Thursday, October 31, 2013

சென்னை எக்ஸ்பிரஸ்

1. நான்:  தேவி,என்ன ஆள் எதுவும் மாட்டுச்சா?

தேவி : இல்லக்கா தேடிட்டே இருக்கேன். இது வரைக்கும் மாட்டலை.

நான்: தனியா வந்திருக்க ஆளாப்பாரு அவுங்க தான் கேட்டா ஒத்துக்குவாங்க..

தேவி : ஆமாக்கா அப்படிதான் கேட்டுட்டு இருக்கேன்.

நான்: கேளு, கேளு நானும் யாராவது மாட்டுறாங்களான்னு பாக்குறேன்.....

ஆஹா வேற ரூட்டுல்ல பேச்சு போற மாதிரி இருக்குதேன்னு திடீரென்று ஞானோதயம் வந்து சிரிச்சுட்டே பேச்சுக்கு ஒரு பெரிய புள்ளி வைத்தோம்.

மும்பை போன போது எங்களில் 3 பேர் ஒரு கோச்,4 பேர் இன்னொரு கோச் 2 பேருக்கு இன்னொரு கோச்.அதுவும் பக்கம் பக்கமாய் இடமில்லை. எனவே எங்களுடன் வந்த தேவி தனிதனியே வந்திருந்த ஆண்களாய் பார்த்து சீட் மாறி கொள்ள முடியுமா என்று கேட்டு கொண்டிருந்தார். நான் டிடிஆரை பார்த்து RAC சீட் கேட்க போன போது தான் மேலே உள்ள டயலாக்ஸ்.


2. மும்பையில் கடைக்காரர்கள் 1163 ரூபாய்க்கு பில் வருகிறது என்றால் நம் தமிழ்நாடென்றால் 3 ரூபாய் குறைத்து 1160 அல்லது 1150 ரூபாய் என்று ரவுண்டாக  வாங்கி கொள்வார்கள்.நான் சொல்வது மொத்த கடைகளில். ஆனால் மும்பையில் 3 ரூபாய் கூட குறைக்க மறுத்து விட்டார்கள். என்னுடன் வந்திருந்த ஒருவர் ஒவ்வொரு கடையிலும் அமொளண்ட்டை ரவுண்டாக்குங்க ரவுண்டாக்குங்க என்று தொண தொணவென்று கேட்டு கொண்டே இருந்தார். நான் ஒரு கடைக்காரரிடம் பில்லை வாங்கி பேனாவால் அமெண்ட்டை சுற்றி ஒரு ரவுண்ட் வரைந்து கொடுத்து விட்டேன். அந்த கடைக்காரருக்கு ஒரே சிரிப்பு. அப்புறம் ரவுண்டாக்கி ஒரு தொகை வாங்கி கொண்டார்.

4. காலை வேளையில் மும்பை லோக்கல் ட்ரையினில் லேடிஸ் கோச்சில் பயணித்த போது கவனித்தது. அல்ட்ரா மாடர்ன் ட்ரெஸ்,விரித்த முடி,லிப்ஸ்டிக் என்று இருக்கும் பெண் கூட கையில் சாமி ஸ்லோகம் புக் வைத்து கொண்டு முணுமுணுத்து கொண்டு இருந்தார்கள். மும்பையால் தான் ஹிந்துயிசம் வாழுகிறது என்று நினைத்து கொண்டேன்.

3. சென்னை திரும்பி வரும் போது சைட் பெர்த்தில் ஒரு அம்மா 45 வயதில்,ஒரு பையன் 21 வயதில் அப்புறமா ஒரு 3 மாத குழந்தை. அந்த பையனை பார்த்தா குழந்தைக்கு அப்பா மாதிரி தெரியலை.அந்த அம்மாவை அந்த 21 வயது பையன் மா,மா என்று வேறு அழைத்தான். குழந்தை வேறு ட்ரையின் ஏறியதில் இருந்து ஒரே அழுகை. தலையே வெடித்து விட்டது. அந்த பையனிடம் குழந்தை யாருன்னு கேட்டேன். தங்கை என்றான். ஆஹா அண்ணா தங்கைக்கிடையே இவ்ளோ கேப்பா இது புது மாதிரி இருக்கேன்னு ஙேன்னு நான் முழித்து கொண்டிருந்த போது இந்த பாப்பாவை அடாப்ட் செய்து இருக்கோம்  என்று சொன்னான். அவனின் சொந்த மாமாக்கு மூன்று பெண்களாம். நான்காவதாய் பிறந்த இந்த பெண் குழந்தையினை சென்னை செளகார்பேட்டையில் வளர்க்க ராஜஸ்தானில் இருந்து எடுத்து வருவதாக சொன்னான். அவனும் அவன் தம்பியும் பிடிவாதம் பிடித்து எடுத்து வருவதாக கூறினான். எங்க பிரின்சஸ் என்று அந்த குழந்தையினை ராப்பகலாய் தாங்கி கொண்டிருந்தான் காலேஜ் படிக்கும் அந்த பையன்...
வீட்டிற்கு வர சொல்லி அவுங்க அம்மா ஃபோன் நம்பர் எல்லாம் கொடுத்தாங்க. உடைந்த தமிழில் பேசினார்கள். 21,18 என்று இரண்டு அண்ணாக்கள் அந்த குழந்தைக்கு. குழந்தை நிஜமாவே கொடுத்து வைச்சு இருக்கு.

