Thursday, July 18, 2013

டிசைனர் குழந்தை

டெஸ்ட் டியூப் குழந்தைகள் ஒரு தம்பதிக்கு முதல் டெஸ்டிலேயே  கிடைத்து விடுவது இல்லை. சில சமயம் 5 முதல் 6 முறை முயற்சி செய்தே கிடைக்கிறது. உடலும் மனமும் வெறுத்து போய் கைகாசு எல்லாம் கரைந்து போய் விடுகிறது. அதற்கெல்லாம் ஒரு முடிவு வந்துள்ளது.

டெஸ்ட் டியூபில் உண்டாக்கப்படும் கருக்களை Genetic Engineering மூலம் ஆராய்ந்து நல்ல கருவினை மட்டும் பெண்ணின் கருப்பையில் வைக்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. முதல்  குழந்தை இந்த வருடம் மேயில் அமெரிக்காவில் பிறந்து இருக்கிறது.
                                                   
                                                      முதல் டிசைனர் குழந்தை Connor Levy

இது தேவையில்லாத வேலை அது இது என்று புலம்பினாலும் குழந்தை இல்லாத ஏற்கனவே டெஸ்ட் டியூப் செய்தும் குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிக்கு இந்த முறை ஒரு வரப்பிரசாதமே.

80%  டெஸ்ட் டியூப் கருக்கள் பெண்ணின் கருப்பையில் வைத்த பிறகு குழந்தையாக மாறாமல் அழிந்தே விடுகின்றன. எனவே குரோமோசோம் அப்நார்மலாக இருக்கும் கருக்களை Genetic testing மூலம் கண்டறிந்து அதை விட்டு விட்டு நல்ல கருவினை மட்டும் கருப்பையில் வைப்பதால் அது குழந்தையாக வளரும் வாய்ப்பு அதிகம்.

தாயின் 40 வயதிற்கு மேலே பிறக்கும் குழந்தைகள்  Down's SyndromeTurner Syndrome நோய்களுடன் பிறக்க அதிக சான்ஸ் உள்ளது. குழந்தை இல்லாதவர்கள் இந்த வயதில் தான் டெஸ்-டியூப் குழந்தைக்கு ட்ரை செய்கிறார்கள். எனவே, இந்த நோய் இல்லாத குழந்தைகளை இந்த புதிய முறை மூலம் பெற்று கொள்ள முடியும்.

அது மட்டும் இல்லாமல் டெஸ்ட் செய்ய பட்டதில் நல்லதாக உள்ள ஒரே ஒரு  கருவை மட்டும் வைப்பதால்  டெஸ்ட்-டியூப் மூலம் இரண்டு,மூன்று, நான்கு குழந்தைகளை வயதான காலத்தில் பெற்று அவஸ்தை படவும் தேவையில்லை.


டெஸ்ட்-டியூப் முறையை நம்பி வரும் அனைத்து தம்பதிக்கும் குழந்தை கிடைக்க இந்த முறையில் அதிக சான்ஸ் உள்ளது.
எந்த வயதில் உள்ள தம்பதிகளுக்கு இந்த முறை ஏற்றது என்பது அதிக அளவில் இந்த முறையை பயன்படுத்தும் போது தான் தெரிய வருமாம்.

ராமாயணத்தில் ராமர் அவர் சகோதரர்களும் டிசைனர் பேபிகள் தானே. மகாபாரதத்தில் கர்ணன் ஒரு டிசைனர் பேபி தான்.

 நல்ல குண நலத்துடன் இருக்கும் டிசைனர் விந்துக்களை மக்கள் தேடுவார்களா, நல்ல கலர்,நல்ல கண்கள்,நல்ல உயரம் என்று தேடுவார்களா இரண்டும் கலந்து இருந்தாலும் நல்லது தானே.

ஆனால் சில  குறிப்பிட்ட டோனர்களே அதிகம் டொனேட்  செய்யும் நிலையும் வரும்.  ஏற்கனவே அமெரிக்காவில் ஒரு டோனர் 150 குழந்தைகளுக்கு தகப்பன் என்று படித்தது தான் நினைவிற்கு வருகிறது.

