Monday, May 11, 2009

காந்திஜி இறக்கும் போது ஹேராம் என்று சொன்னாரா?



காந்திஜியின் காரியதரிசியாக இருந்த திரு.வி.கல்யாணம்(87 வயது) என்பவரைப் பேட்டி கண்ட   நடந்தது என்ன என்ற விஜய் டிவி நிகழ்ச்சியில் இப்படி ஒரு சந்தேகம்.

காந்தி சுடப்பட்டப் போது அவருக்கு பின்னால் 6 அங்குலம் தூரத்தில் இருந்ததாக தெரிவித்த திரு. கல்யாணம் காந்திஜி ஹேராம் என்று கூறியதாக் தன் காதில் விழவில்லை என்று கூறினார். கேட்ஸே மிக அருகில் இருந்து சுட்டதால் உடனே அவர் இறந்து விட்டதாகக் கூறினார்.  

மேலும், காந்திஜியின் பிடிவாதத்தால் தான் படேல் இந்தியாவின் சார்பாக ரூபாய் 50 கோடி பாகிஸ்தானுக்கு சுதந்திரத்திற்கு பின் கொடுக்க ஒத்துக் கொண்டதாகத் தெரிவித்தார். அந்த பணம் ஆயுதம் வாங்க தான் அவர்களுக்கு பயன்படும் என்று படேல் முதலில் மறுத்து உள்ளார்.
   
தமிழ், பெங்காலி, ஹிந்தி, மராட்டி, இங்கிலீஷ் மொழிகளில் சரளமாக உரையாட தெரிந்த திரு. கல்யாணம் தற்போது தேசியப் பாதுகாப்பு கழகம் என்ற கட்சியின் பிரசிடெண்ட் ஆக உள்ளார். தெற்கு மற்றும் மத்திய சென்னையில் இரு வேட்பாளர்களை இந்த முறை தேர்தலில் இந்த கட்சி  நிறுத்தி உள்ளது.  

No comments: