Friday, May 20, 2011

திஹார் ஆசிரமம்

1958-ல் டில்லியில் இருந்த சின்ன ஜெயில் திஹாருக்கு மாற்றப்பட்டது. திஹார் என்ற கிராமம் டில்லியின் மேற்கு பகுதியில் சாணக்கியபுரியிலிருந்து 7 கி.மீ தொலைவில் இருக்கிறது.அப்பொதைய ஜெயிலில் 1273 பேர் இருக்கலாம். இப்பொழுது 12 ஆயிரம் பேர் இருக்கின்றனர். ஆனால் 6500 கைதிகள் தங்க வைக்கவே போதுமான இடம் உள்ளது.திஹார் ஜெயில் ஆசியாவிலேயே மிக பெரிய ஜெயிலாகும்.மொத்தம் 10 ஜெயில்களை உள்ளடக்கியதே திஹார் ஜெயிலாகும். மிகவும் மாடர்னான ஜெயிலாகும். ஆர்.ஓ சிஸ்டத்தில் குடிக்க சுத்தமான தண்ணீர்,கேபிள் டீவி,உள்,வெளி விளையாட்டு அரங்குகள், மருத்துவ வசதி,கேண்டீன் வசதி,சந்திக்க வருபவர்களை சந்திக்க சுத்தமான ஹால்கள்,மிக நவீன சமையலறை ஆகியவற்றை கொண்டது.
பெண்களுக்கான் ஜெயிலின் நம்பர் 6 ஆகும்.

யோகா,மெடிடேஷன்,கம்ப்யூட்டர்,கைவினை பொருட்கள் பயிற்சி மட்டுமில்லாமல் இந்திராகாந்தி யுனிவர்சிட்டி நடத்தும் கரஸ்பாண்டன்ஸ் கோர்ஸ்களும் உள்ளது.

வாரம் ஒரு நாள் 5 நிமிடங்கள் ஃபோன் பேசி கொள்வதற்கு அனுமதி உண்டு. ஒரு கைதிக்கு இரு நம்பர் மட்டுமே பேச அனுமதி. பேசுவதும் முழுவதும் ரிக்கார்ட் ஆகும்.

தச்சு பட்டறை,நெசவு பட்டறை,தையலகம்,அச்சு பட்டறை,உணவு பதனிடும் தொழில்,பேக்கரி,காலனி தாயரித்தல்,விளையாட்டு உபகரணங்கள் தயாரித்தல் ஓவியம் வரைதல் என்று இந்த ஜெயிலில் நிறைய தொழில்கள் இயங்கி வருகிறது.இங்கு வேலை பார்க்கும் கைதிகளுக்கு அவர்கள் திறமைக்கு ஏற்ப சம்பளம் தின கூலி அடிப்படையில் வழங்க படுகிறது.

தாயாராகும் பொருட்கள் வெளியில் விற்கப்படுகிறது.

ஓவ்வொரு ஜெயிலிலும் பெரிய நூலகம் இயங்கி வருகிறது.மது,போதை அடிமை பட்டவர்களை மீட்க ஒரு செண்டரும் உள்ளது. 150 படிக்கைகளுடன் கூடிய ஒரு பெரிய மருத்துவமனை உள்ளது. பெண் கைதிகளின் குழந்தைகளை பராமரிக்க ஒரு சென்டரும் உள்ளது. இலவச சட்ட ஆலோசனையும் கைதிகளுக்கு உண்டு.

ஜெயில் நம்பர் 1: M - Z இந்த எழுத்துக்களில் தொடங்கும் பெயர் உள்ள கைதிகளுக்கானது.இதில் V&W எழுத்தில் ஆரம்பிக்கும் கைதிகள் மட்டும் துவாரகா ஜெயிலில். இது திஸ் ஹாசாரி கோர்ட்டில் தண்டனை பெற்ற கைதிகளுக்கானது.இதில் R என்று தொடங்கும் கைதிகளும் அடக்கம்.

ஜெயில் நம்பர் 2: A to Z ஆயுட் கைதிகளுக்கானது.

ஜெயில் நம்பர் 3: A to L பேருடைய கைதிகள்.

ஜெயில் நம்பர் 4: பாட்டியாலா கோர்டில் தண்டனை பெற்ற கைதிகள் அனைவரும்.

ஜெயில் நம்பர் 5: 10 வருட தண்டனை பெற்றவர்கள் மட்டும்.