விந்து டோனர்கள் ஐ.ஐ.டியில் படிக்கும் மாணவர்களாக வேண்டும் என்று இந்தியாவில் ஏற்கனவே விளம்பரம் வந்துள்ளதாம். எல்லா புது கண்டுபிடிப்பிற்கும் நல்லது கெட்டது என்று இரண்டு பக்கம் இருக்க தானே செய்யும்.

ஒரு Designer Sari எடுக்கவே கடை கடையாக ஏறி இறங்கும் அம்மணிகள் கிடைத்தது சான்ஸ் என்று ஏகத்தும் அலட்டுவார்களே ராமா எல்லோரையும் நீ தான் காப்பாத்தனும்.

Thursday, July 11, 2013

இந்த விதியை எப்படி மதியால் வெல்வது?

கெளசல்யா அம்மாவிற்கு மூன்று மகன்கள் ஒரு மகள்.மூத்தவன் ராமகிருஷ்ணன்,பரத்,ராகவன்.ராகவன் 6 ஆம் வகுப்பு படித்து கொண்டிருந்தான்.மாலை டியூஷன் செல்ல பையை எடுத்து தோளில் மாட்டியவன் முதுகில் ஏதோ கடிக்கிறது வலி என்று சொல்லி கொண்டே பொத்தெனெ கீழே விழவும் பையை எடுத்து உதறினால் அதில் ஒரு கருந்தேள் இருந்ததாம்.முதுகில் தேள் கொட்டியதால் அடுத்த 10 நிமிடத்தில் இறந்து விட்டான்.

அடுத்த 5 வருடங்களில் பரத்திற்கு(2ஆவது மகன்) முகம்,கை காலெல்லாம் வீக்கம் வரவும் டாக்டர் போய் பார்த்தால் பரத்திற்கு கிட்னி ஃபெயிலியர் என்று சொல்லி விட்டார்கள். பரத்தின் அப்பாவே ஒரு கிட்னி கொடுத்து அதன் பிறகு 4 வருடங்கள் உயிருடன் இருந்தான். திடீரென்று ஒரு நாள் அவனும் இறந்து விட்டான்.

மூத்தவன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்காக தன் படிப்பை பாலிடெக்னிக்கோடு நிறுத்தி விட்டு சிங்கப்பூரில் அப்போது கிடைத்த சம்பளத்தில் தன் பெற்றோரையும் தங்கையையும் காப்பாற்றி தன் தங்கைக்கு மிக நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுத்துவிட்டு தன்னை காதலித்த அத்தை பெண்ணை திருமணம் செய்து கொண்டு தன் சொந்த ஊரிலேயே குடித்தனம் ஆரம்பித்தான்.

இப்போ விதி திரும்பவும் தன் கோர முகத்தை காண்பித்தது. திடீரென்று வயிற்றில் தாள முடியாத வலி வரவும் லோக்கலில் டாக்டரிடம் காண்பிக்க அவர் சென்னை ஸ்பெஷலிஸ்ட்டிடம் அனுப்பி வைத்தார். சென்னை வந்து ஒரே வாரம் குடல் கேன்சர் முற்றியதாய் சொல்லி ட்ரீட்மெண்ட்டில் இருந்த போதே தன் 33 ஆவது வயதில் தன் மனைவி,2 வயது பெண் குழந்தையையும் விட்டுட்டு இறந்து விட்டான்.

 ராமகிருஷ்ணன் என் கடைசி மாமாவின்  க்ளோஸ் ஃப்ரெண்ட். எங்கள் வீட்டிற்கு வந்து எங்கள் வீட்டு குழந்தைகளை அப்படி கொஞ்சி போவான். அவனுக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிடிக்கும். நாங்கள் குடும்பத்துடன் போகும் அனைத்து டூர்களுக்கும் எங்களுடன் வருவான். எங்கள் குடும்பத்தில் ஒருத்தனாகவே இருந்தான்.

மூன்று மகன்கள் பெத்து அந்த மூவரும் இப்படி இறந்துவிட யார் தேற்றுவது அந்த பெற்றோரை. அவனின் பெற்றோர் கிராமத்தில் செட்டில் ஆனதாய் கேள்வி பட்டேன். இந்த குடும்பத்தை மீட் செய்து 10 வருடங்கள் ஆயிற்று.ஊருக்கு போகும் போது விசாரித்து கொள்வேன். நேரில் அவர்களையும், அவன் மனைவியையும்(அவள் பெற்றோர் வீட்டில்) போய் பார்க்கும் மன நிலை இல்லை. அவர்கள் மறந்து கொண்டிருக்கும் நினைவுகளை நான் போய் கிளறி விட கூடாது என்பதால் போய் பார்க்க மிக ஆசைப்பட்டாலும் போறதேயில்லை.