.

Tuesday, October 29, 2013

மும்பை - சென்னை எக்ஸ்பிரஸ்

மும்பை போகணும்னு முடிவு செய்ததும் சென்னை எக்ஸ்பிரசில் எனக்கும் என் ஃப்ரெண்ட் ஒருவருக்கும் டிக்கெட் ஆன் - லைனில் புக் செய்தாச்சு. மும்பையில் ஃப்ரெண்ட்டின்  சொந்தக்காரர் வீட்டில் 2  நைட் தங்குவதாய் ஏற்பாடு செய்தாச்சு. ட்ரையின் ஏற எக்மோர் போனா என்னுடன் வருவதாய் சொல்லி இருந்த அந்த பெண் தன்னோட  ஃப்ரெண்ட் அவரின் அம்மா,மகன்,இன்னொரு ஃப்ரெண்ட் என்று என்னையும் சேர்த்து பத்து பேர் ட்ரையினில்.இத்தனை பேர் வருவதாய் அவர் என்னிடம் சொல்லவேயில்லை.

இரண்டு பேர் போவதாய் சொல்லி 10 பேரா என்னடா இதுன்னு எனக்கு ஒரே குழப்பம்.  ஆஹா போவது “பிசினஸ் ட்ரிப்” ஆச்சே..இது என்ன டூர் மாதிரி ஒரே கும்பல் என்று எனக்கு மூட் ஆஃப் ஆகி போச்சு. மறுநாள் காலை மும்பாய் போயாச்சு. அங்கே தானேவில் ஒரு அப்பார்ட்மெண்ட் வாடகைக்கு எடுத்தாச்சு. ஆனா எல்லோரும் அந்த வீட்டை விட்டு கிளம்ப மதியமாச்சு. நம்ம பிசினஸ் போச்சுடா என்று எனக்கு என்ன செய்றதுன்னே தெரியலை. அன்னைக்கு ராத்திரி படுக்கும் போது என் மகனிடம் போன் செய்து அவனுடைய ஃப்ரெண்ட் நம்பர் வாங்கி  மறுநாள் காலை என் லக்கேஜுடன் தாதர் வந்து அங்கு ஸ்டேஷன் க்ளோக் ரூமில் என் லக்கேஜை வைத்து விட்டு CST ட்ரையினில் போய் அங்கிருந்து Craw Ford, Mangaldas, Bhuleswar மார்க்கெட் போய் சுத்திவிட்டு வாங்கிய துணிகளை ஒரு கடையில் வைத்து விட்டு இரவு மகனின் ஃப்ரெண்ட் வீட்டிற்கு போய் படுத்து கொண்டேன்.

மறுநாள் காலையில் கிளம்பி சித்தி விநாயகர்,மஹாலக்‌ஷ்மி கோயில் போய் விட்டு தாதரிலிருந்து வெஸ்டர்ன் லைன் ட்ரையினில் பாந்த்ராவில் இறங்கி Linking Road போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு பாந்த்ராவில் ட்ரையின் ஏறி மலாட் போய் Kurthy வாங்கி கொண்டு Malad to Dadar ட்ரையினில் வந்து கையில் இருந்த லக்கேஜ்களை க்ளோக் ரூமில் பூட்டி போட்டு விட்டு செண்ட்ரல் லைன் ட்ரையினில் ஏறி ஃப்ரெண்ட் வீட்டிற்கு நைட் போய் விட்டேன்.

மறுநாள் திங்கள் கிழமை காலையில் கிளம்பி CST நேராக போய் Fashion Street-ல் Jeans Tops வாங்கி முடிக்க மதியம் ஆச்சு முதல் நாள் சுடிதார்களை வைத்து இருந்த மங்கள்தாஸ் மார்க்கெட் போய் பாக்கி பணத்தை செட்டில் செய்து விட்டு பார்சலை எடுத்து கொண்டு டாக்சியில் தாதர் வந்து திரும்ப க்ளோக் ரூமில் பார்சலை வைக்கும் போது இன்சார்ஜ் ஆள் என்னை ஏன் தினமும் இங்கே வருகிறீர்கள் என்று சிரித்து கொண்டே கேட்டார். தூரமாய் தங்கி இருக்கிறேன் அதான், நாளையில் இருந்து நோ மோர் டிஸ்டர்பன்ஸ் என்று சொல்லி விட்டு அப்படியே தாதர் வெஸ்ட் வந்து ரோட்டோர ஷாப்பிங்கில் மூழ்கினேன்.


