Monday, April 21, 2008

பெற்றோர்களே உஷார்...

இப்போது எல்லாம் பள்ளிகளில் ப்ராஜக்ட் அது இது என்று எதாவது சொல்லி எப்பவும் மாணவர்கள் தங்கள் பையில் பேனா, பென்சில் மட்டும் இல்லாமல்.. ஃபெவிகால், வைட்னர், என்று வைத்து உள்ளனர். அதன் மணம் பிடித்துப் போய் அதை முகர்ந்துப் பார்க்கும் குழந்தைகள் நாளடைவில் அதற்கு அடிமை ஆகின்றனர். தினம் கொஞ்ச நேரம் என்று ஆரம்பிக்கும் பழக்கம் கேட்டில் முடிகிறது. கொஞ்ச கொஞ்சமாய் மூளையை மழுங்கச் செய்யுமாம் இந்தப் பழக்கம். பெற்றவர்கள் தினம் நம் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்காத போது தான் இந்த பழக்கம் ஆரம்பிக்குமாம். எனவே, பிள்ளைகள் அடிக்கடி இந்த பொருட்களை கேட்டால் உஷாராகி விடுங்கள். இந்த பொருட்கள் ஐந்து ரூபாய் முதல் பத்து ரூபாய் வரை விற்பனையாகின்றன. எனவே, மிக சுலபமாய் வாங்கி விடுகிறார்கள். இளம் மாணவர்களுக்கு எதுவாகிலும் ஒட்ட வேண்டுமானால் நாமே உதவி விட்டு பின் வாங்கி வைத்து பழக்க வேண்டும்.

No comments: