மதியம் கொண்டு போகும் உணவினை கூட இருக்கும் சில சாப்பாட்டு ராமன்கள் முழுவதும் சாப்பிட விடுவதில்லை. எனவே காலையில் 8 மணிக்கு போகும் குழந்தைகள் அடிக்கும் இந்த வெயிலில் அரைகுறை சாப்பாடு சாப்பிட்டு இரவு 8 மணிக்கு வீட்டிற்கு வருவதால் மிக டல்லாக வருகிறார்கள். அதன் பிறகு என்ன படிக்க முடியும். இதை புரிந்துக் கொள்ளாத பெற்றோர்களும் வீட்டிலும் படி படி என்று உயிரை எடுத்தால் என்ன தான் செய்வார்கள் மாண்வர்கள். நல்ல சத்துள்ளதாய் சாப்பிட்டால் தானே நன்கு படிக்க முடியும்.
நன்கு சிரத்தையாக படிக்கும் மாணவர்கள் பற்றியது அல்ல இந்த புலம்பல். சுமாராய் படிக்கும் ஆவரேஜ் மாணவர்கள் பற்றியது தான் இந்த புலம்பல்.வியாபாரம் ஆகிவிட்ட கல்விதுறையால் இந்த மாணவர்கள் உடல் நலம் மிக பாதிப்படைகிறது.
நன்கு படித்தால் மட்டும் தான் வாழ்க்கை.IT மட்டும் தான் வேலை என்ற மோகம் எப்பொழுது தான் மறையுமோ. சுமராய் படித்தும் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று எப்பொழுது தான் இந்த பெற்றவர்கள் உணர்வார்களோ. பெற்றொர்கள் உணர்ந்தாலும் இந்த பள்ளிகள் விடுவதாயில்லை.
என் ஃப்ரெண்டுடைய பையன் இந்த வருடம் திருநெல்வேலியில் ஒரு பள்ளியில் 10 -ஆம் வகுப்பு படித்து வருகிறான். ஸ்டடி ஹாலிடேஸ் விடவில்லை என்பதால் இவளாக பையனை ஸ்கூலிற்கு அனுப்பாமல் 2 நாட்களாக வீட்டிலேயே படிக்க வைத்து இருக்கிறாள்.ஃபோன் செய்து ஸ்கூலில் அனுப்பும் படி சொல்கிறார்கள் என்று ஃபோனை கட் செய்து இருக்கிறாள். ஒரு நாள் காலை வேளையில் டீச்சரே வீட்டிற்கு வந்து விட்டார்களாம். இத்தனைக்கும் அந்த பையன 90% எடுக்கும் மாணவன். டீச்சர் வருவதை மாடியில் இருந்து பார்த்து விட்ட அந்த பையன் ஓடி போய் பாத்ரூமிற்குள் ஒழிந்து கொண்டான்.பையனுக்கு உடல்நிலை சரியில்லை என்று அவன் அப்பாவுடன் டாக்டரிடம் போய் உள்ளதாய் சொல்லி சமாளித்து அந்த டீச்சரை அனுப்பி இருக்கிறாள். ஹால் டிக்கெட்டினை இன்னும் கையில் கொடுக்காமல் இருப்பதால் ஸ்கூலிற்கு போகவே பயமாக இருக்கிறது என்று புலம்பி கொண்டு இருக்கிறாள்.மாணவர்களுக்கு படிப்பின் மீதே வெறுப்பு வரும் வகையில் உள்ளது இன்றைய பள்ளிகளின் நடத்தை.