ஆச்சா, மாலையிலேயே டிஃபன் சாப்பிட்டு விட்டு ரோட்டோர ஷாப்பிங்கினை முடித்து கொண்டு தாதர் ஈஸ்ட் வந்து க்ளோக் ரூமில் வைத்து இருந்த அனைத்து பார்சல்களையும் எடுத்து கொண்டு சென்னை எக்ஸ்பிரசில் ஏறினேன்.

மும்பாய் போகும் முன்பு மும்பாய் பற்றி தெரிந்து கொள்ள நெட்டை நாடிய போது ஷாப்பிங் எங்கேயெல்லாம் இருக்கும் என்று தெரிந்து கொண்டேன். உள்ளூர் இருப்பவர்களுக்கே தெரியாத இடமெல்லாம் எனக்கு தெரிந்து இருந்தது!!!! இதை மகனின் ஃப்ரெண்ட் வீட்டில் சொன்னார்கள். லோக்கல் ட்ரையின் ரூட் எல்லாம் பேப்பரில் எழுதி வைத்து கொண்டேன். அங்கு டாக்சி,ஆட்டோ எல்லம் செம சீப்.ட்ரையினில் காலை 11 முதல் மாலை 3 வரை பயணிப்பதும் ஈசியாக இருந்தது. நான் அங்கு போன நேரம் தசரா என்பதால் மாலை வேளைகளில் தங்கி இருந்த இடத்திற்கு பக்கத்தில் இருந்த கோயில்களில் தாண்டியா பார்த்தேன்.

மக்களிடம் ஒரு ஒழுங்கு இருந்தது. பஸ்ஸில் ஆட்டோவில் எங்கும் ஏறுவதற்கு கியூ.தசராவில் தினம் ஒரு கலர் ட்ரெஸ் என்று பெண்கள் ட்ரையினில் கலக்கினார்கள்.

துணிகள் வாங்க

Fashion Street and Mangaldas Market :   From CST station Taxi for Rs. 25.

Linking Road                                : From Bandra Station Taxi for Rs.25.

Malad West S.V Road                 : From Malad Station by walk in west side here many whole sale markets                                                             for cloths.

Artificial Jewellery வாங்க

Bhuleswar Market                       : CST station taxi for 40 rs..

Dadar Plotform Market               : From Dadar station by walk in western side many shops available for                                                           jewellery and boys toys,dresses,nighties and 3/4th for gents.


Household Articles  பீங்கான் கப்புகள், கிச்சன் சாமான்கள்,மிதியடிகள் வாங்க  

Craw ford market                   :  From CST station Taxi for 25 rs.

Craw Ford market,Mangaldas Market,Bhuleswar Market,Fashion Street இவை நான்கும் CST ஸ்டேஷனில் இருந்து பக்கமாய் இருந்தது.

Linking Road இந்த ரோட் Bandra Staion-க்கு பக்கத்தில் இருந்தது.

Malad மொத்த வியாபார கடைகள் இங்கு தான் அதிகம் இருந்தது.

  வாங்கிய துணிகள்,ஜூவல்லரிகளை இந்த மாதம் SRM University and EA-Mall-ல் நடந்த தீபாவளி உத்சவில்- Stall போட்டேன்.

டீசண்டாக ஒரு தொகையும் கிடைத்தது. ஊரும் சுத்தியாச்சு.பிசியான பிசினஸ் வுமனாகவும் ஆகியாச்சு.பார்க்கலாம் இது செட்டாகுமா என்று.
புதிய அனுபவம்.இன்னும் புதிய புதிய இடங்களை பார்க்கும் ஆவலை தூண்டியது.



Friday, October 25, 2013

எங்க ஸ்டாலுக்கு எல்லோரும் வாங்க...



இந்த மாதம் 3லிருந்து 8 வரை மும்பாய் போயிட்டு வந்து SRM யுனிவர்சிட்டியில் தீபாவளிக்காக Oct 9,10-ல் நடந்த Exibition-ல் ஒரு ஸ்டால் போட்டேன்.ஸ்டாலில் Jeans Tops and Kurti sale செய்தோம். வாடகை கொடுத்தது போக ஒரு தொகை டீசண்டாக கிடைத்தது. பொழுதும் போச்சு. ஆச்சா..