ஜெயில் நம்பர் 6: எல்லா பெண் கைதிகளும்

ஜெயில் நம்பர் 7: 18-30 வயதிற்குட்பட்ட கைதிகளுக்கானது.

ஜெயில் நம்பர் 8 & 9: கார்கர்டோமா,சஹாதாரா கோர்டில் தண்டனை பெற்ற கைதிகளுக்கானது.

கைதிகள் தங்கள் சொந்தக்காரர்கள்,ஃப்ரெண்ட்சை வாரம் ஒரு முறை சந்திக்க முடியும். எடுத்துக்காட்டா, இப்போ 6 ஆம் நம்பர் ஜெயிலில் உள்ள K என்று ஆரம்பிக்கும் எழுத்துடைய ஒரு கைதியினை சந்திக்க வேண்டுமானால் திங்கள் அல்லது வியாழன் ஜெயில் அதிகாரியிடம் முன் அனுமதி பெற்று சந்திக்கலாம்.

ஜெயில் பற்றி முழுதும் படித்து பார்த்தால் ஜெயில் மாதிரி தெரியலை.ஏதோ ஒரு ஆசிரமம் மாதிரி தெரிகிறது. அங்கு போய் வருபவர்கள் நன்கு திருந்த அதிக வாய்ப்பு இருக்கிறது.

கிரண்பேடி இங்கு அதிகாரியாக பணியிலிருந்த போது தான் அதிக மாற்றங்களை கொண்டு வந்தார். திஹார் ஜெயில் என்பது திஹார் ஆசிரமமானதும் அப்போது தான்.

கொள்ளைக்காரர்கள்

என் பெரிய மகன் சொந்த வீடு இல்லை என்று ஒவ்வொரு முறை வீடு மாற்றும் போதும் எப்பம்மா சொந்த வீட்டிற்கு போவோம் என்று புலம்புவான்.ஏனெனில், ஒவ்வொரு முறை வீடு மாற்றும் போதும் அதிகம் வெயிட் தூக்கி கஷ்டப்படுவது அவனே.நான், என் கணவர் எங்கள் திருமணம் வரை அவர் அவர் சொந்த ஊரில் மிக பெரிய சொந்த வீட்டில் இருந்தோம்.உங்கள் ராசி உங்களுக்கு வாடகை வீடு இளமை பருவத்தில் வாய்த்துள்ளது.ஆனால்,நிச்சயம் சீக்கிரம் சொந்த வீட்டிற்கு போய் விடுவோம் என்று சொல்லி சமாதான படுத்துவேன்.அப்பாவினை பார் எவ்வளவு பெரிய வீட்டில் வளர்ந்தவர் இன்று அவரும் தானே வாடகை வீட்டில் இருக்கிறார் என்று சமாதானம் செய்வேன்.வாடகை வீடு கூட இல்லாமல் ப்ளாட்ஃபார்ம்வாசிகளையெல்லாம் பாருங்கள் என்பேன். வீடு மாற்றும் போது தான் புலம்பல்கள்.அப்புறம் அதை மறந்தும் விடுவோம்.

ப்ளாட்ஸ் பிடிக்காது என்பதால் வாங்கவே முற்படவில்லை அதுவுமில்லாமல் ஏகப்பட்ட கமிட்மெண்ட்கள் என் கணவருக்கும். 12 வருடங்கள் முன்பு வாங்கி போட்டிருந்த ஒரு கிரவுண்டில் தற்போது வீடு கட்டலாம் என்று இந்த வருடம் ஜனவரியில் வேலை ஆரம்பித்து இப்பொழுது வீடும் அஸ்திவாரம் போட்டு கொண்டு இருக்கிறோம்.போன மாதம் நான் கட்டிக் கொண்டு இருக்கும் வீட்டிற்கு போகும் போதெல்லாம் மேஸ்த்ரி கவுன்சிலர் மகன் வந்தார்மா.அவரை வந்து சந்திக்க சொன்னார் என்று சொன்னார். அடுத்த முறை வரும் போது ஃபோன் நம்பர் வாங்கி வையுங்கள் என்று கூறி விட்டேன்.நம்பரும் கொடுத்தார்,அவரிடம் பேசினேன் என்ன விபரம் என்று கேட்டேன்.நாங்கள் கல்,மண் சப்ளை செய்கிறோம் எங்களிடம் நீங்கள் வாங்க வேண்டும் என்று அந்த மகர் சொன்னார்.இப்பொழுது எங்களுக்கு தெரிந்த சப்ளையரிடம் கடனுக்கு வாங்கி கொண்டு உள்ளோம்.லோன் இன்னும் வரவில்லை வந்ததும் உங்களிடம் வாங்க முயற்சி செய்கிறேன் என்று கோபத்தினை அடக்கி கொண்டு நல்லவிதமாய் பேசினேன். அந்த புது ஏரியாவில் போய் வசிக்கணுமே ஏன் பகைத்துக் கொள்ள வேண்டும் என்று கோபப்படாத மாதிரி நடித்தேன்.

