Tuesday, July 29, 2014

நவதிருப்பதி

இந்த மாதம் திருச்செந்தூர் போக வேண்டும் என்று முடிவு செய்ததும் நவதிருப்பதியும் போக வேண்டும் என்று முடிவானது.நெல்லையிலிருந்து மதியம் 1 மணிக்கு காரில் புறப்பட்டோம். நேராக நத்தம் - சந்திரன்,திருப்புளியங்குடி-புதன்,இரட்டைதிருப்பதி - ராகு,கேது, கடைசியில் பெருங்குளம் - சனி ஸ்தலம் தரிசனம் செய்தோம்.  இந்த கோயில்கள் மதிய நேரத்திலும் திறந்து இருக்கும் என்ற தகவலே நாங்கள் மதியம் நெல்லையிலிருந்து கிளம்ப காரணம்.இக்கோயில்கள் மாலை 6 மணியளவில் மூடப்படுகின்றன.

 நாங்கள் மாலை 6 மணியளவில் திருச்செந்தூர் சென்றடைந்தோம். அங்கே ஏற்கனவே ஃபோனில் புக் செய்து இருந்த சிவமுருகன் லாட்ஜில் தங்கினோம். மிகப்பெரிய 4 பெட் ரூமிற்கு Rs.1,200 ஒரு நாள் வாடகை. ரூம் நன்கு பெரியதாக விசாலமாக,சுத்தமாக இருந்தது.

அங்கேயிருந்து கோயிலிற்கும்,மணி ஐயர் ஹோட்டலுக்கும் நடந்தே போயிடலாம். கோயிலில் அதிக கூட்டம் இல்லை. 10 ரூபாய் டிக்கெட் எடுத்து தரிசனம் செய்துட்டு வெளியில் வந்தால் தங்கத்தேர் தரிசனமும் கிடைத்தது. அப்படியே கொஞ்ச நேரம் பீச்சில் உட்கார்ந்து விட்டு ரூமிற்கு வந்தோம். மறுநாள் காலை 5.30 மணிக்கெல்லாம் கடலில் குளிக்க போனோம். ஒரு மணிநேரம் நன்றாக குளித்து விட்டு ரூமிற்கு வந்து ட்ரஸ் மாத்திக்கொண்டு திரும்ப கோயில் போனோம். ஒரு மணிநேரத்தில் தரிசனம் செய்துட்டு மணி ஐயரில் காலை சாப்பாடு முடித்து கரெக்டா 9.30க்கு ரூமை காலி செய்துட்டு நேற்று பார்க்காத மிச்ச திருப்பதிகளை தரிசிக்க சென்றோம்.

தென் திருப்பேரை-சுக்ரன்,திருக்கோளூர் -செவ்வாய்,ஆழ்வார்திருநகரி-குரு,கடைசியாக ஸ்ரீவைகுண்டம்-சூரியன் தரிசனம் செய்து முடித்த போது மதியம் 12.30 மணியாகி இருந்தது. இந்த கோயில்கள் மதிய நேரத்தில் மூடப்பட்டு மாலை 4-8.30 வரை திறந்திருக்கும். தென் திருப்பேரைக்கு அடுத்து வழியில் நவக்கைலாசத்தில் ஒன்றான தென்காளகஸ்தி எனப்படும் ராஜாபதியில் கேதுவுக்கு ஒரு கும்பிடு.
ஒரே நாளில் 9 கோயில்கள் பார்க்காமல் இப்படி பிரித்து பார்த்தது நன்றாக இருந்தது.

மறுநாள் 1.30 மணியளவில் நெல்லை வந்தடைந்தோம். டவேரா கார் புக் செய்து இருந்தோம். RS.2700 ஆனது.

ஸ்ரீவைகுண்டத்தில் காலை 9.30க்கு சூரியன் ஸ்தலத்தை தரிசித்து விட்டு அங்கேயிருந்து ஆட்டோவில் (Rs.500)மதியம் 2 மணிக்குள் ஒன்பது கோயில்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்திடலாம். ஒரு முறை இப்படியும் நான் சென்றேன்.

அனைத்தும் அழகிய கோயில்கள்+பழமையான கோயில்கள், ஸ்ரீவைகுண்டம் தவிர்த்து அனைத்து கோயில்களிலும் பெருமாள் பிரமாண்டமாக இருக்கிறார். அனைத்து கோயில்களிலும் பூனைகள் நடமாடி கொண்டிருந்தன. எல்லா கோயில்களிலும் பூவோ,துளசி மாலையோ ரூபாய் பத்திற்கு கிடைத்தது. கோயிலில் ஐயர்களும் கோயில் பற்றி நன்கு விளக்கம் கொடுத்து பிறகு அர்ச்சனையும் செய்து தருகிறார்கள்.சுக்ரன் ஸ்தல அர்ச்சகர் ரிடையர்டு பி.டி மாஸ்டர் அல்லது ஹெட்மாஸ்டர் போல வந்திருந்த பக்தர்களை ரொம்பவும் மிரட்டி கொண்டே இருந்தார்.




2 comments:

”தளிர் சுரேஷ்” said...

குறைந்த செலவில் நிறைந்த பயணமாக அமைந்த நவதிருப்பதி பயணப் பகிர்வுக்கு நன்றி!

krishnan said...

thanks