Sunday, March 07, 2010

பாவம் இந்த தமிழர்கள்...!!!

20 நாட்களுக்கு $6,120, இந்திய மதிப்பில் ரூபாய் மூன்று லட்சம். மூன்று வேளை நல்ல கல்யாண சாப்பாடு,தங்க நல்ல அறை,தினம் இரண்டு வேளை பால், காலை மாலை என இரண்டு மணிநேரம் சொற்பொழிவு, ஒரு மணி நேரம் யோகா க்ளாஸ் என இரண்டு மாதத்திற்கு ஒரு 20 நாட்கள் இந்த ப்ரொக்ராம் அந்த ஆசிரமத்தில் நடத்தப்படும். ஒரு குழுவில் 100 பேர்கள்.இதில் கலந்துக் கொள்பவர்கள் அதிகம் பேர் கனடா,இங்கிலாந்து,அமெரிக்காவில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்கள்.
அவருக்கு பாத பூஜை செய்ய 25 ஆயிரம் ரூபாய் தனியே கட்டவேண்டும். அந்த இருபது நாட்களும் தினம் ஒரு 50 பேராவது 5 பேர்கள் அடங்கிய ஒரு குழுவாக சேர்ந்து தங்கம் மற்றும் வெள்ளி தாம்பாளத்தில் பாத பூஜை செய்ய அனுமதிக்கப் படுவார்கள்.

அகதிகளாய் வாழ போன மக்களுக்கு அந்த நாட்டு அரசாங்கம் கொடுக்கும் மாத முதியோர் பென்ஷனை இப்படி வேஸ்டாக இந்த ஆசிரமத்திற்கு கொடுத்து ஏமாறுகிறார்கள். எங்கு தான் பிரச்சனை இல்லை. யார் தான் இப்பொழுது நாடு விட்டு நாடு போய் தங்கள் வேர்களை தொலைப்பதில்லை. அவர்கள் பிரச்சனையை தீர்க்க இவரை விட்டால் ஆள் இல்லை என்பதனை போல நன்கு மூளை சலவை செய்யப்பட்டவர்கள். அந்த நாடுகளுக்கு சொற்பொழிவிற்கு போகும் போது எல்லாம் ஒரு வீட்டிற்கு அந்த ஆசிரம சாமியார் விசிட் செய்ய 4 லட்சம் ரூபாய் ஃபீஸாம். தினம் 5 வீடுகளாவது இவர் விசிட்டுவது உண்டாம்.
அவர் பாதம் நம் வீட்டில் பட்டால் நம் பாவங்கள் போய்விடுமாம். அதற்கும் வெயிட்டிங் லிஸ்ட் உண்டு.இதில் பாதி பேர் இலங்கையிலும் அரசாங்க வேலை பார்த்து அந்த அரசாங்கத்திலும் பென்ஷ்ன் வாங்குபவர்கள். அனாமத்தாய் பணம் வந்தால் அதனை இப்படி தான் நாசம் செய்வார்கள் போலும். இந்த வருடம் இலங்கைய்யின் புது அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்துக் கொண்டு இலங்கையில் பென்ஷன் வாங்குபவர்களை ஒழுங்கு படுத்த மற்ற நாட்டு அரசுடன் பேச்சு வார்த்தை தொடங்கி உள்ளது.அதாவது பென்ஷனை நிறுத்துவது இல்லையென்றால் அந்த நாட்டு பென்ஷ்ன் தொகையை குறைப்பது.

தமிழில் பேச்சு வல்லமை உடைய இவரின் குறி வெளி நாட்டில் வாழும் பணக்கார இலங்கை தமிழ் மக்களே. இவர் ஆசிரமத்திற்கு இப்படி 20 நாட்கள் வந்து தங்குபவர்கள் இவர்கள் தான் அதிகம். ஏற்கனவே, மன அமைதி இழந்து தவிக்கும் இந்த மக்கள் சன் சேனல் வீடியோ காட்சியினை எப்படி எடுத்துக் கொள்வார்களோ, 2009 டிசம்பர், ஜானவரி மாத ப்ரோகாமில் இவர்களில் ஒருவராய் இருந்து பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அந்த நடிகையை தினம் பார்த்து பேசிய அந்த குழு உறுபினர்கள் இதனை எப்படி ஜீரணித்து கொள்வார்களோ. இனியாவது பணத்தினை வீணாக்காமல் நல்ல காரியங்களுக்கு செலவிடலாம் இல்லை அவர்கள் வம்சத்திற்காவது சேர்த்து வைக்கலாமே.


பிரச்சனைகள் இவர்களை இப்படி பணம் செலுத்த தூண்டுகிறதா. இல்லை.ஒரு பெரிய ப்ரெஸ்டீஜ் இந்த மக்களை இப்படி பணம் கட்ட தூண்டுகிறது.நீ போனீயா இரு இந்த வருடம் நானும் போய் வருகிறேன் என்ற ஒரு போட்டி மனப்பான்மையால் ஆசிரமத்திற்கு அமோக வாழ்வு. போய் வந்தவர்களை பார்த்து நிறைய பேர் இந்த ஆசிரமத்திற்கு குடும்பம் குடும்பமாக வந்து மூன்று மாதங்கள் எல்லாம் தங்கி செல்கிறார்கள். 20 நாட்களுக்கு 3 லட்சம் என்றால் கணக்கு பார்க்கவும்.

மூன்றே லட்சத்தினை மூன்று மாணவர்கள் படிக்கக் கொடுக்கலாம். இல்லையென்றால் மூன்று ஏழைப் பெண்களின் கல்யாணத்திற்கு உதவலாம். இல்லையென்றால் யாருக்கேனும் ஆபரெஷனுக்கு உதவலாம். இல்லையென்றால் அவர்கள் நாட்டில் இருக்கும் அனாதை ஆசிரமத்திற்கு கொடுக்கலாம்.

இல்லை என்றால் நன்கு ஊர் சுற்றி இந்தியாவின் வளமையான கோயில்களையும், இயற்கையையும் ரசித்துப் போகலாம். இப்படி எத்தனையோ இல்லையென்றால் இருக்கும் போது எப்படி தான் இப்படி பணத்தினை வீணாக்குவார்களோ தெரியவில்லை. எங்கேயும் கிடைக்காத நிம்மதி மூன்று லட்சம் செலவு செய்து 20 நாட்களில் ரெடிமேடாக வாங்கி செல்ல முடியுமா?

அந்த சாமியாராவது வாங்கிய பணத்திற்கு ஒழுங்கு முறையாக இருந்து இருக்கலாம். இல்லை ஜாக்கிரதையாக ரூமில் கேமிரா இருக்கிறதா என்று செக் செய்து இருக்கலாம்.

ஏற்கனவே மனக்கவலையில் அல்லது மன நோயில் இருக்கும் அந்த மக்களுக்கு பெரிய துரோகத்தினை செய்து விட்டார்.

2 comments:

தமிழ் உதயம் said...

சொல்ல விஷயத்தை தெளிவாகவும், அழகாகவும், நேர்மையாகவும் சொல்லி விட்டீர்கள். எடுத்து கொள்வதும், தூரப் போடுவதும் மக்களின் கைகளில் உள்ளது.

அமுதா கிருஷ்ணா said...

நன்றி தமிழ் உதயம்