இந்த மாதம் 26,27-ல் எக்ஸ்பிரஸ் அவன்யூவில் ஒரு ஸ்டால் போடுறீங்களான்னு ஒரு ஃப்ரெண்ட் கேட்டதும் ஓக்கே சொல்லிட்டேன். ஸ்டால் நம்பர் 43 புக் செய்துட்டு உடனே 21 மும்பாய் போயிட்டு வேண்டியதை எல்லாம் வாங்கிட்டு இன்னைக்கு சென்னை வந்தாச்சு.

ஸ்டால் நம்பர்: 43
ஸ்டால் பெயர்: Manasa
நாட்கள் : October 26th and 27th
டைம்: 10 AM to 8 Pm
நடக்கும் இடம்: E-Hotel 3rd Floor..Express Avenue Mall,Chennai.

அனைவரும் வருக...உங்கள் ஆதரவை தருக..



Tuesday, October 01, 2013

நான் படிச்சா


நான் 7 ஆப்பு படிச்ச போது தங்கை அதே பள்ளியில் ஐந்தாப்பூ படிச்சுட்டு இருந்தா.அந்த வருடம் தான் அந்த பள்ளியில் புதுசா நாங்க சேர்ந்து இருந்தோம். அங்கு கட்டாயம் மாரல் வகுப்பில் Bible படிக்க வேண்டும்.அதில் டெஸ்ட் வைச்சு மார்க்கையும் ரேங்கிற்கு சேர்ப்பார்கள்.எனவே, ஒரே படிப்ஸ்ஸான என் தங்கை அதையும் வீட்டில் விழுந்து விழுந்து படிப்பாள்.நானோ மற்ற பாடத்தையே படிக்க மாட்டேன். இதில் நல்ல போதனைகளையா படிக்க போகிறேன். இது என்னடா தேவையில்லாமல் இதில் டெஸ்ட் அது இதுன்னு. கிறிஸ்டியன்ஸ் பொண்ணுங்க நம்மை விட ரேங்கில் முந்திடுவாங்களேன்னு ஒரே குழப்பம்ஸ்.இல்லைன்னா மட்டும் முதல் ரேங்க் எடுத்துட்டு தான் மறுவேலை. தங்கை படிச்சதிலிருந்து  அடிக்கடி என்னை சாத்தான் என்று திட்ட ஆரம்பித்து இருந்தாள்.இரண்டு மூன்று கதைகளும் ஸ்கூல் போகும் போது எனக்கு சொன்னாள்.

எனவே,ஒரு நல்ல மாலையில் மார்ல் நோட்டை எடுத்து  படிக்க ஆரம்பித்தேன்.திடீரென்று என்னை புத்தக மூட்டையுடன் பார்த்த என் நைனாவிற்கு செம சந்தோஷம்.ஆஹா மூத்த புள்ளையும் படிக்க ஆரம்பிடுச்சே வாத்தியார் பிள்ளை மக்கில்லை என்ற புதுமொழி வந்துடுச்சேன்னு.

நானும் நைனாவின் முகத்தில் சந்தோஷத்தை பார்த்ததும் சத்தமாக படிக்க ஆரம்பித்தேன். என் நைனா முகம் கொஞ்சமாக மாற துவங்கியது. இரு இரு என்ன படிக்கிறே நீ என்று சொல்லி கொண்டே நோட்டை வாங்கி பார்த்தார். சரி இது படிச்சது போதும் வேறு பாடம் படின்னு சொல்லிட்டே அந்த நோட்டை அவரே வைச்சுக்கிட்டார்.

சில நாட்கள் கழித்து இந்து குழந்தைகள் மாரல் க்ளாசில் நோட்டில் எதுவும் எழுத வேண்டாம்.க்ளாசிலிருந்து வெளியில் போய் உட்கார்ந்து கொள்ளலாம் என்றும் ப்ரேயரில் ஹெட்மிஸ்டர் அறிக்கை வாசித்தார். இனிமேல் அந்த பாடத்தின் மார்க் ரேங்கிற்கு கிடையாது என்றும் சொன்னார்.

என் நைனா அப்போதைய முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் செகரட்டரி. நைனா பள்ளிக்கு வந்தாலே நிறைய ஆசிரியைகள் நைனாவை சுத்தி நின்னுட்டு ஏதோ பேசிட்டே இருப்பார்கள். பள்ளியில் இப்படி Bible படிக்க சொல்லி கட்டாயப்படுத்துவது தவறு என்று கூறவும் பள்ளி கல்வி இயக்குனரிடம் சொன்னால் அது பிரச்சனை உண்டாக்கும் என்பதாலும் பள்ளி உடனடியாக எங்களை படிக்க வேண்டாம்னு சொல்லிடுச்சு. இது அம்மா பிறகு எங்களிடம் கூறினார்கள்.

பாருங்களேன் ஒரு நாள் தான் படிச்சேன். அதான் தினம் மற்ற எந்த பாடத்தையும் படிச்சதே இல்லை.