Thursday, December 17, 2009

வெரைட்டி

இதுவும் தமிழ் தான்: டேய், எங்கேடா போன? பக பக-னு வானம் வெறிச்சிடுச்சு, நீ டக் டக்-னு வந்தால், மட மட-னு வேலையை ஆரம்பித்து சட்டு,புட்டுனு அடுத்த வேலையை பார்க்கலாம். ஒருவர் செல்ஃபோனில் இப்படி டெல்லிட்டு இருந்தார் .

என்ன நடக்கும்: அழகி படம் கேடிவியில் சமீபத்தில் அழுதுக் கொண்டே பார்த்தேன். பழைய காதலி கஷ்டப்பட்டால் ஆண்கள் மனது மிக கஷ்டப் படுகிறது பார்த்திபன் போல. பழைய காதலி நல்ல பணக்காரியாக இருந்தால் பொறாமைப் படுவார்களா??? .

பஸ்ஸா நரகமா: மாயவரம் போனேன் ...சிதம்பரம்,சீர்காழி,மாயவரம் என்று பாவம்பா இந்த பஸ் கண்டக்டர்களும்,டிரைவர்களும்,என்ன ரோடு, என்ன பஸ், ஐயோ பாவம் பஸ்ஸில் பயணிப்பவர்களும் இந்த மழைக் காலத்தில் படும் பாடு. மழை பெய்யும் போது ஜன்னல் கதவுகள் மூடி இருப்பதால் காற்று இல்லை, மேலே இருந்து ஓட்டைகள் வழியே தண்ணீர் கொட்டுவதாலும் பஸ்ஸெல்லாம் தண்ணீர்...கவர்கள்,பழத் தோல்கள், பாட்டில்கள், மண் என்று கடவுளே, இந்தியர்கள் மட்டும் குப்பையை பொது இடத்தில் போடுவதை விடமாட்டார்களா??? பஸ்ஸில் வந்த 7மணி நேரமும் நரகம் மாதிரி இருந்தது.

என்ன காரணம்:பதிவர் சந்தனமுல்லையின் ப்ளாக்கை திறந்தாலே என் சிஸ்டம் நின்று விடுகிறது..என்ன காரணம்?

நல்லவரா கெட்டவரா: என் மாமா பெண்ணின் மாமியார் போன வாரம் இறந்துவிட்டார். எங்கள் யாருக்கும் கவலையாகவே இல்லை. இம்சை போனது அவளுக்கு இனிமேலாவது நிம்மதி என நினைத்தோம். நாம் மருமகளுக்கு இம்சை கொடுக்காமல் இருக்க வேண்டும் என்று சபதமே எடுக்க தோன்றியது. ஒருத்தர் சாகும் போது தான் தெரிகிறது அவர் நல்லவரா கெட்டவரா என்று.

ஆசிரியருக்கு கல்யாணம்: தூத்துக்குடி ஸ்பிக்கில் இருக்கும் என்.டி.டி.ஃப்-ல் டிரைனிங் ஆபிசராக பணிபுரியும் என் அத்தை பையன் மதன் கல்யாணத்திற்கு போனேன்.மண்டபம் முழுவதும் ஸ்டூண்ட்ஸ்தான். பேட்ச் பேட்சாக வந்து கலக்கிவிட்டார்கள். காலேஜும் ஹாஸ்டலும், கல்யாண மண்டபமும் ஒரே கேம்பஸில் எனவே அனைத்து மாணவர்களும் வந்து கலக்கினார்கள். மிக சந்தோஷம் அனைத்து முகத்திலும். மதன் போலியோவால் இடது கால் சிறிது பாதிக்கப்பட்டவர். மிக அன்பான ஒரு ஆசிரியர்.

ஃப்ளாட்பார்மில் ஏமாந்தோம்: தூத்துக்குடி திருமணம் முடித்து அப்படியே திருச்செந்தூர் சென்றேன். இரவு 740க்கு ட்ரைன் தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு. திருச்செந்தூரில் இருந்து வரும் வழியில் தேர்தல் பிரச்சாரம் என்பதால் சுற்றி சுற்றி பஸ் வந்து ரொம்ப நேரம் ஆகி விட்டது. தூத்துக்குடி பஸ் ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ எடுத்து பறந்து வந்தோம். 738க்கு ட்ரைனில் ஏறினோம். ஃப்ளாட்பாமில் சாப்பிட ஒன்றுமே கிடைக்கவில்லை. ஸ்டேஷன் வரும் வழி எல்லாம் நிறைய பேக்கரி. ஏக்கமாய் பார்த்துக் கொண்டே வந்தேன் மெக்க்ரோனை. என் தம்பி நேரம் ஆகிவிடும் என்று என்னை ஒன்றும் வாங்க விடவில்லை.

No comments: