நனைந்த படி கோலம் போடும் பெண்ணிற்கு துணைக்கு நிற்கும் போது.(இப்போதெல்லாம் கோலம் போடுறாங்களா என்ன சரி சரி கோலம் போட்டா தான் செயின் அத்துட்டு போறாங்களே)///

செயினை துக்கிட்டு போறது அந்த காலம் ஆனா தங்கத்தையே(மனைவியையே)
தூக்கிட்டு போயிறுவாங்க இந்த காலத்தில்

Avargal Unmaigal said...

சுவராஸ்யமான பதிவு ப்ராக்கெட்டுகுள்ள வந்த வரிகள் மேலும் சுவாரஸ்யத்தை தருகின்றன பாராட்டுக்கள்