நேற்று காலை வழக்கம் போல் வீடு கட்டும் இடத்திற்கு போனால் மேஸ்த்திரி இன்றைக்கு காலையிலிருந்து 4 முறை அவர் வந்து போனார்ம்மா.இந்த இடத்து ஓனரை உடனே வந்து என்னை பார்க்க சொல்.இல்லையெனில் மேற்கொண்டு வீடு கட்ட முடியாது என்று மிரட்டி சென்றுள்ளார் அந்த மகர்.இன்று பார்த்துட்டு போய்டுங்கம்மா.இல்லையெனில் வீண்பிரச்சனை என்றார். அட பாவிகளா, என் கணவர் காலை 9 மணியிலிருந்து ராத்திரி 12 மணிவரை கவர்ண்மெண்ட் பணியில் உண்மையாய் உழைத்து சம்பாதித்த காசு (சனி,ஞாயிறு கூட வேலைக்கு போவார்) + 17 வயதிலேயே தகப்பன் இழந்த,வெயில்,மழை என்று பாராமல் உழைத்த என் தம்பியின் காசு சேர்ந்து இந்த இடத்தை வாங்கி பதிவு செய்து, என் மகன்கள் படிப்பு காலேஜ் வரும் வரை + அந்த இடம் கொஞ்சம் டெவலப் ஆக வேண்டும் என்று 12 வருடங்களாய் பொறுமையாய் இருந்து இன்னும் லோன் கிடைக்காத நிலையில் வீடு கட்ட ஆரம்பித்தால் இந்த பிச்சைக்காரனை எதற்கு நான் போய் பார்க்க வேண்டும் என்று அந்த வேகாத உச்சி வெயிலில் கோபம் தான் முதலில் வந்தது.

என் தம்பிக்கு ஃபோன் செய்தால் ஆஃப் செய்து உள்ளது. என் கணவருக்கு ஃபோன் செய்தால் அவர் ஒரு மீட்டிங்கில் இருக்கேன் அப்புறம் கூப்பிடுகிறேன்மா என்கிறார்.

அடுத்த தெருவில் சில வீடுகளை விசாரித்தேன்.அவர் எந்த கட்சி, என்ன பெயர் என்று தெரிந்து கொள்வதற்கு. மிக பெரிய லெவலில் தற்போது தோந்து போன கட்சியினை சேர்ந்தவர்.ஆகா,நல்லா வேண்டும்டா உங்களுக்கு என்று கொஞ்சம் நிம்மதியாச்சு.சரி என்ன செய்வது என்று யோசித்து கொண்டே என் தம்பியின் ஃப்ரெண்டிற்கு ஃபோன் செய்தேன்.அந்த ஏரியாவில் அவருக்கும் நிலம் உள்ளது. அவர் உடனே அக்கா நீங்கள் அங்கேயே இருங்கள் அந்த ஏரியா தலைவரின் தம்பியினை அனுப்புகிறேன் என்றார். 1 மணிநேரத்தில் அந்த தலைவரின் தம்பி வந்தார். விபரம் சொன்னேன். பயப்பட வேண்டாம் இனி யார் வந்து கேட்டாலும் என் பெயரை சொல்லி என்னிடம் பேச சொல்லுங்கள் என்றார்.நான் பார்த்து கொள்கிறேன் என்றார். அவரின் ஃபோன் நம்பரையும் கொடுத்து சென்றார்.நான் வீடு கட்டுவதற்கு இந்த தலைவர்களும்,கவுன்சிலர்களும் எதற்கு? நிஜமாகவே எனக்கு புரியவில்லை.

மேஸ்த்ரி சொல்கிறார் ஏதாவது பணம் எதிர்பார்ப்பார்கள்,இல்லையெனில் தகராறு செய்வார்கள் என்று.