இந்த விதியை மதியால் வெல்ல முடியுமா என்ன?????????




Tuesday, July 02, 2013

Faber --- வேஸ்ட் of money

வீடு கட்டும் போது அவசர அவசரமா Built-In-Hob வாங்கி அதை கிச்சன் மேடை போடும் போதே மேடையில் புதைக்க வேண்டுமே என்று ஒரு நாள் கொட்டும் மழையில் தி.நகர் போய் வாங்கி வந்து மேடையில் க்ரானைட்டினை கட் செய்து வைத்தோம். இப்ப அந்த ஸ்டவ்வையே புதைத்து விடலாமா என்று யோசித்து கொண்டு இருக்கேன்.

பார்க்க பார்க்க அழகாய் இருந்துச்சு.இப்ப பார்க்க பார்க்க அழுகையா இருக்கு.

வாரம் ஒரு முறை உளுந்து வடை,பசங்களுக்கு வாரம் இரண்டு முறை பூரி செய்து கொண்டிருந்த நான் இப்ப இது இரண்டையும் செய்யவே மறந்துட்டேன். ஏன்னா எண்ணெய் கொதிக்கவே கொதிக்காது. நான் தான் குதித்து கொண்டு இருப்பேன். இரண்டு பூரி சுட அவ்ளோ நேரம் ஆகும்.தேய்த்து நேரம் ஆவதால் பூரியும் எண்ணெய் குடிச்சுடும்.

சர்வீஸிற்கு வரும் பையன் சும்மா கழட்டி துடைத்து திரும்ப மாற்றி தருவான். அதை இப்ப நானே செய்து கொள்கிறேன்.

வாங்கி இன்னும் இரண்டு வருடம் கூட முடியவில்லை என்பதாலும்,கிரானைட் கட் செய்த இடத்தினை திரும்ப மூடி அந்த இடத்தில் சாதாரண ஸ்டவ் வைக்கணுமே என்றும் இது நாள் வரையில் இந்த Faber-டன் மல்லுக்கட்டி கொண்டு இருக்கேன். மூன்று பர்னரையும் ஒரே நேரத்தில் பயன்படுத்தவே முடியாது. ஒன்னுல செய்தாலே விளங்காது.

சமையல் வேலை முடிக்கவே முன்பை விட ஒரு மணிநேரம் அதிகம் ஆகிறது.

இப்ப தோசை சுட கூட முடியலை.நிலைமை ரொம்ப மோசம் ஆனதால் தூக்கி அவுங்க முகத்தில் எறிந்துட்டு (குப்பை தொட்டி) புதுசா ஒரு கேஸ் ஸ்டவ் வாங்கிவிட முடிவு செய்துட்டேன்.
                                 Faber Gas Hob (Model: GB 30 MT,Black Glass) Price:Rs. 9491


பாருங்க பார்க்க எவ்ளோ அழகா இருக்கு.

ஆனா,அனலே பத்தாது.எதுக்கு தான் இதை வாங்கினேனோ என்று தெரியாமல் ஞேன்னு முழிச்சுட்டு இருக்கேன்.தூக்கி போடு தூக்கி போடு என்று கணவரும் பசங்களும் சொல்லி சொல்லி அலுத்து போனார்கள்.இப்ப தூக்கி போட ஒத்து கொண்டதும் அடுத்து என்ன வாங்குவது என ஒரே குழப்பம்ஸ்.

ஒழுங்கு மரியாதையா இந்தியன் மேட்,சமைக்கிற லட்சணத்திற்கு இரண்டு பர்னர் இருக்கிறதா வாங்கினா போதும் என்று முடிவிற்கு வந்தாச்சு. வந்து படிச்சதுக்கு நல்லதா ஒரு ஸ்டவ் சொல்லிட்டு போங்க.இனிமேயாவது வடை,பூரி சுடணும்.