டைட்டிலில் வரும் ஃபோட்டாக்கள் அருமை.ராதா,அம்பிகாவிற்கு இடையில் இன்னொரு சகோதரி மல்லிகா என்று உண்டு அந்த பெண் தன் முகத்தினை எந்த பத்திரிக்கையிலும் காண்பித்தது இல்லை. கார்த்திகா அந்த பெரியம்மா போல் இருக்கிறார் போலும்.ராதா மாதிரி இல்லை.
டைரக்டருக்கு அழகான ஆண்கள் மேல் ஏதோ கோபம் போல் இருக்கிறது. கனாகண்டேன் பிரிதிவிராஜ் போல் இதில் அஜ்மல்.அஜ்மல் அசத்தி இருக்கிறார். என்னமோ ஏதோ பாட்டை இன்னும் நல்லா எடுத்து இருக்கலாம்.இந்த பாட்டில் வரும் குவியமில்லா,காட்சிப்பேழை என்றால் என்ன என்று என் அருமை புத்திரர்களுக்கு விளக்கினேன்.
ஸ்டேஜில் வெடி வெடிக்கும் போதே என் கணவர் யார் வில்லன் என்று சொல்லி விட்டார்.நான் நம்பவில்லை.ரிஷியோ அந்த ஸ்டேஜ் தன் காலேஜில்(SRM)போடப்பட்டதாய் சொல்லி பெருமைப் பட்டான்.
ப்யா சுறுசுறுன்னு இருக்காங்க.கார்த்திகா முழி முழின்னு முழிக்காங்க.
ஈ பார்த்துட்டு ஜீவா பிடித்து போச்சு.இதிலும் ஏமாற்றவில்லை.ப்யா ஜீவா நட்பு இந்த காலத்திய நட்பு.பிரகாஷ் ராஜ் கொஞ்ச நேரமே வந்தாலும் நச்.காரில் கார்த்திகா இண்டர்வியூ செய்யும் காட்சியில் நடக்கிறேன்,நடக்கிறேன், நான் நடந்தா என்னா ஆகும் என்று பார்க்கிறீயா என்று அழுத்தி சொல்வது அவருடைய ஸ்டைல்.
கடைசி சண்டை காட்சியினை கொஞ்சம் குறைத்து இருக்கலாம்.சண்டை முடிந்ததும் தீபாவளி கொண்டாடி முடிச்ச மாதிரி இருந்தது அவ்வளவு டமால்,டுமீல்.காலேஜ் பாட்டு,முதல் கெட்-டு-கெதர் பாட்டு,வெண்பனி பாட்டை தவிர்த்து இருந்தால் படத்தின் நீளமும் கம்மியாகி இருக்கும்.அமளி துமளி பாட்டினை எடுத்தவிதம் மிக அருமை.மலை விளிம்பிலேயே ஜீவா,கார்த்திகாவினை நிறுத்தி எடுத்து இருக்கிறார்கள்.ஆடும் போது கீழே விழுந்து விடுவார்களோ என்று பக் பக்கென்று இருந்தது.லொகேஷன் நார்வேயாம். வெண்பனி பாட்டு சைனாவாம்.
படம் ஆரம்பம் முதல் கடைசி வரை போர் இல்லை.ஸோ, எல்லோரும் பாருங்”கோ”.