எதற்கு நான் வீடு கட்டுவதற்கு இவர்களுக்கு பணம் தரவேண்டும்.இவர்களிடத்தில் தான் மண்,கல் வாங்க வேண்டும் என்று என்ன கட்டாயம்? நியாயமாக உழைத்த காசில்,யாருக்கும் ஒரு கெடுதலும் செய்யாமல் நாம் பாட்டுக்கு நம் வேலையினை பார்த்தால் எதற்கு இப்படி தேவையில்லாத பிரச்சனை என்று மிகவும் மனசு கஷ்டமாக உள்ளது.

1 லாரியுடன் பிசினஸ் ஆரம்பித்த அந்த மகர் இன்று 3 வருடங்களில் 15 லாரிக்கு உரிமையாளராம். இவர்களையெல்லாம் என்ன செய்வது? பயந்து கொண்டு பணம் கொடுப்பதற்கு என்னிடம் பணமில்லை. இருந்தாலும் எதற்கு கொடுக்க வேண்டும்?

நன்கு படிக்கும் என் மகனிடம் நான் சொன்னது. இப்பொழுது இருக்கும் வேலையினை விட்டு விட்டு IAS படிடா என்று.இது வரை அதை படி, இதை படி என்று அவனை சொன்னதேயில்லை.வெயிலில் அடிக்கடி அலைவதால் எனக்கு என்னமோ ஆகி போச்சு போல என்று ஒரு லுக் விடுகிறான். அவன் என்னை கொடுமை செய்யாதம்மா என்று அலறுகிறான்.ஒரு சொந்த வீடு வேண்டும் என்று கேட்டதற்கு நான் படிக்கணுமா? அம்மா தாயே நாம் வாடகை வீட்டிலேயே இருந்து விடலாம்,வெயிட் தூக்குவதே ஈசி என்கிறான். கலெக்டர் ஆனாலும் இவர்களையெல்லாம் களையெடுக்க முடியுமா தெரியவில்லை. எதாவது செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது.என்ன செய்யறது என்று தெரியாமல் மனம் நிறைய கோபத்துடனும், நிறைய வெறுப்புடனும் என்ன ஆனாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற எண்ணத்துடனும்...வீடு கட்டி முடியும் வரை பிரச்சனை எதுவும் ஆக கூடாது என்று வேண்டுதலுடனும் நான்.


Wednesday, May 18, 2011

இதுவா பள்ளி

ஒவ்வொரு விடுமுறைக்கு முதல் நாள் 10, 12 ஆம் வகுப்பு குழந்தைகளுக்கு ஒரு மீட்டிங் போட்டு விடுமுறையில் அவர்கள் நிம்மதியில்லாமல் இருப்பது மாதிரி ஒரு மிக நீண்ட உரை.வீட்டில் வந்து அந்த பள்ளியின் மீட்டிங்கில் பேசப்பட்டதை பெற்றோர்களிடம் சொல்லும் போதே மாணவிகள் அழுகை.பெண் குழந்தைகளிடம் எவனையாவது இழுத்துட்டு ஓட வேண்டியது தானே, இங்க வந்து ஏன் எங்கள் உயிரை வாங்குகிறீர்கள் என்று கேட்பது. மாணவர்களிடமும் அதே போல அநாகரிமான பேச்சு.

9ஆவது சுமாராக படிக்கும் மாணவர்களிடம்,குறைந்தது 20 மாணவர்களிடம், அவர்களின் பெற்றோரிகளிடம் கையெழுத்து வாங்கி கொண்டு அவர்கள் 10 ஆவது படிக்கும் போது ஜனவரியில் ஸ்கூல் பெயரில் பொது தேர்வு எழுத தடை செய்து தனிதேர்வு எழுத வைக்கும் குள்ள நரி தனம். நல்லா படிக்கலை என்பதால் ஸ்கூல் ரிசல்ட் போகுமாம். அதனால் 10 ஆவது படிக்கும் மாணவர்களின் மனநிலை பாதிப்பதனை போல் திட்டுவது. தண்ணீரில் ஊறவைத்து, எண்ணெய் தடவி எடுத்து வரப்படும் ஒரு பெரிய பிரம்பால் கை, காலில் இரத்தம் வரும் வரை அடி. அடிப்பது பெண் ஆசிரியை. எவனை வேண்டுமானலும் கூட்டி வா என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று அடிப்பட்ட மாணவர்களை மிரட்டுவது.ரேங்க் வாங்காத மாணவர்களினை முழு பள்ளி நேரமும் வகுப்பு அறையில் கீழேயே உட்கார வைத்து இருப்பது.  ஒழுங்கற்ற டாய்லெட் வசதியால் காலை 8 முதல் ராத்திரி 9 வரை தங்கி இருக்கும் மாணவிகள் அனுபவிப்பது அதை விட கொடுமை. மாலை 6லிருந்து 9 வரை ஸ்பெஷல் வகுப்புகள்.ஏராளமான மாணவிகள் யூரினெரி ட்ரபிள் வந்து கஷ்டப்படுகிறார்கள்.

பெற்றோர்கள் ஏன் இதற்கு பொறுத்து போகிறார்கள் என்றால் படிக்கும் தங்கள் குழந்தைகள் அனைவரும் இஞ்சினியர், டாக்டர் ஆக வேண்டும் என்ற பேராசையில் இருக்கிறார்கள். வேறு படிப்பெல்லாம் படிப்பாக மதிப்பது இல்லை. இப்படி கஷ்டப்பட்டாவது மார்க் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு.அந்த பள்ளி நிர்வாகத்தினரோ யாராவது இவர்களை பற்றி புகார் செய்தால் தங்கள் மேலதிகாரிகளுக்கு பணம் தந்து விஷயத்தினை அமுக்குவது.  கொத்தடிமைகள் போல் மாணவர்கள், ஆசிரியர்கள் நடத்த படுகிறார்கள்.

தினம் காலை 8 முதல் ராத்திரி 9 வரை 10, 12 வகுப்பு குழந்தைகள் ஸ்கூலில் இருக்க வேண்டும்.
ஆண் ஆசிரியர்களிடம் பெண்குழந்தைகள் பேசினால் என்ன அவனிடம் வழிசல் என்ற கேள்வி.
எதேனும் ஒரு நேரத்தில் தவிர்க்க முடியாமல் மாணவர்களிடம் மாணவிகள் பேசினால் எப்ப, எங்க ஓட போறீங்க சொல்லிட்டு ஓடுங்க என்று சொல்வது.

இவ்வளவு கொடுமைகள் செய்து இந்த முறை கணக்கில் மட்டும் 25 மாணவர்கள் +2-வில் ஃபெயில் ஆகி இருக்கிறார்கள் அதனால்,அந்த பள்ளியில்.இந்த ஆண்டு +2 படிக்கும் மாணவர்களுக்கு வன்முறை இன்னும் அதிகம் ஆகும்.

தான் பணம் சம்பாதிக்க ஒரு சமுதாயத்தினை கெடுத்துக் கொண்டு இருக்கும் இந்த மாதிரி லூசிடமிருந்து எப்படி தப்பிப்பது?  இப்படி லூஸ், சைக்கோ என்று திட்டுவதை தவிர வேறு எதுவும் செய்ய முடியாமல் பெற்றோர்கள்.எப்ப இந்த ஸ்கூலை விட்டு நாம் ஒழிவோம் என்று இருக்கும் மாணவர்கள்.இது ஒரு பள்ளியில் மட்டும் நடக்கிற விஷயம் இல்லை. நிறைய பள்ளிகளில் நடக்கிறது.கேள்விப்படும் விஷயங்களை கேட்டு கொதித்து மட்டும் போயிருக்கும் கையாலாகாத நான்.

இஞ்சினியர்,டாக்டர் ஆகவில்லை எனினும் இந்த நல்ல உலகத்தில் நன்கு வாழலாம் என்று எப்ப தான் தெரிய போகுதோ இந்த பாழாய் போன பெற்றோருக்கு.



Monday, May 16, 2011

மழலை மொழி

இருங்க கரெக்டா வச்சுக்குறேன்

ம்.ஸ்டார்ட் மியூஜிக்

என்னா லுக்?


பாட்டு போடட்டுமா?


நானா ஏறுவேனே!!

சும்மா திட்டாதீங்க..

ம்ம் அப்படி சிரிங்க

எதிர்கால மியூஜிக் டைரடக்கர்.

ஐய நல்லாவேயில்லை


சரி வரட்டா
     

Tuesday, May 10, 2011

இசக்கி என்ற ரியோ

சில வருடங்களாக வாங்கணும் என்று சொல்லி கொண்டே இருந்த லேப்ரடார் வகை நாயினை இந்த லீவில் என் மகன் ரிஷி வாங்கியே விட்டான். உங்களை வளர்த்தது போதாதா என்று அலுத்துக் கொள்வதால்,லீவில் இருக்கும் போது நான் வளர்த்து விடுகிறேன் என்று அவன் கூறியதால் நான் ஒத்துக் கொண்டேன். பெயர் வைக்க 3 நாட்கள் ஆனது. கடைசியில் ரியோ என்று எல்லோரும் ஒத்துக் கொண்டோம்.. 

ஆனால், என் தம்பி வைத்த பெயர் இசக்கி!!


வீட்டிற்கு வந்த முதல் நாள் ரியோ வீட்டின் ஒவ்வொரு கதவின் பக்கத்தில் கொஞ்ச நேரம் அமர்ந்து என்னவோ நினைத்துக் கொண்டது போல ஓரமாய் போய் விடும்.ஏசி ரூமின் கதவிற்கு வெளியில் போய் நின்ற ரியோ உடனே அங்கேயே படுத்துக் கொண்டது. கதவின் அடியில் வந்த ஜில் காத்து தான் காரணம்.கூடவே என் தம்பியின் மகன்கள் விஷால்,சித்தார்த்தும் படுத்து கொண்டபோது க்ளிக்கியது.


Wednesday, May 04, 2011

"வானம்" @ சிட்லபாக்கம்

எங்கள் ஏரியா பக்கத்தில் இருக்கும் சிட்லபாக்கம் என்னும் இடத்தில் வரதராஜா என்று ஒரு தியேட்டர் உண்டு.என்ன படம் போடுகிறார்கள், யார் பார்க்கிறார்கள் என்று அந்த தியேட்டரை கடக்கும் போதெல்லாம் நிமிர்ந்து பார்க்காமல் அவசரமாய் கடந்து விடுவேன். யாரோ ஒரு புண்ணியவான் கொடுத்த ஐடியாவால் + பணத்தால் இன்று அந்த தியேட்டர் ஜொலிக்கிறது. அட்டகாசமான சிட்டி தியேட்டர் மாதிரி மாற்றி விட்டார்கள். டிக்கெட் 100 ரூபாய்.ஞாயிறன்று அந்த தியேட்டரில் நாங்கள் 10 பேர் வானம் பார்த்து வந்தோம்.தியேட்டர் ஃபுல்லாகி இருந்தது. 80-களில் படம் பார்த்த மாதிரி ஒரு ஃபீலிங்.முன் வரிசையில் இருந்த கொஞ்சம் பசங்க சிம்புவை பார்க்கும் போதெல்லாம் செம சவுண்ட் விட்டு கொண்டு இருந்தனர். கொஞ்ச நேரத்தில் சத்தமே இல்லை. கதை என்று ஒன்று இருந்தால் மக்கள் அமைதியாகி விடுகின்றனர்.

பரத்,அனுஷ்கா,சரண்யா,பிரகாஷ்ராஜ்,சிம்பு-சந்தானம் என்று ஐந்து பேர்களை பற்றிய கதை.ஐவரையும் கடைசி காட்சியில் ஒன்றாக மீட் செய்ய வைத்து கதை முடிக்க பட்டுள்ளது. விமர்சனம் எதுவும் படிக்காமல் போனதால் கோ படம் மாதிரி இந்த படமும் எங்களுக்கு பிடித்து இருந்தது.

குட் சிம்பு. இந்த மாதிரி கதையில் நடித்தமைக்கு. சந்தானம் வரும் சீன்களில் மனம் விட்டு சிரிக்க முடிகிறது. பரத் ஸ்டைலிஷாக வருகிறார்.பசங்க படத்தில் வரும் பெண்ணும் அப்படியே.மற்ற அனைவரும் நன்றாக நடித்து உள்ளனர். எவண்டி உன்னை பெத்தான் பாட்டை அனுஷ்காவை பார்த்து சிம்பு பாடுவதாய் அமைத்து வேறு விதமாய் எடுத்து இருக்கலாம்.சிம்பு லவ் செய்யும் அந்த பெண்ணிற்கு இந்த பாட்டு வேஸ்ட்.

தெய்வம் வாழ்வது எங்கே, தவறுகளை உணரும் மனிதம் நெஞ்சில்---- யுவன் பாடல் அற்புதம்.அப்பாடல் படத்தில் வரும் சீன்களில் அப்படியே பொருந்துகிறது. படம் எப்படி இருக்குமோ என்று பயந்து கொண்டே படத்திற்கு போனோம்.எங்களுக்கு இனிமையான ஷாக்.எல்லோரும் பார்க்கலாம்.வீட்டிற்கு பக்கத்தில் ஒரு அருமையான தியேட்டர் கிடைத்ததும் சந்தோஷமாய் இருக்கிறது.